Search This Blog

December 31, 2008

2008-திரும்பிப்பார்க்கிறேன்...

இன்னுமொரு 365 நாட்கள் வாழ்க்கைப்பாதையில் கடந்திருக்கிறோம்.2008 ஆரம்பித்தபோது,உலகப்பொருளாதாரமும்,வாழ்க்கை தரமும் வளர்ச்சிப்பாதையில் வீறுநடைப்போட்டுக் கொண்டிருந்தது. ஆகையால் பெரும்பாலான மக்கள் நம்பிக்கையுடனே 2008'ஐ வரவேற்றார்கள். ஆனால் சென்னையில் ஒரு ஓட்டலில் நடந்த விபத்து,புத்தாண்டை உயிர்பலியோடே தொடங்கியது.அடுத்த அடி,ரிலையன்ஸ் IPO வடிவில் இந்தியப் பங்குச்சந்தையை அகலப்பாதாளத்துக்கு தள்ளும் ஆரம்பக்கட்டத்தை ரிப்பன் வெட்டித்திறந்து வைத்தது. அன்று ஆரம்பித்த அடி இன்றுவரை உலக அளவில் பெரும் பொருளாதார சிக்கல்களை இடியாப்பச்ச்சிக்கலாக்கி,யாராலும் எப்போது சிக்கல் தீரும் என்று ஜோசியம் சொல்லமுடியாத அளவுக்கு தலையைப் பிய்த்துக்கொண்டு அலைய வைத்துள்ளது. ஒபாமா'வை அமெரிக்காவை ரட்சிக்கவந்துள்ள பரமப்பிதாவாக ஒளிவட்டத்தில் வைத்துள்ளது. 2009தான்,அவர் ஒபாமாவா? ஒசாமாவா? என்பதை தெளிவுப்படுத்தும்.

இந்தியாவில்,முன்பே சொன்னதுபோல்,பங்குச்சந்தையில் ஆரம்பித்த அடி,மத்தியதர மக்களைப் பெருமளவில் பாதித்தது. பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட் பற்றி அ'னா,ஆ'வன்னா கூடத் தெரியாத பெரும்பாலானவர்கள்,உடனடி லாபம் என்ற பேராசைக்கு ஆட்பட்டு,2007-2008'ல் பெருமளவு சேமிப்பை பங்குச்சந்தை,மியூச்சுவல் பண்ட்,நிலம் என எல்லாவற்றிலும் முடக்கினார்கள்.கடந்த சில மாதங்களாக வீசிய பொருளாதார வீழ்ச்சி சுனாமியில் சிக்கி அவர்கள் அனைவரும் இன்று முடங்கிப்போய் இருக்கிறார்கள்.

போதாதக்குறைக்கு, இந்தியாவில் தீவிரவாதமும் 2008'ல் தலைவிரித்து ஆடியது.2 மாதங்களுக்கு ஒருமுறை பல நகரங்களில் குண்டுவெடிப்பு என ஆரம்பித்து,அண்மையில் மும்பை சம்பவம் வரை பல உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. வழக்கம்போல,அமெரிக்க நாட்டாமையின் விரலசைவுக்கு ஆடும் பொம்மைகளாக முதுகெலும்பற்ற இந்திய,பாகிஸ்தான் அரசுகள் போர் பூச்சாண்டிக் காட்டி ஆடிக்கொண்டிருக்கிறது. அணு ஒப்பந்தம் நிறைவேற்றுவதில் காட்டிய உறுதியில்,ஒருஅணுக்கூட தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் காட்டவில்லை.

தமிழகத்தை எடுத்துக்கொண்டால்,குடும்பப்பிரச்சனைகள்,சேனல் போட்டிகள்,கூட்டணி குஸ்திகள் என தமிழக அரசு படு பிஸியாக இருந்தது. ஆற்க்காட்டார் புண்ணியத்தில், தமிழகக்குடும்பங்களுக்கு கரண்ட் பில் குறைந்ததால்,கணிசமான அளவில் பணத்தை சேமிக்க முடிந்தது. சேமித்தப்பணத்தை ஒரு ரூபாய் அரிசி வாங்கி,குடும்பத்துடன் அமர்ந்து நிலாச்சோறுண்டு 'கற்க்கால' ஆட்சியின் மகிமையை 'மானாட மயிலாட' இலவச தொலைக்காட்சிப்பெட்டி மூலமாக அனுபவித்தது.எதிரிக்கட்சி தலைவர் 'மலைஏறி' அங்கிருந்து நாளொரு போராட்டமும்,பொழுதொரு அறிக்கையுமாக ரிமோட் அரசியல் நடத்தினார். அதற்கும் சளைக்காமல் தமிழக முதல்வரும் பதில் அறிக்கையும், சாதனைப்பட்டியலையும் பக்கம்பக்கமாக தயாரித்து நியுஸ் சேனல்களுக்கும், பத்திரிக்கைகளுக்கும் சரியான தீனியளித்தார்கள்.அறிக்கைகள் தயாரிக்க செலவிட்ட நேரம் தவிர, கிடைத்த சொற்ப நேரத்தில் திரைப்படங்கள் பார்ப்பதிலும், விழாக்களில் குத்து ஆட்டங்களைக் கண்டுகளிப்பதிலும், திரைக்கதை வசனம் எழுதி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஏதாவதொரு நிவாரண நிதியளித்தும் மக்களுக்கு இந்த தள்ளாத வயதிலும் தொண்டாற்றினார்.

மக்கள் தொடர்பு சாதனங்களான சேனல்களும்,பத்திரிக்கைகளும் தங்கள் வானளாவிய சுதந்திரத்தை பயன்படுத்தி 24 மணி நேரமும் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் நிகழ்ந்த விஷயங்களை சுடச்சுட மக்களுக்கு வழங்கி மக்களின் அறிவுப்பசியைப் போக்கினார்கள். தமிழக வாரப்பத்திரிக்கைகள் மாதம் இருமுறை ரஜினியை அட்டைப்படத்தில் போட்டு கவர்ஸ்டோரிகளாக எழுதித்தள்ளினார்கள்.அவர்கள் சொன்னக்கதைகளின்படி,2008'ல் மட்டும் குறைந்தப்பட்சம் 100 முறையாவது ரஜினி புதுக்கட்சி ஆரம்பிக்க நாள் குறித்தார். ஆளும்கட்சியின் குடும்பகுஸ்தியும் வாராவாரம் செய்திசுரங்கத்தை பத்திரிக்கைகளுக்கு வாரிவழங்கியது. ஆன்டி க்ளைமாஸாக 'குருப்பெயர்ச்சி'க்குமுன் திராவிடப்பாரம்பரியத்தில் ஊறித்திளைத்தக்குடும்பம் பாசக்கிளிகளாய் ஒன்று சேர்ந்து போஸ் கொடுத்து, 2009'ல் அனைத்து வாரப்பத்திரிக்கைகளுக்கும் 'செய்திப்பஞ்சத்தை' ஏற்ப்படுத்திவிட்டனர். இவைகள் போதாதென்று மாதத்திற்கு ஒருமுறை IT துறையினர் தமிழகக் கலாசாரத்தையே கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிட்டார்களென,'டேட்டியோ' போன்ற உன்னத கலாச்சாரம் பற்றிய செய்திகளைச் சுடச்சுட வாரிவழங்கி பத்திரிக்கைகளின் 'கலாச்சாரக் காவலன்' என்ற வேடத்தை திறம்பட செய்தனர்.

விளையாட்டுத்துறைக்கு 2008 நல்ல ஆண்டாகவே அமைந்தது. செஸ்'சில் கிங்'கென விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும் ஒருமுறை நிரூபித்தார். கிரிக்கெட்'டில் தோனிக்கு லட்சுமி(ராய்)கடாட்சம்.அவர் தொட்டதெல்லாம் பொன்னானது. குறிப்பிடத்தக்க பெரும்வெற்றிகளைப் பெற்று ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முடிவுரை எழுதப்பட்டது.

விண்வெளி விஞ்ஞானத்தில் ஒரு பெரும் சாதனையாக 'சந்திராயன்' விண்ணில் ஏவப்பட்டு இந்தியாவின் மூளைப்பலத்தை உலகத்துக்கு உணர்த்தியது.

திரைத்துறையில் 2008'ல் வெளிவந்த 90% மேற்ப்பட்டப்படங்கள் தோல்வியைத்தழுவி, தயாரிப்புக்களத்தில் குதித்த கார்ப்பரேட் நிறுவனங்களை தள்ளாட்டத்தில் தள்ளிவிட்டது. நம்பிக்கைக்கீற்றாக 'சுப்ரமணியபுரம்,பூ' போன்ற படங்கள் வெளிவந்தன.

ஒட்டுமொத்தமாகப் பார்ந்தால் 2008,நம்பிக்கையுடன் ஆரம்பித்து, அனைத்துவகைகளிலும் படுபாதாளத்திற்கு தள்ளிவிட்டது. இன்றைய சூழ்நிலை, பொருளாதார சிக்கலிலும், ஸ்திரமற்ற வலுவில்லாத அரசையும், அரசியல் தலைவர்களையும் வைத்துக்கொண்டு, தீவிரவாதம், வன்முறை, பேராசை,சுயநலம்,லஞ்சம், அட்டூழியம், அதிகாரப்போதை போன்றவற்றை அதிகப்படுத்தி,2009'ஐ ஒரு நிச்சயமற்ற, இருண்ட ஆண்டாக எதிர்க்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் அனைவரையும் வைத்துள்ளது.

இன்றைய நிலையில் நம் அனைவருக்கும் தேவையானது, சுயப்பரிசோதனை. இந்த நிச்சயமற்ற சூழ்நிலைக்கு நாம் ஒவ்வொருவரும் முக்கியமான காரணம். சூழ்நிலையை ஆராய்ந்து, ஒருமுகப்பட்ட சிந்தனையுடனும், உறுதியுடனும்,பொதுநல நோக்குடன் அனைவரும் இணைந்து செயலாற்றினால்,சோதனைகள் நிறைந்த 2009,சாதனைகள் நிகழ்த்தும் சாகசக்களமாய் பரிமளிக்கவைக்கலாம்,என்ற நம்பிக்கையுடன் 2009'ஐ எதிர்க்கொள்வோம்.

அனைவருக்கும் 2009 நன்நம்பிக்கைமுனையாக,சாதனைகள் பல நிகழ்த்தும் ஆண்டாக அமைய வாழ்த்து(க்)கள்.

December 8, 2008

வாரணம் ஆயிரம் - லேட்டஸ்ட் விமர்சனம்

சூர்யா,சிம்ரன்,ரம்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா, சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி,சூர்யா,
சூர்யா,சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி,சூர்யா,
சூர்யா, சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி,சூர்யா,
சமீராரெட்டி, சூர்யா,சிம்ரன், சூர்யா,சமீராரெட்டி,
சூர்யா, சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி, சூர்யா,
சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி, சூர்யா, சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி,சூர்யா,சமீராரெட்டி,
சூர்யா,சமீராரெட்டி, சூர்யா,சமீராரெட்டி

இடைவேளை....

சூர்யா,சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா,
சூர்யா, சிம்ரன்,சூர்யா,சூர்யா, சூர்யா,
சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,
சூர்யா,சிம்ரன்,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,
சூர்யா,சூர்யா,ரம்யா, சூர்யா,சிம்ரன்,
சூர்யா,சூர்யா,ரம்யா,சூர்யா,சூர்யா, சூர்யா,சூர்யா,
ரம்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,ரம்யா, சூர்யா,
சூர்யா, சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,சூர்யா,
சூர்யா, சூர்யா, சூர்யா,ரம்யா, சிம்ரன்,சூர்யா,ரம்யா,
சிம்ரன், சூர்யா,சூர்யா

முடிவு...வணக்கம்.

படம் பார்த்தவர்கள்

காந்தி:உனது பிறந்தநாள் இன்று....

காந்தி(அ)அரவிந்தன்...

இன்று உனது பிறந்தநாள். வழக்கம்போல அலைப்பேசியில் அழைத்து வாழ்த்துக்கள் சொல்லத்தான் நினைத்தேன்.ஆனால் மனதில் நினைப்பதை எல்லாம் வாய் வார்த்தைகளால் சொல்லிவிட முடிவதில்லை. மேலும் அலைப்பேசியில் பேசுவதென்பது உனக்கு வேப்பங்காய்,அதனால்தான் இந்தக்கடிதம்.

எப்போது ஆரம்பித்தது நம் நட்பு ???

14 வருடங்களுக்கு முன்பு, பொறியியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டின் ஐந்தாவது செமஸ்டர். சுதாவும்,செல்வாவும் நீ எலக்ட்ரானிக்ஸ் லேபில் இருப்பதாகவும்,உன்னை அழைத்துக்கொண்டு ரூமிற்கு செல்லலாம் என முடிவு செய்து உனக்காக லேப் வாசலில் காத்திருந்தோம்.சிறிது நேரக் காத்திருப்புக்குப்பின், ஒரு ஒல்லியான உருவம்,முகத்தைவிட பெரிய(???)கண்ணாடியை மாட்டிக்கொண்டு, பெருத்த சிந்தனையுடன் ஒரு 'விஞ்ஞானி'க்குரிய (அசட்டுக்)'களை'யோடு வெளியே வந்தது. இதுதான் அரவிந்தன்,எங்க ஊர்க்காரன்..என செல்வா அறிமுகப்படுத்தி வைத்தான்.அன்று நாம் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை.அடுத்ததாக ராம்குமாரின் பிறந்தநாள் பார்ட்டியில்(அமைதியான ஓடையாய் ஓடிக்கொண்டிருக்கும் உன் இன்றையக் குடும்ப வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அன்று என்ன நடந்தது என்று விவரமாக எழுதாமல் விடுகிறேன்) உன்னுடைய முகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன்.

ஹாஸ்டலைவிட்டு நீயும் வெளியில் ரூம் எடுத்து தங்க ஆரம்பித்தப்பின், அடிக்கடி சந்திக்க ஆரம்பித்தோம். அந்த சந்தர்ப்பத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. நம் நண்பர்கள் அனைவரும் மேல்மாடியில் உள்ள அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மாலை மங்கும் நேரம்.இருள் மெதுவாக கவியத்தொடங்கியது. அறையில் எரிந்துக்கொண்டிருந்த விளக்கு கரண்ட் கட்'டால் அணைந்துவிட்டது.உடனே,நீ எழுந்து,கீழேப்போய் மெழுகுவர்த்தி ஏற்றி வருவதாய் சொல்லிச்சென்றாய்...நீ இறங்கிச் சென்ற சில நிமிடங்களில் கரண்ட் வந்துவிட்டது.ஆனால் உன்னைக்காணவில்லை. நீ என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் எனப்பார்க்க செல்வா கீழே வந்தான். நீயோ தீவிரமாக மெழுகுவர்த்தி தேடிக்கொண்டிருந்தாய்.நீ அறியாமல்,செல்வா அந்த அறையின் விளக்கை போட்டுவிட்டு ஒளிந்துக்கொண்டான். நீயும் மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து,அதை கொளுத்திக்கொண்டு,அந்த அறையின் மின்விளக்கை அணைத்துவிட்டு, மேல்மாடிக்கு வரும்வழியில்,இருட்டாக இருந்ததால்,அதற்கான மின்விளக்கையும் போட்டுவிட்டு, மெழுகுவர்த்தி காற்றில் அணையாமலிருக்க கையால் மூடிக்கொண்டு மாடியில் உள்ள அறைக்கு வந்து மெழுகுவர்த்தியை வைத்தாய்.நாங்கள் அனைவரும் உன்னுடைய கடமை உணர்ச்சியையும்,எடுத்தக்காரியத்தில் எவ்வித இடர்வந்தாலும், காரியத்தில் கண்ணாக,சுற்றி என்ன நடந்தாலும் கவலைப்படாமல் எடுத்தவேலையை முடிக்கும் ஒரு வல்லவனாகத்தான் உன்னைக் கருதினோம். ஆனால் அதன்பிறகுதான் கவனித்தோம்...நீ கண்ணாடிப் போட்டுக்கொள்ள மறந்துப்போனதை...

ஹாஸ்டலில் இருந்தவரை கடமை,கண்ணியம் கட்டுப்பாடு என சீரிய வாழ்க்கை வாழ்ந்து,ஆஸ்டல் மக்கள் அனைவராலும் "காந்தி' என அழைக்கப்பட்ட நீ....ஆஸ்டலைவிட்டு, வெளியே ரூம் எடுத்து தங்க ஆரம்பித்த சிறிது காலத்திலேயே.....மடமை, தண்ணி'யம், (காசுக்கு)தட்டுப்பாடு என மாறிப்போய் ஒரு பேப்பரில் அரியர்ஸ் வைக்கும் அளவுக்கு போனதற்கு என்னக் காரணம் என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.

கல்லூரி நாட்களுக்குப்பிறகு,நம் கல்லூரியிலேயே சில மாதங்கள் நாம் வேலைப்பார்த்த,அந்த சமயத்தில்தான் உன்னுடைய இன்னொரு முகம் (ரொமான்டிக் லுக்????) வெளிப்பட்டது. மைக்ரோப்ராசசர் லேபில் '...மா'வுக்காவே நீ போவதும், மச்சான்... எவ்...வ்...வ்வ்....ளோ சாப்ப்ப்ப்ப்ப்ப்'டா இருக்கா என உருகியதும், அவளுக்கு(மட்டும்) ப்ராக்டிக்கலில் மார்க் அள்ளிவழங்கியதும், நாம் மதியம் சாப்பிடும் மெஸ் ஓனரின் பெண்,உன்னை மயக்க செய்த லீலைகளும்,அதில் நீ விழாமல் சுதா எடுத்த அதிரடி நடவடிக்கைகளும் என நாட்கள் உருண்டோடியது.

அதற்குப்பிறகு பேங்களூர் வந்து நீ,நான்,அருண் மூவரும் வேலைத்தேட ஆரம்பித்த மூன்றாம் மாதத்தில் ஒவ்வொருவராக வேலைக்கிடைத்தப்பின், ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வாழ்ந்த அந்த 4 வருடங்கள் எவ்விதக் கவலையும் இன்றி,வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டோம் என்ற தன்னம்பிக்கையில் இறுமாந்து இருந்த அந்த நாட்கள்,நம் அனைவருக்கும் வசந்தக்காலம்.அந்த வசந்தக்காலத்தில்தான், நம்மிடையேயான நட்பு மேலும் வளர்ந்து மணம்வீச ஆரம்பித்தது.

ஒரு மழைநாளிரவில், உன் அலுவலகத்திலிருந்து,வீடுவரை ஏறக்குறைய 6-7 கிமீ தூரத்திற்கு உன்னையும்,உன் இருசக்கரவாகனத்தையும் அப்துல் சமது தள்ளிக்கொண்டு வந்ததும்,அதனால் அவனுக்கு ஏற்பட்ட ரத்தக் கொதிப்புக்கு அவன் இன்றுவரை மாத்திரை சாப்பிட்டு வருவதும்,

ஓரிரவு,சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, உனக்கும், செல்வாவிற்கும் ஏற்ப்பட்ட சண்டையில் நீ கோபப்பட்டு எடுத்து எறிந்த சாம்பார் பாக்கெட்,செல்வா முகத்தில் படாமல் சுவற்றில் பட்டு தெறித்ததில் அரண்டுப்போன செல்வா,இன்றுவரை,சாம்பார் என்றாலே அலறிஅடித்துக்கொண்டு ஓடுவதும்,

காலையில் நாங்களெல்லாம் அலுவலகத்திற்கு கிளம்பிப் போனப்பின்பு, நீ தூங்கி எழுந்து பாத்ரூமில் நுழையும்போது,அதற்க்காகவே காத்திருந்து உன்னைத் தள்ளிவிட்டுவிட்டு சுதா பாத்ரூமிற்கு செல்வதும்,வாய்க்கூடக் கழுவாமல்,மணக்க..மணக்க 'சுத்தச் செந்தமிழில்' அவனுக்கு நீ அர்ச்சனைச் செய்ததும்....

குளிக்க பாத்ரூம் சென்று,என்ன தலைப்போகிற வேலை என்றாலும், குறைந்தப்பட்சம் ஒரு மணி நேரத்திற்கு குளிப்பதும்...அப்படிக் குளித்துக்கொண்டிருக்கும்போது...திடீரென...'.............ஷூஊஊஊஊ' என நீ ஊளையிடுவதும்...

சந்திரமுகி படம் பார்க்கலாமென முடிவு செய்து,உன் குடும்பத்தினர்,நம் நண்பர்களென அனைவரும் PVR'க்கு வந்ததும், நீயும் உங்கள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் ரஜினி படம் முதல் வாரத்திலேயே பார்க்கப்போவதாக பெரிய பில்டப் கொடுத்துவிட்டு, அலுவலகத்திலிருந்து நேராக PVR வந்து, நேரடியாக மூன்றாம் மாடியில் உள்ள திரையரங்குக்கு வராமல், Forum' மாலின்,வெளிவாயிலிலேயே நீ 'தேவுடு' காத்துக்கொண்டு இருப்பது தெரியாமல், நாங்களெல்லாம் உனக்கு காத்திருந்து வெறுத்துப்போய், 'தேவுடா...தேவுடா...ஏழுமலை தேவுடா....' பாடல் ஆரம்பித்தவுடன் உள்ளே சென்று படத்தில் ஆழ்ந்துவிட்டதும், அதற்குப்பிறகு 1 மணி நேரம் கழித்து,உன் ஏழாவது அறிவு(????) வேலைச்செய்து,மேலே வந்து அரைக்குறையாக படம் பார்த்ததும்.....

எத்தனை எத்தனை நிகழ்வுகள் நாம் நண்பர்களாக சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தப்பின் !!!...சென்ற பயணங்கள், ரசித்தக் காட்சிகள்,சிரித்த சிரிப்புகள்,விவாதித்த விஷயங்கள், சிந்திய கண்ணீர் துளிகள், எடுத்த சபதங்கள், சந்தித்த தோல்விகள், பெற்ற வெற்றிகள், கிடைத்த சொந்தங்கள்,குழந்தைச் செல்வங்கள்,பார்த்த சினிமாக்கள்,சென்ற சுற்றுலாக்கள்...முடிவேயில்லை இதற்கு....

நம் 14 ஆண்டுக்கால நட்பில் உன்னுடைய பல முகங்களைப் பார்த்துவிட்டேன்.ஆனால் நீ அடிக்கடி இன்னும் ஒரு முகத்தைக் காட்டுவதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாய்....அதை எப்போதுதான் காண்பிப்பதாக உத்தேசம்... அட்லீஸ்ட்...அடுத்த பிறந்தநாளுக்குள் அந்த முகத்தைப் பார்த்துவிட்டால், அடுத்தவருடப் பதிவில் எழுத வசதியாக இருக்கும்.

உன்னிடம் எனக்குப் பிடித்ததே, ஏடாகூடமாக ஏதாவது செய்துவிட்டு, மாட்டிக்கொண்டவுடன் ஒரு அசட்டு(க்களையுடன்)சிரிப்பு சிரிப்பாயே..அந்த சிரிப்புதான்... இன்றையநாள்வரை உன்னை ஏதாவதொரு வம்பில் மாட்டிவிட்டு உன்னுடைய செய்கைகளை ரசிப்பதற்கான காரணம்.

நம் நீண்ட நட்புப்பயணத்தில், உன்னிடம் பார்த்து வியந்த பலவிஷயங்களில் என்னால் மறக்கமுடியாதது...உன்னுடைய நியாபகசக்தியும்,காலம் தவறாமையும்,எதையும் ப்ளான் செய்து,அதில் சிறிதும் பிசகாமல் அப்படியே நிறைவேற்றும் திறமையும்...சத்தியமாக சொல்கிறேன்...நம் நண்பர்களில் உன்னைத் தவிர வேறு யாருக்கும் இது சாத்தியமாகாது..


நம் மனப்பதிவுகளில் உள்ள எல்லாவற்றையும் எழுத இந்த ஒருப்பதிவு போதாது...ஆகவே...இந்த இனிய நாளில் எல்லா வளங்களையும் பெற்று,சிறந்த உடல்நலத்துடன்,சீரும் சிறப்புமாக பலப்பல ஆண்டுகள் வாழ என்
வாழ்த்து(க்)கள்

டிஸ்கி : இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள்,சுவாரசியத்திற்க்காக கூட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆகவே யாரும் அரவிந்தனை குறைத்து எடைப்போட வேண்டாம்....உண்மையில் அரவிந்தன் ஒரு அப்பாவி (அடப்பாவி...........இதெல்லாம் ரொம்ப ஓவரு)

November 17, 2008

இதுதான்டா வாழ்க்கை.......

வாழ்க்கை என்பதை காற்றில் ஐந்து பந்துகளைத் தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டாக கருதிக்கொள்வோம்.ஒவ்வொருப் பந்துக்கும் ஒரு பெயரும் வைப்போம்.







முதல் பந்து : வேலை


இரண்டாம் பந்து : குடும்பம்


மூன்றாம் பந்து : உடல்நலம்


நான்காம் பந்து : நண்பர்கள்


ஐந்தாம் பந்து : உத்வேகம்/தன்னம்பிக்கை



இப்போது அனைத்துப் பந்துகளும் காற்றில் உள்ளது. வாழ்க்கை எனும் விளையாட்டை விளையாடும்போது முதல் பந்தான வேலை என்பது ரப்பர் பந்து போன்றது.தவறவிட்டாலும், மீண்டும் கைக்கு வந்துவிடும் எந்தவித சேதாரமும் இன்றி.



ஆனால் இதரப் பந்துகளான குடும்பம்,உடல்நலம், நண்பர்கள்,உத்வேகம் போன்றவை கண்ணாடி பந்துகள் போன்றது.ஒரே ஒருதடவை ஏதாவது ஒரு பந்தைத் தவறவிட்டாலும் அது அடிப்பட்டுவிடும்.மீண்டும் பழைய நிலையை அடையவே முடியாது.



ஆகவே இதனால் அறியப்படும் நீதி யாதெனில்.....

மீண்டும் முதல் வரியிலிருந்து படிக்கவும்.....

---- எங்கேயோ படித்தது....

October 14, 2008

ரஜினியின் அரசியல் விளையாட்டும், சச்சினின் விளையாட்டு அரசியலும்...

நேற்றைய நாள் இருபெரும் ரசிகக்கூட்டத்திற்கு கடந்தசில நாட்களாக(மாதங்களாக, வருடங்களாக) விடை தெரியாமல் இருந்த கேள்விக்கு விடைக்கிடைப்பதுபோல் தெரிய ஆரம்பித்து,கடைசியில் வழக்கம்போல் எதிர்ப்பார்த்த (ரசிகர்கள் விரும்பிய) முடிவு தெரியாமல் ஒரு கமா'வோடு தொடர்கிறது.

குசேலன் தோற்றதிலிருந்து நிகழ்ந்த ஏகப்பட்ட விஷயங்கள்,நெருக்கடிகள், பத்திரிக்கைகளின் வழக்கமான பரபரப்புக் கட்டுரைகள் ரஜினியை வழக்கம்போல 'ஒளி' வட்டத்துக்குள் கொண்டுவந்தது. ஏறக்குறைய ஒரு 'அக்டோபர்' புரட்சியே நடக்கும் என்றவிதத்தில் ஒரு பெரும்புரளி மீடியாக்களால் கிளப்பிவிடப்பட்டது. அதையெல்லாம் (வழக்கம்போல்)நம்பிய ரசிகர்கள் கட்சி,புதுக்கொடி, கூண்டோடு தற்கொலை, சாகும்வரை உண்ணாவிரதம் என அவர்களால் முடிந்த பரபரப்பை கிளப்பினார்கள்.

இன்னொரு பக்கத்தில், கிரிக்கெட்டில் சூப்பர்ஸ்டாரான சச்சினின் சாதனை முயற்சி, எப்போது Fab 4'ன் ரிடையர்மெண்ட், உடல்தகுதி,அவரின் குறைந்துப்போன ஆட்டத்திறன் என சச்சினையும் வழக்கம்போல பத்திரிக்கைகளும், டிவி சேனல்களும் 'ஒளி' வட்டத்துக்குள் கொண்டு வந்தன.பெங்களூரு ரசிகர்கள் ஸ்டேடியத்திலும், இதர ரசிகர்கள் டிவி முன்பும் தேவுடு காத்தனர்,சச்சின் முறியடிக்கப்போகும் லாராவின் சாதனையைக் காண.

இவ்வாறாக ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளறிவிட்ட ரஜினியும்,சச்சினும் நேற்று மாலை இருபெரும் ரசிகக்கூட்டங்களையும் வழக்கமான,பழகிப்போன ஏமாற்றத்தையும், கண்டிப்பாக பிறகு எப்போதாவது நடந்தே தீரும் என்ற எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டார்கள்.ரஜினி ஒரு அறிக்கை வாயிலாகவும், சச்சின் 14 ரன்கள் குறைவாகவும் அடித்து அவுட் ஆகி,அவர்கள் மேலான எதிர்ப்பார்ப்பு அவுட்'டாகாமல் பார்த்துக்கொண்டனர்.

ரஜினியின் அரசியல் என்பது அவருக்கும்,அவர் சார்ந்த திரைத்துறையினரின் சுயலாபத்துக்கே பெரும்பாலும் இதுவரை பயன்பட்டுள்ளது. அவருக்கு அரசியல் களத்தில் முழுமூச்சில் இறங்க வேண்டும் என்ற ஆசை சுத்தமாக இல்லை என்பது அவரின் நடவடிக்கைகளைப் பார்த்தால் தெளிவாகத் தெரியும். அவருக்கு இருந்த ஒரே சந்தர்ப்பம் 1996'ல் முடிந்துவிட்டது. அவரின் அரசியல் நிலைப்பாடும் அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏற்படும் பாதிப்புகளைச்(பாட்சா விவகாரம்,போயஸ் காட்டனில் ஜெ' வால் ஏற்ப்பட்ட நெருக்கடிகள் :-ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்றமுடியாது. 'பாபா பட விவகாரம் :-ஆறு தொகுதிகளில் பா.ம.க எதிர்ப்புநிலை/'ஜெ' became a 'தைரியலஷ்மி' )சார்ந்தே இதுவரை அமைந்துள்ளது. இவ்விஷயத்தில் சமீபத்திய வடிவேலு சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் ரஜினிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

இப்போது எல்லாக் கட்சிமட்டத்திலும் சமரசமாகி தானுண்டு,தன் தொழில் உண்டு என இருக்கலாமென இருக்கும்போது, அவரால் இதுவரை 'எடுப்பார் கை பொம்மைகளாக' இருந்த ரசிகக் கண்மணிகள் 'ஒரு கைப்பார்த்துவிடுவது' என்ற நிலையெடுத்து கடந்த சில மாதங்களாக தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் கைமீறி போய்விடாமலும்,அதே சமயத்தில் அவருடைய அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக,இறுதியாக கூறாமல் 'நான் வருவென்னு முடிவு பண்ணிட்டா யாராலயும்(ஆண்டவனாலயும்??) தடுக்க முடியாது' என வழக்கமான அறிக்கையை வெளியிட்டுவிட்டார். வரும்நாட்களில், 'ரசிகர்கள் கூண்டோடு விலகல்', ரசிகர்கள் போராட்டம்,சத்தியநாராயணன் அறிக்கை,சரத்குமார் கருத்து,ஜொதிடர்களின் ரஜினியின் ஜாதக அலசல்கள் என பத்திரிக்கைகளும், வார இதழ்களும் தலைப்பு செய்தியாகப் போட்டு அவர்களின் வியாபாரத்தைப் பெருக்கிக்கொள்வார்கள். இயந்திரன் படம் ரிலீஸிற்கு தயாராகும்போது மீண்டும் அரசியலில் அடுத்தக்கட்ட விளையாட்டை ரஜினியும், ரசிகர்களும், மீடியாக்களும் ஆரம்பிப்பார்கள்.

ரஜினியைப்போல சச்சினின் சமீபக்கால கிரிக்கெட் என்பது சாதனைகளை முறியடிக்கவும், டீமில் அவரின் நிரந்தர இடம் பறிப்போகாதிருக்கவுமே உதவுகிறது. கிரிக்கெட் வாரியத்தில் மும்பையின்ஆதிக்கம் இருக்கும்வரை அவரை யாரும் அணியிலிருந்து தைரியமாக விலக்கமுடியாது. ஒன்று ஏதாவது காயங்களால் அவர் உடல்திறன் விளையாடுவதற்கு ஏற்ற அளவில் இல்லாமல் போகவேண்டும்,அல்லது அவரின் விளம்பர வருமானங்கள் குறைந்து அவரே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறவேண்டும்.

இவ்விருவரையும் இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்துப் பார்த்தால்,இருவருமே அவர்கள் கொடிநாட்டியுள்ள துறைகளில் தீவிரமாக ஈடுபட்டு மேலும் மேலும் பல வெற்றிகளையும்,சாதனைகளையும்,அமைதியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் மீடியாக்களும்,ரசிகர்களும்,விமர்சகர்களும் அவர்களை அவர்கள் விரும்பாத அரசியலில் வலுக்கட்டாயமாக திணித்து அவர்களை டென்சன் படுத்தியும்,மக்களிடையே அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி சில தோல்விகளுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள்.அதற்கு வெகுசமீபத்திய உதாரணம், குசேலன் தோல்வியும், இலங்கைத் தொடரில் சச்சின் சோபிக்காததும். பிறகு அத்தற்காலிக தோல்விகளே மீடியாக்களுக்கு 'அவல்' ஆகிறது.இது இவர்கள் அடைந்துள்ள பிரமாண்டமான வெற்றிகளுக்கும்,அதனால் பெற்ற சூப்பர்ஸ்டார் மகுடத்திற்கும்(முள்கிரீடம்???) அவர்கள் கொடுக்கும் விலையாகும்.


இவ்வாறு சச்சினும்,ரஜினியும் முள்கிரீடம் தரித்துக்கொண்டிருக்கும்வரை அவர்கள் இருக்கும் துறையில் அவர்களைச் சார்ந்த ரசிகர்களுக்கு இதுவரை ரசிகர்களாலும், பத்திரிக்கை/ தொலைக்காட்சி போன்ற மீடியாக்களாலும் ஏற்படுத்தப்பட்ட ஒளிபிம்பத்தில் வெளிச்சம் குறையாமல் காட்சி தந்துக் கொண்டிருப்பார்கள். Mr&Mrs பொதுஜனமும் இதுசம்பந்தமாக பத்திரிக்கைகள்,வார இதழ்களில் வந்த பரபரப்பு கட்டுரைகளைப் படித்துவிட்டு 'வேக்காடு' தாங்காமல்(இதற்குமட்டும் ஆற்காட்டார் பொறுப்பு அல்ல ) அப்பத்திரிக்கைகளாலேயே விசிறிக்கொண்டிருப்பார்கள்.

October 10, 2008

இன்றைய சா(சோ)தனை : 00005 ஹிட்ஸ்

தொடர்ச்சியாக "IT துறை ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா" எழுதிக்கொண்டிருந்தபோது எக்கச்சக்கமாக விழுந்த ஹிட்ஸ்,சில நாட்களில் தமிழ்மண்த்தின் சூடான பதிவுகளில் 'டாப் 3' வரை சென்றது. கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான வேலைகள் காரணமாக பதிவுலகம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க முடியவில்லை.அவ்வப்போது சிறிது நேரம் கிடைக்கும்போது தமிழ்மணத்தை எட்டிப்பார்த்தால் இலங்கைப் பிரச்சனை, சென்னை பதிவர் சந்திப்பு, பா(சா)ருவின்,கலைஞரினின்,ஆற்காட்டாரின், தங்கமணிகளின் தலை உருட்டல்கள், ABCD ஹிட்ஸ்,XYZஐ கண்டிக்கிறேன் என ஏகப்பட்ட ஸ்டீரியோ பதிவுகள்.

ஆகவே இப்போதுள்ள ட்ரெண்டில் நானும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளதான் இந்தப் பதிவு....ஆகவே மகாப் பதிவுலக நண்பர்களே, இன்று நான் என் ப்ளாக் ஹிட்ஸ்'ஐ பார்த்தபோது 00005 ஹிட்கள் இருந்தது.இந்த அரிய சாதனையைப் பதிவு செய்யவே இந்த பதிவு( 00005 ஹிட்ஸ்'ல் 4 முறை நானே வந்துப்போனதை நல்லவேளை யாரும் பாக்கல ;))))

டிஸ்கி : 00005 ஹிட்ஸ்'ஐக் உங்கள் அனைவருடனும் கொண்டாட பிப்ரவரி 31 ம் தேதி சென்னைக்கு வரலாமென இருக்கிறேன். இதையே அழைப்பிதழாகக் கருதிகொண்டு அனைவரும் சென்னை காந்திசிலை அருகே வந்துவிடவும். யாருக்கும் 'சாட்டிங் மூலமாக அழைப்புக்கிடையாது.மேலும் ரஜினிகாந்தின் கால்ஷீட் கிடைக்காததால் அவரும் கலந்துக்கொள்ள மாட்டார் என வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.வேண்டுமானால் 'வலைஞர்களின்" சீப்பஸ்ட் ஸ்டாரான JK ரித்தீஸை அழைக்கலாம்...கலந்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் அண்ணன் ரித்தீஸ் அவர்கள் குறைந்தப்பட்சம் 500ரூ வழங்குவார்.

September 17, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 9

டிஸ்கி : கடந்த சில நாட்களாக வேலைக்கொஞ்சம் அதிகமாகிவிட்டதால், தொடர்ந்து எழுதமுடியவில்லை.....இப்ப Am back......;))

கடந்தப்பதிவில் அமெரிக்காவில் IT கம்பெனியில் காண்ட்ராக்ட்ர் அல்லது நேரடி எம்ப்ளாயி'யாகவோ வேலை செய்யும் இந்தியமக்கள் தன்வேலையைக் காப்பாற்றிக்கொள்ள செய்யும் 'வேலைகள்' என்ன என்பதைப்பற்றி எழுதப்போவதாக சொல்லியிருந்தேன்.இந்தப்பதிவு அதைப் பற்றிதான்.

முதலில் அமெரிக்க கம்பெனியில் நேரடியாக வேலைப்பெற்றுப் பணிப்புரியும் நம் மக்களைப்பற்றி. கடந்தப்பதிவில் decision maker level'ல் பணிப்புரியும் நம்மவர்கள் அதைப்பயன் படுத்தி பணம் செய்யும் வித்தைகளைக் கூறியிருந்தேன். அவர்களைத்தவிர்த்து அவர்களுக்கு கீழேப் பணிப்புரியும் team lead,techlead போன்றவர்கள் அவர்களுடன் இந்திய சர்வீஸ் கம்பெனியிலிருந்து வந்து பணிப்புரியும் மக்களுக்கு வேலையை பகிர்ந்தளிப்பவர்களாகவோ, அல்லது செய்துமுடிக்கப்பட்ட வேலைகளை review செய்பவர்களாகவோ இருப்பார்கள். பொதுவாக சர்வீசஸ் கம்பெனியிலிருந்து வேலை செய்பவர்கள் process oriented'ஆக இருப்பார்கள்(அல்லது அப்படி இருப்பதாக காட்டிக் கொள்வார்கள்) .process oriented என்றால் ஏகப்பட்ட 'டாக்குமெண்ட்' வேலைகள் இருக்கும். சாப்ட்வேரில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் விவரமாக ஆவணப்படுத்த வேண்டும்.இதனால் நன்மை என்னவென்றால் ஒரு புராஜக்ட் அதில் வேலைச் செய்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரை மட்டும் என்றென்றும் நம்பியிருக்க தேவையில்லை. புதிதாக சேரும் எவரும்,அந்த ஆவணங்களைப் படித்து புரிந்துக்கொண்டு,விட்ட இடத்திலிருந்து அதிகப்பிரச்சனைகளின்றி வேலையைத்தொடர ஏதுவாக இருக்கும். தீமை என்னவென்றால், இதற்கு ஆகும் நேரத்திற்கு 'கஸ்டமர்' செலவு செய்யவேண்டும்.அதோடு முன்பே கூறியுள்ளதுப்போல் அதில் வேலை செய்தவரின் முக்கியத்துவம் அதிகமில்லை.ஆகவே நம்மவர்களின் முதல் எதிர்ப்பு 'ஆவணப்படுத்துதல்' வேலைகளுக்கு.

நான் முதலில் வேலைச்செய்த அமெரிக்க கம்பெனியின் techlead ஒரு இந்தியர். நான் அனைத்து விவரங்களையும் டாகுமெண்ட் செய்ய ஆரம்பித்தேன். அது முடிந்தவுடன் review'க்காக அவருக்கு அனுப்பினேன். அதைப்பார்த்துவிட்டு என்னை அழைத்து இதற்கேல்லாம் நெரம் செலவழிக்கவேண்டாம் எனக்கூறிவிட்டார். ஆனால் எங்கள் கம்பெனியில் நாங்கள் அதைச் செய்யவேண்டும் என்பதால், ஓய்வு நேரத்தில் நான் தொடர்ந்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு வருடம் வேலைப் பார்த்து விட்டு வேறு நகருக்கு செல்வதற்குமுன், நான் கடந்த ஒருவருடமாக தயாரித்திருந்த ஆவணங்களை என்னுடைய பரிசாக அவருக்கு அளித்தேன். சில மாதங்களுக்குப்பிறகு என்னைத் தொடர்புக்கொண்ட அவர்,நான் அளித்திருந்த ஆவணங்கள் அந்தப்புராஜக்ட்க்கு பெருமளவில் உபயோகப் படுவதாகவும்,இனிமேல் டாகுமெண்ட் செய்வதை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் கூறினார்.

அதேப்போல், ஒரு சர்வீஸ் கப்பெனியிலிருந்து ஒரு அமெரிக்க கம்பெனிக்கு Time & material முறையில் ஆட்கள் தேவைப்படும்போது சர்வீஸ் கம்பெனி பரிந்துரைக்கும் developer/techlead ஆகியோரை அமெரிக்க கம்பெனியை சேர்ந்தவர்கள் இண்டர்வியூ செய்வார்கள். அந்த இண்டட்வியூ பேனலில் 'இந்தியர்' யாராவது இருந்தால்,நீங்கள் காலி. ஏதோ 'நாசா'விலிருந்து ஏவப்படும் ராக்கெட்'க்கான சாப்ட்வேரை தயாரிக்கும் பணியில் உங்களை அமர்த்தப் போவதற்கான இண்டர்வியூப்போல அக்குவேறு ஆணிவேறாக உங்களைக் கேள்விமேல் கேள்விக்கேட்டு குடாய்ந்து நம்முடைய கான்பிடன்ஸ் லெவலையே காலி செய்துவிடுவார்கள். அந்த இண்டரியூவில் தேர்வாக எளிதான வழி, அவர்கள் அறிவுஜீவித்தனமாக( ????) கேட்கும் கேள்விகளுக்கு ராஜேந்திரக்குமார் பாணியில் 'ங்கே' என முழித்துவிட்டு, இது ஒரு சிறந்தக்கேள்வி,என் வாழ்நாளில் இதுப்போல யாரும் கேட்டதில்லை என அடித்துவிட்டால்,அவரும் 'இவன் ரொம்ம்ம்....ப நல்லவன்,இங்க வந்து நம்ப வேலைக்கு வேட்டு வைக்கமாட்டான்' என நம்பி நம்மை தெர்ந்தெடுத்து விடுவார். கடைசியில் 'ஆன்சைட்' போனப்பிறகு, ராக்கெட்'க்கான சாப்ட்வேரை எழுதாமல்,ஏதாவதொரு ஆதிக்கால மெயின்ப்ரேம்' சாப்ட்வேரில் 'சிக்'கெடுக்கும் வேலையை தலையில் கட்டிவிடுவார்கள்.

உங்கள் புராஜக்ட் ஆப்ஷோரிலிருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு acceptance testing' காக ஆன்சைட்டிலுள்ள இந்திய கஸ்டமரிடம் போனால், நீங்கள் எவ்வளவு சிறப்பாக புராஜக்ட் செய்து டெலிவரி செய்திருந்தாலும் அதில் குறைகள் கண்டுப்பிடித்து, application வேலையே செய்யாது அல்லது நாம் எதிர்ப்பார்த்த முறையில் தயாரிக்கப்படவில்லை என management level'ல் escalate செய்துவிடுவார்கள். ஒரு எளிய உதாரணமாக இரண்டு எண்களைக் கூட்டும் வேலை எனச் சொல்லி, நாம் 2+1=3 என காட்டினால், அது எப்படி 2+1=3 எனலாம்,எனக்கு வேண்டியது 1+2=3'தான் என பிரச்சனையைக் கிளப்புவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து 'successful production roll-out' செய்து higher management'க்கு அதை அறிவிக்கும் இ-மெயிலில் கவனமாக நம்முடைய முகவரிகள் இல்லாதவாறு பார்ந்துக்கொள்வார்கள்.

IT துறையில் சிரமமில்லாத வேலை development project. ஆரம்பம்முதல், இறுதிவரை அனைத்து செயல்பாடுகளும் நம் பொறுப்பில் இருப்பதால் ஒரு சிறிய திறமையான குழு அமைந்தால், வேலையை சுலபமாக முடித்துவிடலாம். அவ்வாறில்லாமல் ஏதாவதொரு 'maintenance' டீமில்,அதுவும் அந்த சாப்ட்வேர் அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்'ராக வேலைப்பார்க்கும் நம்பவர்களின் தயாரிப்பென்றால் அவ்வளவுதான். code'ஐ பார்த்தால் தலையும் புரியாது,காலும் புரியாது. ஒழுங்குமுறையின்றி,எவ்விதக்குறிப்புமின்றி அலங்கோலமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 1+1=2 என்பதை ((18343/45.67223)*(863434-883743(884545-(7454/4545)))+87878*532)+1 என எழுதியிருப்பார்கள். அவர்களுடைய ஒரேக் குறிக்கோள் அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்கள் எழுதிய லாஜிக்கைப் புரிந்துக்கொள்ளக்கூடாது. அப்படியிருந்தால்தான் அவர்களின் வேலைக்கு யாரும் சுலபமாக வேட்டு வைக்கமுடியாது.

கடந்த சில வாரங்களாக எழுதியப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகப் படித்துப்பார்த்தபோது,இதுவரை IT துறையில் நான் கண்டவைகளில் எனக்கு தவறாகவோ அல்லது வித்தியாசமாகப் பட்டவைகளை, மொழி/இன ரீதியாகப் பாகுபடுத்தி எழுதியிருக்கிறேன்.பெரும்பாலும் இனரீதியான குழுக்களில் உள்ள குறைகள் பற்றி எழுதியிருக்கிறேன். இவைகள் குறைய என்ன செய்யவேண்டும்? எவ்வாறு IT துறையை ஒரு சிறந்தத்துறையாக உருவாக்கலாம்...அதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு என்ன?

(தொடரும்.....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8

September 7, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 8

2006'ம் தொடக்கத்தில் 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்பதற்கான நிகழ்வு நடந்தது. நியூ இயர் கொண்டாட்டங்கள் முடித்து, ஆபிஸுக்கு வந்த மேனேஜர்கள்(decision makers) அந்தக்கம்பெனியின் ஆடிட்டிங் டீம்'மால் ஒரே நேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நிமிடமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அவர்கள் லேப்டாப்'பையோ,அவர்கள் க்யூபிக்கில் உள்ள எந்தப் பொருளையும் எடுக்கவிடாமல் பறிமுதல் செய்யப்பட்டு,அவர்களுக்கு கீழே வேலைச் செய்பவர்கள் முன்னிலையில் வெளியேற்றப் பட்டார்கள்.

யாருக்கும் அப்போது எப்படி இது நிகழ்ந்தது எனப் புரியவில்லை.அந்த மேனேஜர்களும் அதற்குப்பிறகு அந்த நகரத்தில் இல்லை.யாராலும் அவர்களைத் தொடர்ப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய 'காண்ட்ராக்ட்டர்' நண்பரும் இந்த நிகழ்ச்சி நடப்பதற்க்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வேறு கம்பெனிக்கு மாறியிருந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு 'யாஹூ' சாட் வழியாக அந்த நண்பர் கிடைத்தார்.என்னுடைய மொபைல் எண்ணை வாங்கி உடனடியாக தொடர்ப்புக்கொண்டார். அவரிடம் ஏன் அவர் அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறிவிட்டார் எனக்கேட்டதற்க்கு ஒரு பெரிய விளக்கத்தைக் கூறினார்.

3-4 வருடங்களாக எந்தவிதச் சிக்கலுமின்றி அந்த மேனேஜர்களுக்கும், கன்சல்டன்சி கம்பெனிக்கும் உறவு தொடர்ந்துள்ளது. அந்த சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன்னொரு கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்கள் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் கம்பெனி மேனேஜர்களிடம் காரணம் கேட்டதற்கு ' பெரும்பாலோனோரை உங்கள் கம்பெனி வழியாகமட்டும் எடுப்பதால் 'higher management'க்கு சந்தேகம் ஏற்படலாம்,ஆகவேதான் 3 இந்தியன் சர்வீசஸ் கம்பெனிகளோடு,இந்த புது கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்களைத் தேர்வு செய்வதாகவும்' கூறியுள்ளார்கள். ஆனால் போகப்போக புதிய கன்சல்டன்சி கம்பெனியிலிருந்து ஆட்களை எடுப்பது அதிகரித்துள்ளது.

இதில் ஏதோ விஷ(ய)ம் இருக்கிறது என சந்தேகித்த முதல் கன்சல்டன்சி கம்பெனி விவகாரத்தை ஆராய்ந்தப்போது, அந்தப் புதிய கன்சல்டன்சி கம்பெனியில் இந்த மூன்று மேனேஜர்களும் மறைமுகப் பங்குதாரர்களாகவும்,அந்தக்கம்பெனியை நடந்துவது அவர்களின் உறவினர்கள்தான் என்றத்தகவல் கிடைத்துள்ளது. இந்த விவரங்களைக் கூறி அந்த மேனேஜர்களைக் கேட்டதற்கு பேச்சு முற்றி அவர்களுக்குள்ளே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.சிறிது நாட்களில் அந்த கன்சல்சன்சி வழியாக சேர்ந்தவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பெனியிலிருந்து வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர்.2-3 மாதங்களில் கிட்டத்தட்ட 70 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடிக்கும், நஷ்டத்திற்க்கும் ஆளான அந்த கன்சல்டன்சி கம்பெனி கடந்த 3-4 வருடங்களாக அந்த மேனேஜர்களுக்கு கொடுக்கப்பட்ட கமிஷன் விவகாரங்களை 'higher management' க்கு போட்டுக்கொடுத்துவிட்டு அவர்கள் கன்சல்டன்சி கம்பெனியை மூடிவிட்டிருக்கிறார்கள். விவரங்களை ஆராய்த்த கம்பெனி ஆடிட்டிங் டீம் அந்த மேனேஜர்களின் பேங்க் கணக்குகளை தடைச்செய்துவிட்டு அவர்களை நீக்கிவிட்டார்கள்.ஆனால் விஷயம் வெளியே தெரிந்தால் கம்பெனி பெயர் கெட்டுவிடும் என்பதால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது ஒரேஒரு எடுத்துக்காட்டுதான்.இதுபோல் பலக்கம்பெனிகளில் நடைப்பெருகிறது. இந்தியர்கள் மட்டும் அல்ல,அனைத்து நாட்டினரும் ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறமென எவ்வித வேறுபாடுகளுமின்றி 'ஒற்றுமையாக' ஒன்று சேர்ந்து உலகத்தின் தொன்றுத்தொட்டு நிகந்துவரும் லஞ்சம், குறுக்குவழியில் பணம் சம்பாதித்தல், துரோகம்,சுயநலத்துடன் தன்முன்னேற்றத்திற்காக எவ்விதசெயலையும் மனசுத்தியுடன் செய்தல் போன்றவைகளை, 21'ம் நூற்றாண்டில் பல இந்திய நடுத்தரக்குடும்பத்து மக்களின் வாழ்வில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் IT துறையிலும் மேற்க்கூறிய விஷயங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதைத்தவிர தங்கள் வெலைகளைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்டர்களாக வேலைச் செய்யும் நம்மக்கள் செய்யும் 'தகிடுதம்'கள் என்னென்ன??

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7

(தொடரும்)

September 2, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7

2003'ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கவாசம் ஆரம்பித்தது.எங்கள் கம்பெனியிலிருந்து நானும், ஆப்ஷோரிலிருந்து இருவரும் வேலையை ஆரம்பித்தோம். அது ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜக்ட்.எங்களைத்தவிர மேலும் 18-20 பேர் டீமிலிருந்தார்கள்.அதில் பெரும்பாலோர் நான் அமெரிக்காவிலிருந்த நகரத்திலிருந்தும்,மற்றவர்கள் வேறொரு நகரத்திலிருந்தும் வேலை செய்தார்கள்.கிட்டத்தட்ட 4 மாதங்கள் வேலை அதிகமிருந்தது, என்னுடைய டீம் ஆப்ஷோரிலிருந்ததால் சிலசமயம் இரவுமுழுவதும் வேலையிருந்தது.ஆகவே வெலையைத்தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. முதல் 'ரிலீசுக்கு' பிறகு வேலை சுலபமானது.மேலும் 'ஆப்ஷொரிலிருந்து' வேலைப்பார்த்தவர்களையும் நான் அமெரிக்காவிற்கு வரசெய்துவிட்டேன்.ஆகவே எனக்கு வேலை முன்பிருந்ததுபோல் அதிகமில்லை. ஆகவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்க ஆரம்பித்தேன்.

வழக்கமாக இந்தியாவிலிருந்து 'சர்வீஸ் கம்பெனிகளின்' சேவையை பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்,முதலில் ஒரு இந்தியன் கம்பெனியோடு வேலையை ஆரம்பிப்பார்கள். சிறிதுக்காலத்திற்கு பிறகு சில வேலைகளை வேறோரு இந்திய சர்வீஸ் கம்பெனிக்கு கொடுப்பார்கள். இதனால் இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் ஒரு போட்டி ஏற்படும் ஆகவே வேலையை திறமையாக முடித்துக்கொடுக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படும்.சில சமயம் பில்லிங் ரேட்டும் குறைக்கவேண்டியிருக்கும். இதனால் அமெரிக்க கம்பெனிக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவையைப் பெறமுடியும். இந்த உத்தியை நான் வேலைச் செய்த அமெரிக்க கம்பெனியும் செய்திருந்தது. இந்தியாவின் முதல் மூன்று முண்ணனி நிறுவனங்களில் இருந்தும் இந்த ப்ராஜக்ட்டில் ஆட்கள் இருந்தார்கள். ப்ராஜக்ட் மேனேஜர், டெக்னிக்கல் மேனேஜர், குரூப் ஹெட்(decision makers for that group) அனைவரும் அமெரிக்க கம்பெனியைச் சார்ந்த அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியர்கள்.

நான் மேற்சொன்ன உத்தியை அமெரிக்க கம்பெனியில் வேலை செய்யும் இந்தியர்கள்தான் அவர்கள் க்ரூப்'பில் புகுத்தியிருந்தார்கள். நான் வேலை செய்த ப்ராஜக்ட் தவிர மேலும் சில ப்ராஜக்ட்களும் அவர்களுக்கு கீழே இருந்தது.குறைந்தது 60-80 பேர்கள் அந்த க்ரூப்பில் இருந்தார்கள். குறைந்த செலவில் 3 இந்திய சர்வீஸ் கம்பெனிகளுக்குள் போட்டியை ஏற்படுத்தி நிறைவான சேவையைப் பெற்று,அவர்கள் வேலைச் செய்யும் அமெரிக்க கம்பெனிக்கு லாபத்தை ஏற்படுத்துவதாக முதலில் நானும் பெருமைப்பட்டேன் அந்த இந்தியர்களின் சாமார்த்தியத்தை எண்ணி.

சிறிது மேலும் ஆராய்ந்தப்பிறகு வேறொரு உண்மை கண்ணில் பட்டது. மொத்தம் உள்ள 60-80 பேரில் அதிகப்பட்சம் ஒரு 30 சதவிகிதம்தான் இந்த இந்திய சர்வீஸ் கம்பெனி மக்கள்(எங்கள் கம்பெனியிலிருந்து நாங்கள் மூவர்தான்..) மீதி அனைவரும் அமெரிக்காவில் இயங்கும் 'கன்சல்டன்சி' கம்பெனி வழியாக 'காண்ட்ராக்ட்' தொழிலாளியாக இங்கு வந்து வேலை செய்பவர்கள்.அதிலும் 80%க்கு மேல் அனைவரும் தெலுங்குதேச மக்கள். இன்னொரு முக்கிய விஷயம்,நான் மேற்க்கூறிய மேனேஜர்கள் (decision makers) அனைவரும் தெலுங்கு மக்கள்.

காண்ட்ராக்ட் மக்களோடு பழகி அவர்களோடு நெருக்கமாக நட்புமுறையில் பழக ஆரம்பித்தப் பிறகு தெரிந்த மற்றொரு உண்மை, அந்த கன்சல்டென்ஸி கம்பெனியும் தெலுங்கு மக்களாலேயே நடத்தப்படுவதை அறிந்தேன். அப்போதுதான் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாக உணர்ந்தேன். எங்கள் கம்பெனி மேனேஜரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, 'ஏன் நம் கம்பெனிக்கு 3 பேரைத் தவிர வேறு யாரையும் சேர்க்க முடியவில்லை? என வினவினேன். 'decisions makers' வோடு அவர் தொடர்ந்துப் பேசுவதாகவும் ஆனால் மேலும் சிலரை சேர்க்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையென்றும்,ஆனால் அந்த கன்சல்டென்ஸி கம்பெனிக்கே முன்னுரிமைக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் அதேக் கம்பெனியின் வேறு க்ரூப்பில் உள்ள ப்ராஜக்ட்டில் எளிதில் நம் கம்பெனி மக்களை சேர்க்க அந்த க்ரூப்பின் ஹெட்(அமெரிக்கன்) அனுமதிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் 'காண்ட்ராக்ட்' மக்களில் என்வயதைச் சார்ந்த ஒருவர் எனக்கு நன்கு பழக்கம் ஆனார் மனம்விட்டு பேசும் அளவிற்கு. ஒருநாள் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.'எப்படி நீ சார்ந்த கன்சல்டன்சி கம்பெனி ஆட்களை மட்டும் இந்த க்ரூப்பில் சுலபமாக சேர்த்துக்கொள்கிறார்கள்?' . நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ஒரு பெரிய உண்மையை வெளியிட்டார். அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக வரும் ஒவ்வொருவரின் 'பில்லிங் ரேட்டிலும்' ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், 'decision makers'க்கு கமிஷனாகப் போகிறது'. நான் ஆடிப்போனேன்.எப்படியென்றால், உதாரணத்திற்கு ஒரு காண்ட்ராக்டர்க்கு ஒரு மணி நேரத்திற்கு 100 டாலர் என அமெரிக்க கம்பெனியோடு(நம் decision makers மேனேஜர்களோடு) டீலை அந்த கன்சல்டன்ஸி கம்பெனிப் போடும். அதில் ஒரு 25 டாலர் அந்தக்கன்சல்டன்சி கம்பெனிக்குப் போகும்,ஒரு 20-25 டாலர்கள் கமிஷனாக 'நம் decision makers' மேனேஜர்கள் பங்குப் போட்டுக்கொள்வார்கள். மீதியுள்ள 50 டாலர் காண்ட்ராக்ட் எம்ப்ளாயிக்குப் போகும். இப்படியாக கணக்குப்போட்டால் (1 employee*25$*8hrs/day*21days/month) ஒரு 4200 டாலர் கமிஷனாகப் போகும்,அந்த க்ரூப்பில் 50-60 பேர்வரை அந்தக் கன்சல்டன்ஸி கம்பெனி வழியாக வேலைச் செய்பவர்கள். அப்படியென்றால் அந்த மேனெஜர்கள் மாதத்திற்க்கு அடிக்கும் கமிஷன் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால்,அந்த க்ரூப்பில் இந்தியர்கள் தவிர வேறு நாட்டவர் (அமெரிக்கன்,சைனீஸ், ஜப்பானியர்கள்) எவரும் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. தப்பித்தவறிச் சேறுபவர்களும் சில வாரங்கள்/மாதங்களில் வேறு க்ரூப்பிற்கோ,கம்பெனிக்கோ மாறிவிடுவார்கள். நான் வேலைச் செய்தக் காலத்தில் ஒரு சைனீஸ் எங்கள் ப்ராஜக்ட்டில் சேர்ந்தார். அவருக்கு அவர் டெக்னிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கு சம்பந்தமே இல்லாத வேலையைக் கொடுத்தார்கள்.அவரும் வேறு வழியில்லாமல் செய்ய ஆரம்பித்தார். ஏதாவது சந்தேகம் என்றுக்கேட்டால் சரியான விளக்கத்தை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. சைனீஸ் என்பதால் அவரது ஆங்கிலமும் சிறப்பான முறையில் இல்லை.மேலும் எந்த மீட்டிங் என்றாலும் 'டெக்னிக்கல்' விஷயங்கள் தவிர பெருப்பாலும் தெலுங்கில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் ஆபிசில் இருக்கும்போது,ஏதோ ஹைதராபாத்தில் உள்ள கம்பெனியில் வேலைப் பார்ப்பதுப் போல சுற்றுசூழ்நிலை இருக்கும். ஆபிசை விட்டு வெளியில் வந்தால்தான் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை உணர்வீர்கள். இந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியாமல் மூன்றே மாதத்தில் அந்த சைனீஸ் அன்பர் 'கனடா'வில் வேலைவாங்கி சென்றுவிட்டார். சொன்னால் நம்பமாட்டீர்கள்,ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இருந்த ஆபிஸ் கட்டிடத்தில் காவலாளிகளைத் தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள் மட்டும்தான். இந்தியர்கள் வேலைச் செய்யும் ப்ராஜக்ட் அனைவற்றையும் இந்த பில்டிங்'கு மாற்றிவிட்டு அமெர்க்கர் அனைவரும் வேறு பில்டிங் மாறிவிட்டார்கள். இன்றும் அந்த பில்டிங்கை(919) இந்தியன் பில்டிங்காகத்தான் வைத்திருப்பதாக நண்பர் கூறினார்.

மேலும் நானிருந்த டீமி'ல் பார்த்தால் அந்த மேனேஜர்களின் மனைவிகள்,அவர்களின் உறவினர்களும் அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக இங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவிகள் 'working from home' என்று பெரும்பாலும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதாக கணக்குக் காட்டிவிட்டு சம்பாதித்துக் கொண்டிருநதார்கள்.அவர்கள் கணவர் மேனேஜர் என்பதால் பெரிய அளவிற்கு வேலையும் இருக்காது.


அந்த டீமில் நான் 2005 தொடக்கம்வரை இருந்தேன்.அதுவரை அவர்களின் வாழ்க்கை கொண்டாட்டமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு வேறு நகரத்திற்கு நான் சென்றுவிட்டேன். 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது இவர்களுக்கெல்லாம் பொருந்தாது' என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன். ஆனால் அந்தப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும் என நிரூபித்த நிகழ்ச்சி, அந்த மேனேஜர்கள் யாரால் பலனடைந்தார்களோ அவர்களாலேயே நிகழ்த்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு தொடக்கத்திலே.....

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6

(தொடரும்....)

September 1, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 6

நான் முதல்முறையாக அமெரிக்காவுக்கு 2003'ம் ஆண்டு,ஜூலை மாதவாக்கில் எங்கள் கம்பெனி வழியாக கஸ்டமர் ஆபிசில் வேலைச் செய்யச் சென்று,கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், மூன்று வெவ்வேறு நகரங்களில் பணிப்புரிந்தேன்.பிறகு இந்தியா திரும்பியப்பின்,கடந்த ஜனவரி 2008 வரை ஆப்ஷோர் டேமேஜராக 2 வருடங்கள் பணிப்புரிந்தேன்.இந்த 5 ஆண்டுகளாக வேலைச்செய்த 'கஸ்டமர்' கம்பெனிகளில், என்னுடன் பணியாற்றிய,கஸ்டமர் மக்கள் பெரும்பாலோர் இந்தியர்கள்.அதிலும் தெலுங்கு மக்கள் அதிகம்.

IT துறையில் பெரும்பாலும் ஜப்பானியர்களுடன் வேலைச் செய்வது மிகவும் கடினம் என்பது பெரும்பான்மையானக் கருத்து.அது 100% உண்மையும்கூட.நான் கிட்டத்தட்ட 3 வருடங்கள்(2000-2003) ஜப்பான் கம்பெனியின் ப்ராஜக்ட்டில் வேலைச் செய்துள்ளேன். அவர்கள் திருப்திபடுத்தும் விதத்தில் வேலைச்செய்வது(customer satisfaction),அதுவும் இந்தியச் சூழ்நிலையில் மிகமிகக்கடினம். அதற்கு சில முக்கியக் காரணங்கள்.

1. மொழிப்பிரச்சனை - ஜப்பானியமொழி கொஞ்சம் கடினமானது நாம் கற்றுக்கொள்ள.அதேப் போல் ஜப்பானியர்கள் அவர்கள் கல்வியை ஜப்பானியமொழியிலே கற்பதால்,ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாளத் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. நான் வேலைவிஷயமாக ஒரு மாதம் டோக்கியோவில்(2001) தங்கியிருந்தேன். உணவு விஷயத்தில் அங்குள்ள உணவங்களில் உள்ளவர்களிடம் 'ஆர்டர்' செய்வதென்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.என்னுடன் வந்த மற்றோரு நண்பர் சைவம். நாங்கள் Mcdonald'க்கு சாப்பிடச் சென்றால்,நான் வழக்கமாக சிக்கன் பர்கரை ஆர்டர் செய்துவிடுவேன்.ஆனால் நண்பரோ வெஜ்பர்கர் சாப்பிடுபவர்.வெஜ்பர்கர் மெனுக்கார்டில் இருக்காது. ஆகவே அவர் 'பில் போடுபவரிடம்' மெனுக்கார்டை எடுத்து 'சிக்கன் பர்கரை' காண்பித்து, பர்கர் 'without chicken' வேண்டும் என்பார்..'பில்'லரோ' ராஜேந்திரக்குமார் ஸ்டைலில் 'ங்கே..' என முழிப்பார்.பிறகு மீண்டும் அந்தப் படத்தைக் காண்பித்து,'burger,no chicken...no meat...only vegitable' எனப் பலமுறைச் சொல்வார்,சிலபல நிமிட தலைச் சொறிதலுக்குப் பிறகு 'ஓ...வெஜ் பர்கர்???' எனப் புரிந்துக்கொண்டு, பில்லைப் போடுவார்.அதற்குப்பிறகு உள்ளே பர்கர் தயாரிப்பவர்க்கும் அவர் சொல்லிவிடுவார்.நண்பருக்கோ பாதிபசி அவர் 'சைகை மொழியை' அந்த ஜப்பானியருக்கு புரிய வைத்த மகிழ்ச்சியிலேயே போய்விட்டு இருக்கும்.

ஒரு புராஜக்ட் செய்யும்போது அனைத்து 'டாக்குமெண்ட்ஸ்'ஐயும்(req,design,functional, testplan/cases/results) ஆங்கிலத்தில் தயார் செய்து, பிறகு ஜப்பானியமொழியில் மாற்றி அவர்களுக்கு அனுப்பிவைப்போம்.ஆனால் எதற்கும் ரெஸ்பான்ஸ் இருக்காது 'கிணற்றில் போட்டக்கல்' போல. இப்படிபட்ட நிலையில் ஒரு 'டெவலப்மெண்ட்' ப்ராஜக்டை முடித்து 'அக்ஸப்டன்ஸ்' டெஸ்டுக்காக அவர்களுக்கு அனுப்பினோம். அனுப்பிய முதல்வாரம் எந்த பதிலும் இல்லை.இரண்டாவது வாரமும் 'NO SOUND'...'என்னாடா இது,நாம்ப bug-ஏ இல்லாத அப்ளிகேஷனை தயாரித்துவிட்டோமா? இரண்டு வாரம் டெஸ்ட் பண்ணியும் எந்த பிழையையும் அவர்கள் அனுப்பவில்லையே என 'நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி' அதற்கடுத்த வாரத்தில் 'டீம் ட்ரிப்' போகப் பெரிய ப்ளானே தயாரித்துவிட்டோம்.அவ்வார இறுதியில்,டீம் டின்னர்'க்கு சென்று பயங்கர கூத்து வேறு.

மீண்டும் திங்கள் அன்று பணிக்கு வந்தோம். காலை 10 மணியளவில் ஒரே ஒரு இ-மெயில் ஒரு எக்ஸல் இணைப்போடு 'கஸ்டமரிடம்' இருந்து வந்து இருந்தது. ஏதோ பாராட்டுப்பத்திரம்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்ற 'நினைப்புடன்(ரொம்ம்ம்ம்பதான்)' அதைத் திறந்துப் பா...ர்...த்.....த.... டேமேஜர் அலறிவிட்டார்...அவர்விட்ட சவுண்டில் அடுத்த நொடியில் அனைவரும் ஒரு கான்பரன்ஸ் ரூமில் இருந்தோம். கிட்டத்தட்ட 500'க்கும் அதிகமான 'defect' அந்த எக்ஸல் சீட்டில் எங்களைப் பார்த்து ஏளனமாகப் பல்லிளித்தது. அவர்கள் செய்த முதல் டெஸ்ட் என்னவென்றால், அந்த அப்ளிகேஷனை ப்ரொவ்சர் வழியாக இணைத்து 'லாகின்' செய்துவிட்டு,பிறகு நெட்வொர்க் கேபிளை பிடுங்கிவிட்டு, மறுபடியும் 'அப்ளிக்கேஷனில்' உள்ள சில 'லிங்க்'களை 'க்ளிக்'கினால், 'கேபிள் இணைப்பு இல்லை' என எர்ரர் மெசேஜ் 'பாப்பப்'பில் வரவேண்டும்' என்று டெஸ்ட் செய்துள்ளார்கள். அவ்வளவுதான்,டேமேஜர் அடுத்தப் ப்ளைட்டை பிடித்து ஜப்பானுக்கு ஓடினார்.நாங்கள் அடுத்த இரண்டு மாதங்கள் ராப்பகலாக வேலைச் செய்து எல்லாவற்றையும் சரிசெய்தோம்.

2.இந்தியர்களுக்கும்,ஜப்பானியர்களுக்கும் வேலைச்செய்வதிலுள்ள அணுகுமுறை :
அனைவரும் அறிந்ததுப்போல,ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை நேரத்தில் வேலையை மட்டும்தான் பார்ப்பார்கள்.நான் அங்கிருந்த ஒரு மாதத்தில் அவர்கள் கடும் உழைப்பைப்பார்த்து அசந்துப்போனேன். காலை 930-10மணிக்கு சீட்டில் அமர்ந்தால், பகல் உணவுக்கு மணி அடிக்கும்வரை(1230pm-100pm- உண்மையிலேயே நம் ஊரில் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதுப்போல ஆபிசில் அடிக்கிறார்கள்)வேலை பார்க்கிறார்கள்.அநாவசியமாக பக்கத்து சீட்டு மக்களிடம் அரட்டை அடிப்பதோ,டீ ப்ரேக்'கென 30 நிமிடங்கள் வெளியேப்போவதோ, எதுவும் கிடையாது. மிகவும் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.அதனால்தான் அவர்களால் 'மேக்ஸிமம் அவுட்புட்' கொடுக்கமுடிகிறது.

நாமெல்லாம்,காலையில் கஷ்டப்பட்டு ஒரு 9 மணிக்கு ஆபிசில் நுழைந்து, அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு, நண்பர்களுடன் கேண்டின் சென்று,காலை உணவு முடித்து சீட்டிற்கு வர 930-945 ஆகிவிடும். அதற்குப்பிறகு இ-மெயில் செக் செய்துவிட்டு, வந்துள்ள அனைத்து மெயில்களையும் படித்துவிட்டு,கஸ்டமரிடமிருந்து வந்த முக்கியமான மெயில்களை உடனடியாக 'டீமுக்கு' அனுப்பிவிட்டு, அதையும்விட முக்கியமாக வந்துள்ள 'பார்வேர்ட்' மொக்கை மெயில்களை படித்து,சிறிதும் தாமதிக்காமல் நண்பர்குழுக்களுக்கு அனுப்பிவிட்டு, வழக்கமாக செய்திகளைப்பார்க்கும்,rediff,தினமலர், தட்ஸ்தமிழ், தமிழ்மணம், விகடன், குமுதம் என மேய்ந்துவிட்டு 'வாட்சை'ப்பார்த்தால்,1030am ஆகிவிட்டிருக்கும்.உடனடியாக ஒரு காப்பி ப்ரேக் 11 மணிவரையில்.ஏதாவது டீம் மீட்டிங் இருந்தால் 11 மணிக்குமேல் செல்வதும், இல்லையேல், இருக்கும்வேலைகளை இன்றே செய்யலாமா? இல்லை பிறகு பார்த்துக்கொள்ளலாமா என்ற யோசிப்பிலேயெ மதிய உணவுக்கு சென்றுவிட்டு நிதானமாக ஒரு 2 மணியளவில் சீட்டிற்குவந்து, உண்டமயக்கத்தில்,கடனேயென அன்றைய வேலையை ஆரம்பித்து ஒரு 7-8 மணிவாக்கில் அன்றையதினம் முடியும்(இடையில் காப்பி ப்ரேக்,கடலை ப்ரேக்,ஸ்நாக்ஸ் ப்ரேக் என ஏகப்பட்ட தடங்கல்கள் வேறு).

ஜப்பானியர்களைப்போல நாமும் வேலை நேரத்தில் வேலைகளை மட்டும் பார்த்தால் எங்கேயோ போய்விடுவோம்.நம்மிடம் உள்ள இன்னொரு கெட்டப்பழக்கம் எந்தவேலையையும் தள்ளிப்போடுவது,அதற்குப்பிறகு அடித்துப்பிடித்து கடைசி நிமிடங்கள்வரை பயங்கர டென்சனோடு வேலைப்பார்ப்பது. இன்னொரு முக்கியமான வேறுபாடு,ஜப்பானியர்கள் hard-workers ஆனால் smart-workers கிடையாது.ஆனால் இந்தியர்களோ எடுத்துக்கொண்ட வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்கள்(smart workers-இதற்கு ஒரு முக்கியக் காரணம்,நம்முடைய கணித அறிவு & we are good at logical thinking.ஜப்பானியர்களுக்கு machine-dependency அதிகம்.ஒரு சிறியக் கணக்குப்போடக்கூட 'கால்குலேட்டர்' தேடுவார்கள்),ஆனால் 'எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனோபாவத்துடன், வேலைகளைத் தள்ளிப் போடுவது நம்முடைய பலவீனம்.

இவ்வளவுத்தூரம் நான் மேலே எழுதியிருப்பதற்கு காரணம்,முன்பே கூறியுள்ளதுப்போல, IT துறையில்,ஜப்பானியக் கஸ்டமரோடு வேலைப்பார்ப்பது கடினம்,அவர்களைத் திருப்திபடுத்துவது மிகமிகக் கடினம் என்றக் கருத்தை வலியுறுத்தவே...

மேற்க்கூறிய கருத்துகளில் அசையா நம்பிக்கை வைத்திருந்த நான் அமெரிக்காவில் இரண்டரை ஆண்டுகளும்,இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளும் 'இந்தியன் கஸ்டமரோடு' வேலைப்பார்த்தப் பின்பு,என் முந்தையக் கருத்துகளிலிருந்து எவ்வித நிபந்தனைகளுமின்றி பின்வாங்கிவிட்டேன்.அமெரிக்காவில் உள்ள IT கம்பெனிகளிலிருந்து, இந்தியாவில் உள்ள 'IT services' கம்பெனிகளோடு இணைந்து 'customer' என்ற நிலையில் பணிப்புரியும் இந்தியர்களைவிட ஜப்பானியக் கஸ்டமர்கள் 100..இல்லை 1000 சதவிகிதம் மேலானவர்கள்.
இது உண்மை....உண்மை...உண்மை...இதற்கு ஒரு மிகவும் முக்கியமானக் காரணம்...அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....

அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில்....

disclaimer : கடந்த பாகத்தில் IT துறையில் கன்னடர்களின் பங்குக் குறித்து எழுதுவதாகக் கூறியிருந்தேன்.ஆனால்,கன்னடமக்களின் சதவிகிதம் IT துறையில் மிகக்குறைவு என்பதும்,நானும் அவர்களுடன் சேர்ந்து வேலைப்பார்த்தது மிகவும் குறைவு என்பதால் அதைப்பற்றி விரிவாக எழுத எதுவுமில்லை...நிறைவுப் பகுதியில் சிலக்குறிப்பிட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
>பாகம் 5


(தொடரும்)

August 31, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 5

இது என்னுடைய 50வது பதிவு.....

முன்பே குறிப்பிட்டதுப்போல் தெலுங்குதேச மக்களுக்கு இணையாக அல்லது மிகக்குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் IT துறையில் கொடிநாட்டுபவர்கள் தமிழர்கள். மற்ற மாநில மக்களுக்கு இணையாக பெரியப்பொறுப்புகளில் சம அளவில் திறைமையாக செயல்படுகிறார்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது,குழுமனப்பான்மை,தன் மாநில/இன மக்களை ஆதரிப்பது தமிழினத்தில் குறைவுதான். அதற்கான பலக்காரணங்களில் ஒரு காரணம், தான் தன் இனத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற ஒரு எண்ணம். இது தமிழக மக்களுக்கே உள்ள பொதுவான குணமோ? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இந்தக்குழு மனப்பான்மை,ஆரம்பக்கட்டத்தில் 'fresher' ஆக இருக்கும்போது மிக அதிக அளவில் இருப்பதில்லை. காலேஜிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்திருப்பதால், அந்த சூழலையே இங்கும் தொடர்கிறார்கள்.ஆனால்,ஒரு டீம் லீட், டேமேஜர் என ஆகும்போது ஆட்டோமெடிக்'காக வேறு நிலைக்கு சென்றுவிருகிறார்கள்.

அதேப்போல் ஆங்கில மோகம் (அல்லது) தமிழில் இன்னோரு தமிழரோடு, அவர் தமிழர் என நன்றாகத்தெரிந்தும் பொதுவான விஷயங்களைக்கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது நம் மக்களிடம் அதிகம் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட இருவர் ஒரே 'ப்ராஜக்ட்'ல் இருந்தால், சகஜமாகத் தமிழில் பேசக் கொஞ்சம் காலமாகிறது. மற்ற மொழிக்காரர்கள் இதில் பெரிதும் மாறுப்பட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூக்காக ஒருக்கல்லூரிக்கு சென்றிருந்தேன். என்னுடன் ஒரு சிங்'கும் (சிங்கம் இல்லைங்க !!!) பேனலில் வந்திருந்தார். இரவு உணவு முடித்துவிட்டு காலேஜ் கேம்பஸ்'சை வலம் வந்தபோது, எதிரில் மூன்று பஞ்சாபிகள் வந்தார்கள். இரண்டுப் பெரியவர்கள், ஒரு மாணவன். தலையைப்பார்த்தவுடன் அவர்கள் மாநிலத்தவர் எனத்தெரிந்துக் கொண்டு, பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு சிறிது நேரம் பேசிப்பின்பு விடைப்பெற்றனர். அதன்பிறகு நான் நம்ப சிங்'கத்திடம் கேட்டேன்,என்ன உங்களுக்கு தெரிந்தவர்களா? என்று. அதற்கு அவர் சொன்னார்,இப்போதுதான் முதல்முறை சந்தித்தோம்.அவர்கள் அவர் பையனை இந்தக்கல்லூரியில் சேர்க்க வந்துள்ளார்கள்.அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்,எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னுடன் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்',எனச் சொன்னார். இப்படிப்பட்ட மனப்பான்மை நம்பவர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என நமக்கேத்தெரியும்.

நான் சிலவருடங்களுக்கு முன்பு டெவலப்பராக இருந்தபோது, புது டேமேஜராக தமிழர் ஒருவர் சேர்ந்தார்.அவருக்கு பேங்களூர் புதுசு அப்போது.ஒருமுறை ரிலீஸ் இருந்ததால் இரவுமுழுவதும் வேலை இருந்தது. டின்னருக்காக நானும் இன்னொரு தமிழ் நண்பரும் கேன் டீன் செல்லக் கிளம்பினோம். அப்போது அங்குவந்த டேமேஜரும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். வேறுவழியில்லாமல் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அவருக்கு அவர் தங்கும் ஏரியாவில் காய்கறிகள் எங்கு கிடைக்கும் என்று சரியாகத்தெரியவில்லை. அதைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அன்றுக்காலையில் அவர் ஏதோ ஒருக்காயை வாங்க வேண்டுமெனத் தேடியதாகவும்,கிடைக்கவில்லை எனக்கூறினார். அது என்னடா,பெங்களூரிலே கிடைக்காத காய் என ஆச்சர்யப்பட்டு அவரிடமேக் கேட்டோம். அவருக்கு அதற்கு சரியான ஆங்கில வார்த்தை சொல்லமுடியாமல்,இவ்வாறு சொன்னார்...' you know,its a long one.... green color' ... இது என்னடா..பச்சைப்பாம்பைச் சொல்றாரா... எங்காவது சீனாவிற்க்கு long-term assignment போய்ட்டு வந்துவிட்டாரா?" என நினைத்துக்கொண்டே....'கொஞசம் விளக்கமாகச் சொல்லுங்க'னு கேட்டோம்... அதற்கு..." you know,we can prepare sambar using that....imm.... hey... by one of the Bakiya raj movie, this vegitable became very popular' எனச் சொன்னார்... 'முருங்கைகாயா?' என தமிழிலேயேக் கேட்டோம்.... அப்போதும் 'உஜாலா'விற்கு மாறாமல்.. 'yaya...you are rite' னு வழிந்தார்... அப்போதிருந்து அவரை 'பாக்கியராஜ்'னு டீமி'ல் ஓட்டிக்கொண்டிருந்தோம்(அவருக்கு தெரியாமல்தான்...).

இந்த ஆங்கிலத்தில் பேசும் மோகம்(????) வடத்தமிழகத்திலிருந்து(சென்னையும்...அதைச்சார்ந்த மாவட்டங்களும்...)வந்து 'பொட்டித்தட்டும்' மக்களிடம்,கொஞ்சம் அதிகமாக இருக்கிறது... தென்தமிழகப் பாசக்கார பயல்களிடம் தமிழ் மொழிப்பாசம் கொஞ்சம் அதிகம்தான்....அதற்கு ஒரு முக்கியக்காரணம், பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும்வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இருப்பதும், அதை ஒரு மொழியாகக் கற்றுப் பழகாமல், ஒரு subject' ஆக பாஸ் பண்ணால் போதுமென மக்'கடிப்பதே. அதேப்போல் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்றக்கட்டாயம்,பள்ளிக் கல்லூரி படிப்புகள் முடிக்கும்வரை ஏற்ப்படுவதில்லை. வேலைக்கு செல்லும்போதுதான் அதற்க்கான சந்தர்ப்பமே அமைகிறது.

நானே ஆங்கிலத்தில் தட்டுதடுமாறிப் பேச ஆரம்பித்தது 'பொட்டித்தட்டும்' தொழிலுக்கு வந்தப்பிறகுதான். ஆரம்பக்காலத்தில் இந்தக்குறையே,என்னை பிற மாநில மக்களோடு சகஜமாகப் பேசிப்பழகும் தன்னம்பிக்கையைக் கொடுக்கவில்லை. பிறகு ஜப்பான்,அமெரிக்கா என கட்டாயமாக ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய இடங்களில் சில வருடங்கள் பணிப்புரிந்தப் பிறகு சரியாகிவிட்டேன்.

வேலை விஷயத்தில்,கொடுத்த வேலையை கொஞ்சம் 'ப்ரஷர்' கொடுத்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடும் திறமை நம் மக்களுக்கு உண்டு. மேனேஜ்மெண்ட்' வேலைகளைவிட, டெக்னிக்கல் பொறுப்புகளை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.

முந்தையப்பதிவில், மலையாள/அழகான வட இந்தியப்பெண்களிடம் கடின வேலையைக் கொடுத்தால், குறிப்பிட்ட வெளையில் அந்த வேலை முடிக்கப்பட்டு விடும் என்றும், அந்தவேலையைச் செய்தவர்கள் யாரென்பது,அந்தப் பெண்ணோடு யார் அடுத்த நாள் 'லஞ்ச்'க்கு செல்கிறார்களோ அவர்களே எனச் சொல்லியிருந்தேன்....அப்படி கவனித்துப் பார்த்தால்...தமிழ் மக்களின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான்....( அலோ....யாருப்பா அது... நான் எத்தனை முறை அப்படி 'லஞ்ச்'க்கு போனேனு கேக்கறது???)

Disclaimer : ( இக்குழு மனப்பான்மை தமிழர்களுக்கு மிகக் குறைவு என சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் பங்குக் கொண்ட மல்லு நண்பர் ஒருவர் ' மல்லுகளிடம் தான் அந்த மன்ப்பான்மை மிகமிகக் குறைவு எனக்கூறி அதற்க்கான சான்றுகளையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்'. இதான் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதா???? )
அடுத்தப் பதிவில் கன்னட மக்களின் பங்கைப்பற்றி எழுதலாமென இருக்கிறேன்....

(தொடரும்....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

August 26, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
என் 9 வருட IT வாழ்க்கையில் ஏறத்தாழ 5 வருடங்கள் மலையாளதேச டெமெஜர்களுடன் கழித்துள்ளேன். குழுமனப்பான்மைக்கு இவர்களை விட்டால் ஆளில்லை.எல்லாவற்றிலும் அவர்கள் இனத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமைக்கொடுப்பார்கள். கஷ்டப்பட்டு ஜாவா,சி,சி++ மொழிகள் கற்றுக்கொள்வதற்கு பதில் 30 நாட்களில் மலையாளம் கற்றுக் கொண்டால் நம்முடைய கேரியர் புரோக்ரஷன் வேகமாக இருக்கும் என நண்பர்களுடன் சீரியசாக பலமுறை விவாத்திருக்கிறோம்.

இவர்கள் விஷயம் எப்படியென்றால்,ஏதாவதொரு முக்கியப்பொறுப்பில் ஒரு மலையாளி இருக்கிறார் என்றால்,அவருக்கு கீழேயுள்ள அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும்,குறைந்தது 80% மல்லுக்'களையே பார்க்கலாம்.அதற்குப்பிறகு அவர்கள் ராஜ்ஜியம்தான்.

நான் முன்பிருந்த க்ரூப்'பின் வைஸ் ப்ரசிடென்ட் ஒரு மல்லு.அவருக்கு டைரக்ட் ரிபோர்டீஸ்(group head,delivery head,solution head,program mgr etc)எல்லோருமே மல்லுஸ்தான்.ஒரே தமிழரும்,பெங்காலியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அவருக்கு கீழ் பணிப்புரிந்தார்கள்.அந்த க்ரூப்பில் வரும் progression, stock options,qurterly best performer awards எல்லாமே அவர்கள் மக்களுக்கு மட்டும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.

ஒருமுறை நண்பன் ஒருவர், ஒரு கேண்டிடெடை முதல்சுற்று இண்டர்வியூ செய்துவிட்டு அவருடைய மல்லு பாஸிடம் சென்று,அந்த கேண்டிடேட் பிலோ ஆவெரேஜ்'தான், நிராகரித்துவிடலாம் என சொல்லியிருக்கிறார், resume'யை வாங்கிப்பார்த்த அந்த மல்லு டேமேஜர் அவன் மல்லுவென தெரிந்துக்கொண்டு,'கேரளாவிலிருந்து வந்து இருக்கிறான், கண்டிப்பாக நன்றாக வேலை செய்வான்' எனச்சொல்லி அவனை தேர்வுசெய்யச் சொல்லி விட்டார். நண்பன் ஆடிப்போய்விட்டான்.

ஒரு டீம் மீட்டிங் எனப்போனால்,அங்கே பெரும்பாலும் மலையாளத்தில்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அதேப்போல் லன்ச்'க்கு போகும்போதும் அவர்கள் குழுவோடுதான் செல்வார்கள். தவறியும் வேறுயாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

வேலை விஷயத்தில் தெலுங்குதேச மக்களைவிட நன்றாக செயல் படுவார்கள்.ஆங்கிலம் பிரச்சனையாக இருக்காது,என்ன பிரச்சனையென்றால், எல்லாவற்றிலும் 'ஓ' சேர்த்து விடுவார்கள்.ஒரு மல்லுப்பொண்ணு ஒரு டீமி'ல் இருக்கிறது என்றால்,அனைத்து இள(ன)ங்காளைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அவள் வேலையை முடித்துக்கொடுத்துவிடுவார்கள்.

நான் கடந்த வருடம் ஒரு ப்ராஜக்டில் டேமேஜராக இருந்தப்போது, எல்லாக்கடினமான வேலையையும் ஒரு மல்லுப்பெண்ணிற்கு கொடுத்து விடுவேன்.வேலை சுலபமாக முடிந்துவிடும்.சிலசமயம் மாலை 5 மணிக்குமேல் வேலையைக்கொடுத்து(குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும் முடிப்பதற்க்கு) அன்றே முடிக்கச்சொல்லிவிட்டு 6மணிக்கு நான் கிளம்பிவிடுவேன்.அப்பெண்ணும் 6மணிக்கு கிளம்பிவிடும்.ஆனால் அடுத்த நாள் காலையிலே அந்தவேலை முடிந்துவிட்டிருக்கும்.யார் அந்தவேலையை முடித்தார்கள் என்பது,அந்தப்பெண் 'லன்ச்'க்கு யாருடன் அன்று செல்கிறாள் எனப்பார்த்தால் விளங்கிவிடும். சில சமயங்களில் இந்த லாஜிக் அழகான வட இந்தியப்பெண்களுக்கும் பொருந்தும்.

அடுத்தப் பதிவில்(என்னுடைய வெற்றிக்கரமான 50வது பதிவு) 'தங்கத் தமிழனின்' சேவை/லீலைகளைப் பற்றி எழுதுகிறேன்...
(தொடரும்...)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

August 25, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3

பாகம் 1 பாகம் 2
கொல்கத்தாவிலிருந்து USA தலைநகரான ஹைதராபாத் வர முதலில் ப்ளைட்தான் தேர்வுசெய்திருந்தேன்.ஒரு மாறுதலுக்காக ரயிலில் பயணம் செய்யலாமென முடிவு செய்து ரயிலில் வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை! ( அடப்பாவி, வாரயிறுதி முழுவதும் இழுத்துப்போர்த்தி தூங்கிவிட்டு,போதாக்குறைக்கு நேற்று முழுவதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு,இப்படி ஒரு பில்டப்பா??? )...ஒகே..ஓகே...இப்ப நம்ப கதையைப் பார்க்கலாம்...
IT துறையில் தமிழர்களுக்கு இணையாக,இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட அதிக சதவிகிதத்தில் கோலோச்சுபவர்கள் தெலுங்குமக்களே....எல்லாப்புகழும் சந்திரபாபு'காருக்கே.... ஆந்திராவிலிருந்து ஏதாவது ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் எந்த ஆணைக்கேட்டாலும்,பெரும்பாலானவர்கள் அவர்கள் லட்சியமாக கூறுவது...எப்படியாவது என்ஜினியரிங் முடித்துவிட்டு,முடிந்தால் கேம்பஸில் ஏதாவது ஒரு MNC'யிலேயோ அல்லது service company'யிலோ வேலை வாங்கி இந்தியாவில்,பல்லைக்கடித்துக்கொண்டு 2-3 வருடங்களைக் கழித்துவிட்டு ஏதாவதொரு வழியில் US-longterm வாங்கிக்கொண்டு US சென்றுவிடவேண்டியது,அல்லது குறைந்தப்பட்சம் 2-3months shortterm assigment'ஆக US போய்விட்டு வந்து US Return என்ற 'tag'கோடு, உடனடியாக பெண்பார்த்து லட்சக்கணக்கான(சிலருக்கு கோடிக்கணக்கில்) வருமானத்துடன் வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டியது. இதுதான் பெரும்பாலோனோரின் குறைந்தப்பட்ச லட்சியம்.
மேலும் இந்திய கம்பெனி வழியாக H1B-BL1 விசாவோ வாங்கி அங்கு சென்றுவிட்டு, project ஏதாவதொருக்காரணத்தால் close ஆகிவிட்டால்,அங்கிருந்தே ரிசைன் செய்துவிட்டு ஏதாவதொரு கன்சல்டன்சி கம்பெனி வழியாக வேறு வேலைக்கு தாவிவிடுவதில் முதலிடம் ஆந்திர மக்களுக்கே (நம்மவர்கள் இரண்டாமிடம்). மேலும் அவர்கள் சேரும் கன்சல்டன்சி கம்பெனிகள் பெரும்பாலும் ரொம்ப நாளைக்கு முன்னால் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்ட ஆந்திர'வாடுவின் கம்பெனியாக இருக்கும்(இந்த கன்சல்டன்சி கம்பெனி எனும் போர்வையில் இவர்கள் காசுப் பண்ணும் வித்தைகளை விரைவில் எழுதுகிறேன்).

கேம்பஸில் வேலைக்கிடைக்காதோர் அல்லது அவர்கள் 'மார்க்கெட் வேல்யுவை' அதிகப்படுத்த விரும்புவோர் தெர்ந்தெடுக்கும் அடுத்தவழி 'அமெரிக்காவில் மேற்படிப்பு'(பெரும்பாலும் MS). அமெரிக்காவின் ஏதாவதொரு யுனிவர்சிட்டியில் இடம்பிடித்து அங்கு செல்வதற்கான விசா,தங்கும் இடம்,செலவுக்கான பணம்/வேலை ஆகியவவைகளை தயார் செய்துவிட்டு அங்கு சென்று விடுவார்கள். படிப்பு முடிந்தவுடன் மேற்சொன்ன 'கன்சல்டன்சி கம்பெனி' வழியாக ஏதாவதொருக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.பிறகு வழக்கம்போல போட்ட முதலை,வட்டியுடன் எடுக்க,கல்யாணம்,கச்சேரி,பிறகு க்ரீன்கார்டுக்கான கடும்தவம்.

அமெரிக்கா செல்வதற்கான முதல்படி விசா(H1B/BL1/Business/student visa) வாங்குவது.விசா பெறுவதற்கான முதற்கட்ட வேலைகளை முடித்து, சென்னையில் உள்ள US கவுன்ஸ்லெட்டில் இண்டர்வியு தேதி முடிவானவுடன்,பெரும்பாலான ஆந்திரவாசிகள் படை எடுப்பது 'விசா பாலாஜி (அ) விசா வெங்கனா'யை தரிசிக்க ஹைதராபாத் அருகிலுள்ள 'ச்சில்கூரு'க்கு. இந்தக்கோயிலுக்கு சென்று வேணடிக்கொண்டால் விசா கிடைப்பதில் எந்தச்சிக்கலும் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.விசாக்கிடைத்து ப்ளைட் டிக்கெட்,கிளம்பும் தேதி முடிவானவுடன் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் கண்டிப்பாக உண்டு.

நான் சிறிதுக்காலம் technical interview panel'ல் இருந்தேன்.சில HR மக்களிடமும் நல்ல பழக்கம் உண்டு.வரும் resume'க்களில் fake மிக அதிக சதவிகிதம் ஆந்திரமக்களிடமிருந்துதான்(வழக்கம் போல நம்மவர்கள் இரண்டாம் இடம்). அவர்கள் போட்டிருக்கும் யுனிவர்சிட்டி,வேலை செய்ததாகப் போட்டிருக்கும் கம்பெனிகள்(பெரும்பாலும் மன்னார்&கம்பேனியாக இருக்கும்) ப்ளாக்லிஸ்ட் பண்ணப்பட்டிருக்கும். இதில்தப்பி முதல்சுற்றுக்கு தேறுபவர்கள் டெக்னிக்கல் இண்டர்வியூக்கு வருவார்கள்.நான் வழக்கமாக அவர்கள் வேலை செய்த கடைசி புராஜக்ட் பற்றி விளக்க சொல்வேன்...அதிலேயே அவர்களின் திறைமை விளங்கிவிடும். ஒருமுறை தெலுங்குதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்திருந்தார்.அவரின் resume'வை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,tellme abt u' என்றுக் கேட்டுவிட்டு resume'வைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் resume'ல் என்ன படித்துக்கொண்டிருந்தேனோ,அதையே வார்த்தை மாறாமல், வரிபிசகாமல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா இது,சந்திரமுகியில் ரஜினி,வடிவேல் மனசில் நினைப்பதையெல்லாம் சொல்வதுபோல இந்தப்பெண்ணும் சொல்லுதே, ஏழாவதறிவு ஏதாவது வேலைச்செய்கிறதா என நிமிர்ந்துப் பார்த்தால், அவர்மடியில் ஒரு பைலை வைந்துக்கொண்டு,அதிலிருந்த மற்றோரு resume copy'யை பார்த்து சின்சியராக படித்துக்கொண்டிருந்தார்.நான்கேட்ட ஒரு சின்னக்கேள்விக்கு எவ்வளவு சின்சியரா பதில் சொல்றாங்க... இவங்க ரோ...ம்ம்ம்ம்ப நல்லவங்க'னு அத்தோட அந்த இண்டர்வியுவை முடித்துவிட்டேன்.

சமீபத்தில் ஒருக்கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூக்காக சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட 25 பேரை இண்டர்வியூ செய்து ஒரு 12 பேரை தேர்வுசெய்தேன்.அது தமிழகத்தில் உள்ள தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி(மேலும் அடியேன் ஒருகாலத்தில் படித்துப்பட்டம் பெற்றக்கல்லூரி).ஒரு 10 பேரைப் பார்த்தப்பிறகு 11வதாக ஒரு மாணவர் வந்தார்.ஹைதராபாத் சொந்த ஊர் என்றும், எங்கள் கம்பெனியில் வேலைப்பார்ப்பது லட்சியம் என்றும் சொன்னார்.நானும் வழக்கமாக மற்றவர்களைக் கெட்டக்கேள்விகளையே கேட்க ஆரம்பித்தேன்.எதற்கும் தெளிவான பதிலில்லை. ஆவரேஜ் லெவலில்கூட இல்லாததால்,அவரிடம் நீ தேர்வுபெறவில்லை,இப்போது போகலாமென கூறினேன்.அவ்வளவுதான்...அழும் நிலைக்கு சென்றுவிட்டார்...எப்படியாவது என்னை தேர்வு செய்துவிடுங்கள்,கம்பெனியில் சேர்வதற்க்கு முன்பு நன்றாகப் படித்து விடுகிறேன்' எனக்கூறி விடாப் பிடியாக அறையைவிட்ட வெளியே செல்லாமல் அடம் பிடித்தார்... இது என்னடா வம்பாப் போச்சி'யென வெளியிலிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டு அம்மாணவரை வெளியேற்றினேன்.

வேலை விஷயத்தில் பெரும்பாலான 'சுந்தர தெலுங்கர்கள்' அபொவ் ஆவெரெஜ் லெவலில் உள்ளார்கள்.ஒருவிஷயத்தை ஒருமுறைக்கு இருமுறை சொல்லவேண்டும்.மேலும் தொடர்ந்தக் கண்காணிப்பும் இருக்கவேண்டும்,இல்லையேல் சொதப்பிவிடுவார்கள். ஆங்கில அறிவிலும், தமிழ்நாட்டின் இரண்டாம்/மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துவரும் மக்கள் அளவுக்கு சிரமப் படுவார்கள்.development project'ஐவிட maintenance project'ல் போட்டுவிட்டால் ஓரளவிற்கு சிரமமில்லாமல் இவர்களை வைத்து வண்டியை ஓட்டிவிடலாம்.மொழிப்பாசம் மற்ற இனத்தவர்களைப்போல இவர்களுக்கும் உண்டு,team'ல் அவர்கள் இனத்தினருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
சமீபத்தில் முடிந்த 'appraisal cycle'ன்போது, என்னுடன் பணிப்புரியும் தெலுங்குதேச அன்பர் ஒருவர் வந்து அளாவளாவிக்கொண்டிருந்தார்.எப்போதும் வழியிலோ அல்லது ஏதாவதொரு மீட்டிங்கிலோ சந்தித்துக்கொண்டால் 'ஹாய்''பை' என்ற அளவில்தான் எங்கள் தொடர்ப்புஇருக்கும்.இப்போது வழக்கத்திற்க்கு மாறாகத்தானாக வந்துப்பேசிக் கொண்டிருக்கிறாரே என்ன விஷயம் எனக்கேட்டதற்க்கு அவருக்கு தெரிந்தவரின் 'appraisal' என்னிடம் வந்து இருப்பதாகவும்,பார்த்துப்போடுமாறும் கூறினார்.நானும் பார்த்துப் "போட்டு" விட்டேன்.;)).
இந்தியாவில் தெலுங்கு மக்களுடன் வேலைப்பார்த்ததைவிட அமெரிக்காவில் 3 வருடம் 'மடிப்பொட்டி' தட்டியபோது ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது,அதைப்பற்றி விரைவில் எழுதுகிறேன்.அடுத்தப்படியாக,ஹைதராபாத்திலிருந்து கொச்சினுக்கு செல்லலாமென இருக்கிறேன்...

(தொடரும்...)
பாகம் 1 பாகம் 2

August 22, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 2

முதல் பதிவிற்கு இங்கே போகவும்...

நேற்றைய பதிவில் ஜாதிவித்தியாசம் என்பது மற்றதுறைகளோடு ஒப்பிடும்போது, IT துறையில் மிகவும் குறைந்தபட்சமே உள்ளது என முடித்திருந்தேன்.அந்த குறைந்தப்பட்சமும் வெளிப்படையாக தெரிவது 'அவாளி'டம் மட்டும்தான். அதனாலான பாதிப்புகள் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,IT துறையில் மிகவும் குறைவுதான்.ஆகவே அதைப்பற்றிய விவாதங்களை தொடர விரும்பவில்லை.

பின்னூட்டமிட்ட நண்பர்கள் மாநிலவாரியான அணுகுமுறை பெருமளவில் இருப்பதாக சொன்னார்கள்..உண்மைதான்...நானும் அதைப்பற்றிதான் எழுதப்போகிறேன்.மேலும் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணிப்புரிந்தபோது,அங்குள்ள கம்பெனிகளில் பணிபுரியும் நம்தேச மக்கள், அவர்களின் இன உணர்வையும்,மாநில பாசத்தையும்,குறுக்குவழியில் பணம் பார்க்கும் திறமையையை பற்றியும் எழுதலாம் என இருக்கிறேன்.

வடக்கு,தெற்கு என பாகுபடுத்துவது,இந்திய அரசியல் முதல்கொண்டு,அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறக்கும் அணுகுமுறை. அதற்கு IT துறையும் விதிவிலக்கல்ல.ஆனால் ஒட்டு மொத்த IT மக்கள்தொகையில் வடக்கத்திய மாநிலங்களிலிருந்து பணிப்புரிவோரின் சதவிகிதம்,தென்மாநில மக்களின் சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது,மிகவும் குறைவுதான்.

அக்குறைந்த வடக்கத்திய மக்களில் கோலோச்சுவது 'பெங்காலி' மக்கள்.பேச்சில் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது.வெறும் கையில் முழம் போடுவதில் திறைமைசாலிகள். மற்றவர்களை எப்படிப் பயன்படுத்தினால் தான் முன்னேறமுடியும் என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார்கள். எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமாக 'ரிஸ்க்' எடுப்பது அவர்களுக்கு
'ரஸ்க்(ரசகுல்லா)' சாப்பிடுவதுபோல...இதில் அதிசயம் என்னவென்றால்,பெரும்பாலான சமயங்களில் அதில் அவர்கள் வெற்றியடைந்து விடுவதுதான்.அதற்கு காரணம்,முன்பே குறிப்பிட்டதுபோல,மடுவையும்,மலையாக காட்டும் அவர்களின் பேசும்திறமைதான்.

நான் 'பொட்டிதட்டும்' கம்பெனியில், சிறிதுகாலம் ஒரு 'பெங்காலி' டேமேஜருடன் வெலை செய்துக்கொண்டிருந்தேன். அவருடைய IT அறிவு எப்படிப்பட்டது என்றால், testing team அவரிடம் வந்து black box,white box testing செய்யவேண்டும் என்று சொன்னால், அந்த இரண்டு box'ம் வாங்குவதற்கான செலவு 'estmation sheet'ல் சேர்த்துவிட்டாயா? என கேட்டு அவர்களின் ஏழாவதறிவை சோதிப்பார்.ஒருமுறை 'SDLC process'ஐ optimize செய்யப்போகிறேன் என களத்தில் குதித்து, அதைப்பற்றிய விவாதத்தின்போது, sequence, class,activity diagram'போன்ற design phase' வேலைகளையெல்லாம் 'requirement phase'லயே செய்யனும்னு ஒரு பெரிய புரட்சியே பண்ணினார்.இதுபோல இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள்.

ஆனால் இம்மாதிரியான 'அதிமேதாவிதனமெல்லாம்' தனக்கு கீழே வேலைச் செய்பவர்களிடம்தான். அவருடைய பாஸ்'க்கோ அல்லது கஸ்டமர்கான பிரசண்டேசனுக்கோ, அதற்கு தேவையான விவரங்களை அவருக்கு கீழே வேலைப்பார்க்கும் நம்மைப்போன்ற பேசாமடந்தைகள் தலையில கட்டி,அவர்களிடமே விவரங்களை கேட்டுக்கொள்வார்.மீட்டிங் செல்லும்போதும்,நம்மை துணைக்கு அழைத்துக்கொண்டு, நம்மிடம் தெரிந்துக்கொண்ட விவரங்களை,யாருக்கும் எளிதில் புரிந்துவிடாதவண்ணம் எடுத்துவிட ஆரம்பித்தாரென்றால், 'என்னமா பேசுரான்...இவன் பேசுரது நம்பளுக்கு ஒன்னும் புரியமாட்டங்குதே...நமக்குதான் டெக்னாலஜி டச் விட்டுப்போச்சோ...இவன் ரொம்...ப புத்திசாலிடா..' என கேட்பவர்களின் கான்பிடன்ஸ் லெவலையே காலிப்பண்ணிவிடுவார்.இதிலும் மயங்காத சில புத்திசாலி கஸ்டமர்கள்,அவர் சொல்வதைப் புரிந்துக்கொண்டு சில ஆழமான கேள்விகள் கேட்கும்போது, 'இதெல்லாம் ஒரு கேள்வி,இதற்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும்,என்கீழ் வேலை செய்பவனே பதில் சொல்லிவிடுவான்' என ஒரு நக்கல் புன்னகையுடன் நம்பக்கம் கைக்காட்டி விடுவார்.இப்படிப்பட்ட திருவிளையாடல்களால், சில ஆண்டுகளுக்கு முன்பு 'டேமேஜராக' சேர்ந்தவர் இப்போது 'குரூப் ஹெட்'டாக உயர்ந்துவிட்டார்.very high growth rate....

அவர்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களைக் கைத்தூக்கிவிடுவதிலும் வல்லவர்கள்.அதேபோல் நான் புடித்த முயலுக்கு இரண்டரைக்கால்தான் என சாதிப்பதிலும்,அதை மறுப்பவர்களை வன்மம் கொண்டு சரியான நெரத்தில் மட்டம் தட்டுவதிலும் மன்னர்கள்.சில நேரங்களில் அவர்கள் 'ஈகோவே' அவர்களை படுகுழியிலும் தள்ளியிருக்கிறது.

மொத்தத்தில்,முன்பே குறிப்பிட்டதுபோல 'வெறும் கையில் முழம்' போடும் பேச்சாற்றல், விளைவைப் பற்றிக்கவலைப் படாமல் துணிந்து 'ரிஸ்க்' எடுப்பது,'ஈகோ' என கலந்து செய்த கலவைதான்...பெங்காலிகள்....

பெங்காலிகள் தவிர இதர வடமாநில IT மக்களோடு நான் வேலை செய்தது மிகவும் குறைவு.ஆகவே 'கொல்கத்தா'விலிருந்து 'ப்ளைட்' பிடித்து நேராக 'USA'க்கு அடுத்த பதிவில் இறங்குகிறேன்....

உங்கள் கவனத்திற்கு... IT'ல் USA என்றால் 'United state of Andhra pradesh'

அடுத்தப்பதிவில் USA'ல உங்களை சந்திக்கிறேன்..........

முதல் பதிவிற்கு
இங்கே போகவும்...

(தொடரும்)

August 21, 2008

நீயா...நானா? - ஜாதிகள் இல்லையடி பாப்பா...ஆனால் ???

கடந்தவார விஜய் டிவி நீயாநானா நிகழ்ச்சியில் அலுவலகத்தில் ஜுனியர் சீனியர்களுக்கிடையேயான உறவு பற்றி சுடச்சுட விவாதித்தார்கள். அப்போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி,இனம்/ஜாதி அடிப்படையில் சீனியர்கள் அவர்களின் இனத்தை சார்ந்தவர்களை சப்போர்ட் செய்கிறார்களா?

இக்கேள்விக்கு பதில் அளித்தோர் அம்மாதிரியான பாகுபடுத்தும் பாங்கு பெரும்பாலான துறைகளில் இருப்பதாக தெரிவித்தார்கள்.அந்த கேள்வி எனக்குள்ளும் எழுத்தது. நான் கடந்த பல வருடங்களாக 'பொட்டி' தட்டிக்கொண்டிருக்கும் IT துறையில் இந்தக்கேள்விக்கான பதில் என்ன?

என் அனுபவத்தில், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மிகமிகக் குறைவாகவேதான் இருக்கிறது.அதற்கு முழுமுதற்காரணம்,இங்கு யாருக்கும் கூடவேலை செய்பவர் என்ன ஜாதி என்று அறிந்துக்கொள்ளவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை.வேலை செய்யும் சூழலிலும் அதை வெளிப்படுத்துவதற்கான எவ்வித முகாந்திரமும் சிறிதளவும் இல்லை.IT துறையில் உள்ளோர் பெருமளவில் இளையவயதினராக இருப்பதும்,அவர்களின் திறமையையும், செயல்படும் திறனையும் கொண்டே அவர்களின் வளர்ச்சி(பெரும்பாலும்) நிர்ணயிக்கப்படுவதால் ஜாதி என்ற ஒரு கேள்வி எங்கும் எழுவதில்லை.

ஒருவர் என்ன இனம் என்று வெளியுலகத்திற்க்கு வெளிப்படுத்துவதில் அவர்கள் அணியும் உடையும்,உணவுப்பழக்கவழக்கங்களுக்கும் ஒருபங்கு இருக்கிறது.ஆனால் உடை விசயத்தில், எல்லோரும் நன்றாக சம்பாதிப்பதால் மாடர்ன் உடைகள்,மற்றும் அலுவலகங்களில் ட்ரெஸ் கோட் இருப்பதால் அதற்கேற்றார்போல் உடுத்துவதால்,உடைகள்மூலம் யாரும் வேறுபடுத்தப்படுவதில்லை.
உணவு விஷயத்திலும்,அலுவலகத்தில் அனைத்துவகை உணவுகளும் கிடைப்பதாலும், சைவம், அசைவம் சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதால்,அவ்விதத்திலும் ஒருவர் சார்ந்துள்ள இனம் வெளிப்படுத்தப்படுவதில்லை.

இவைகள் எல்லாவற்றையும்விட, இன/ஜாதி அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கு இங்கு ஆப்பு என்பதால் ஒருவர் என்ன இனம் என்ற கேள்வி அவர்கள் இத்துறையில் காலடி எடுத்து வைக்கும்போதே அவர்கள் காலடியிலேயே மிதிப்பட்டு போகிறது.

ஆகவே பாரதி,காந்தி மற்றும் பல தலைவர்கள் கனவுக்கண்ட ஜாதியற்ற சமுதாயம், எல்லோரும் ஓரினம், லஞ்சலாவணியமற்ற துறை ஒன்று உருவாகிவிட்டதா??? அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என ஆனந்தமாக பாடுவதற்கான நிலைமையை அடைந்துவிட்டோமா? வேறு எவ்விதத்திலும் IT துறையில் பாகுபாடுகள் இல்லாமல் 'திறமைக்கு மட்டுமே முதலிடம்,வேறு எந்த தடைக்கற்களுமே இல்லை' என ஆணித்தரமாக அடித்துக்கூறும் நிலையில் இருக்கிறோமா???

(IT துறையில் உள்ள சில இருண்டப்பக்கங்களைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்...)

July 21, 2008

தசாவதாரம்...ரஜினி ரசிகனின் பார்வையிலிருந்து...

ஏற்கனவே பதிவுலகத்தில் உள்ள பெரும்பாலோர் அடித்து துவைத்து காயப்போட்டுவிட்ட தலைப்புதான்.இரண்டு மூன்று வாரங்களாகவே,வாரயிறுதியில் பார்க்கவேண்டும் என திட்டமிட்டு ஏதேதோ காரணங்களால் படம் பார்க்கமுடியவில்லை. மேலும் பதிவுலகம்,பத்திரிகைகள், தொலைகாட்சி விமர்சனங்கள்,நண்பர்களின் கருத்துகள் என எல்லா திசைகளிலிருந்தும் படத்தின் அனைத்து நிறைகுறைகளையும் காட்சிவாரியாக தெரிந்துவிட்டதால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை.

சனியன்று நண்பர்களின் குடும்பத்துடன் மாலை 4 மணிக்காட்சிக்கு PVR'ல் ஆன்லைன் மூலமாக பதிவு செய்துவிட்டு 340'க்கு சென்று தானியங்கி இயந்திரத்தில் கடனட்டையை சொருகினால் அது வேலை செய்யவில்லை.இரண்டு மூன்று இடங்களில் அலைந்து அங்குள்ள பணியாளர்கள் உதவியுடன் டிக்கெட் பெற்று அரங்குக்குள் செல்லும்போது 410 மணி.12 ம் நூற்றாண்டு காலத்து பாடல்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. விமர்சனம் செய்திருந்த அனைவரும் முதல் 10 நிமிடங்கள்தான் ஹைலைட் என சொல்லியிருந்தும் அக்காட்சிகளை பார்க்கமுடியாமல் போனது.ஆனால் பின்வந்தக் காட்சிகள் அக்கவலையை மறக்கச் செய்து,படத்துடன் ஒன்றிவிட்டேன்.இடைவேளைவரை துரத்தல்கள்,இரண்டுப்பாடல்கள்,சில கொலைகள், நாயுடுவின் டைமிங் காமெடிகள் என மூச்சுவிட நேரமின்றி பரபரப்பாக எவ்வித தொய்வுமின்றி படம் ஓடியது.

விமர்சித்திருந்த சிலர்,மல்லிகா ஷெராவத் பாத்திரம் சில காட்சிகளே வருவதாக கூறியிருந்தார்கள்.ஆகவே அவர் கெட்ட ஆட்டம் போட்ட பாடல் முடிந்தவுடன் அவரைக்காலி பண்ணி விடுவார்கள் என நினைததால்,அவர்தான் அவருடன் கெட்ட ஆட்டத்தை தொடர முயன்றவரை காலி பண்ணிவிட்டு சென்னை வழியாக சிதம்பரம் வந்து யானையால் காலியாகிவிடுகிறார்.கமல் படத்தில் இந்த அளவுக்கு அவருக்கு காட்சிகள் அமைந்ததே பெரிய விஷயம்தான்.

என்னைப்பொருத்தவரை கமல் போட்ட அனைத்து வேடங்களும் தேவையானவைதான்.எதுவும் வீண் இல்லை.எடுத்துக்கொண்ட கதைக்களம் 'கியாஸ்(கேயாஸ்??) தியரி'க்கு ஒவ்வொருப் பாத்திரமும் எடுத்துக்கொண்ட முடிவை(சுனாமி 26,2004) நோக்கி சரியான பாதையில் நகர்த்த உதவியிருக்கிறது. கதையை இன்னும் ரசனையுள்ளதாக்க தேவையிருந்திருந்தால் இன்னும் இரண்டு மூன்று வேடங்கள்[கோயில் யானை, இறந்துபோகும் குரங்கு வேடங்களை சொல்லவில்லை ;))))] கூட கமல் போட்டிருக்கலாம்.

இரண்டாம் பாதியில், முதல் 30-45 நிமிடங்கள் படம் கொஞ்சம் தொய்கிறது. கமலும்,அசினும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,என்னடா,திடீரென 'கிரேசி மோகன்' வசனகர்த்தா கமலின் பேனாவை பிடுங்கி எழுதியிருப்பாரோயென யோசிக்க வைத்தது. மறுபடியும் வில்லன் முழுவேகத்தில் காரியத்தில் இறங்கியவுடன் பிடிக்கும் வேகம்,சிறு புயலாகி பின் பெருத்த சூறாவளியென மாறி,சுனாமியாக பேயாட்டம் போட்டு அந்த சிலையை வெளிக்கொணர்ந்து வில்லனையும்,உயிரியையும் அழித்து கமல் அசின் 12ம் நூற்றாண்டுக் காதலின் அடுத்த அத்தியாயத்தை 21ம் நூற்றாண்டில் ஆரம்பித்து வைத்து தென்றலாய் முடிகிறது.

நான் ஒரு முழு ரஜினி ரசிகன். ஆரம்பக்காலத்தில் அடிமட்ட ரசிகனுக்கு இருக்கும்(இருந்த) கமல் துவேஷம் எனக்கும் இருந்தது.ஆனால் காலம் மாறி தமிழ் படவுலகைவிட்டு வந்து சில சிறந்த பிற மொழிப்படங்கள், அமெரிக்காவில் இருந்த 2-3 வருடங்களில் பார்த்த பல ஆங்கிலப்படங்கள், என் திரை ரசனையை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தின.ஆரம்பக்காலத்தில் குறைகளை கண்டறியவேண்டும் என்ற துவேஷத்துடன் பார்த்த பல கமல் படங்களை ஒரு சாதாரண திரைப்பட ரசிகன் என்ற பார்வையில் பார்த்தபோது,கமலஹாசன் எனும் கலைஞனின் கலைதாகமும்,அடுத்த நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற முயற்சியும்,அவரின் நடிப்பின் பல பரிமாணங்களும் தெரிந்தது. அவ்வகையில் 'தசாவதாரம்' நிச்சயமாக கமலின் மிக முக்கியமான ஒரு படைப்பு. குறை சொல்வதற்கான காரணங்கள் படத்தில் பல இருந்தாலும், ஒரு நல்ல படத்தை கொடுத்தக் காசுக்கு வஞ்சனையின்றி ஒய்வுப்பொழுதில் பார்த்து ரசிப்பதற்க்கு ஏற்றப்படம்தான்.
ஆகவே,விட்டக்காட்சிகளையும்,பரப்பரப்பான துரத்தல்களையும் மீண்டும் ஒருமுறை பார்க்க அடுத்தவாரக்காட்சிக்கு இப்போதே துண்டு போடவேண்டுமென முடிவு செய்துவிட்டேன்.

July 18, 2008

அணில்

அப்போது நான் ஐந்தாவதோ,ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் கும்பலாக கூடி ஏதோ பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். கும்பலுக்குள் நுழைந்து என்ன நடக்கிறது எனப்பார்த்தால், அண்ணனின் கையில் ஒரு குட்டி அணில் நடுக்கத்துடன் முடங்கிக்கிடந்தது. எப்படி வந்தது என விசாரித்ததில், ஒரு பூனையால் துரத்தப்பட்டு வீட்டுப்பரணில் ஏற முயன்று தவறிக் கீழே விழுந்ததில் அதன் ஒரு காலில் அடிப்பட்டு அதனால் ஓட முட்டியவில்லை. அவ்வேளையில் அண்ணன் பார்த்து, பூனையை துரத்திவிட்டதால்,அணில் உயிர் தப்பியிருந்தது.

சுற்றியுள்ள அனைவரும் ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு துணியை நீரில் நனைத்து அதன் காலில் கட்டிவிட்டார்கள். காயம் ஆறும்வரை வீட்டிலேயே இருக்கட்டும் என முடிவு செய்து, ஒரு சிறிய கூண்டில் விட்டார்கள். அது பசியாற பாலாடையில் பாலை ஊற்றி அதற்கு கொடுத்தார்கள். அணிலும் கொஞ்சமாக குடித்துவிட்டு கூண்டிற்குள் போய்விட்டது. ஒரு வாரம்,பத்து நாட்களில் அதன் காயம் சுத்தமாக சரியாகிவிட்டது. வேளாவேளைக்கு பழங்களும், குழந்தைகள் குடிக்கும் பால் பாட்டிலில் பாலும் குடிக்க பழகியிருந்தது. காயம் ஆறிவிட்டதால் எதற்கு அதை கூண்டில் அடைத்துவைக்கவேண்டும், அதன் போக்குக்கு விட்டுவிடுங்கள் போய் விடட்டும் என அம்மா சொல்லிவிட்டார்கள். கூண்டை திறந்ததும் உற்சாகமாக வெளியே வந்த அணில் அந்த அறைக்குள் இங்கும் அங்குமாக ஓடிவிட்டு அண்ணனின் மேல் ஏறி கையில் அமர்ந்துவிட்டது.அடுத்த இரண்டு மூன்று நாட்களாக சுதந்திரத்துடன் வீட்டில் ஓடியாடிக் கொண்டிருந்தது. அது எங்கள் வீட்டை விட்டு போகாது என்பது எங்கள் அனைவருக்கும் தெரிந்தது.



அடுத்து வந்த நாட்களில் அந்த அணில் குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தினமும் பள்ளிவிட்டு வந்ததும் எங்கள் மாலைப்பொழுதுகள், அதனுடன் விளையாடுவதிலேயே கழிந்தது. பள்ளிவிட்டு வரும்வழியில் விற்க்கும் பழங்களை வாங்கிவந்து அதற்கு ஊட்டிவிடுவது வாடிக்கையாகிவிட்டது. அது எங்கள் மேலெல்லாம் ஏறியிறங்கி விளையாடிக்கொண்டிருக்கும், அதற்கு பிடித்தமான உறங்குமிடம், எங்கள் சட்டையில் உள்ள மேல் பாக்கெட்.கை வழியாக மெலே ஏறி பாக்கெட்டில் நுழைந்து படுத்துக்கொள்ளும்.யாரவது கட்டிலில் படுத்திருந்தால் கட்டிலின் கால்வழியாக ஏறி அருகில் வந்து மேலே ஏறி விளையாட ஆரம்பித்துவிடும்.அணிலுக்கும் எங்கள் வீட்டிலுள்ள அனைவரையும் நன்றாக அடையாளம் க்ண்டுக்கொள்ள முடிந்தது. அம்மாவும், அண்ணனும்தான் அதற்கு பயங்கர பெட்' ஆகியிருந்தார்கள். நன்றாக சாப்பிட்டதால் பார்க்க அழகாக கொழுகொழு என ஆகியிருந்தது.
அப்பொது நாங்கள் மளிகைக்கடை வைத்திருந்தோம். பின்புறம் வீடும் முன்புறம் கடையும் ஒன்றாக இருக்கும். அம்மாவும் அண்ணனும் வீட்டுக்கும் கடைக்கும் போய்வரும்போது, அணிலும் அவர்கள் பின்னாலேயெ முன்னும் பின்னும் போய்வந்துக்கொண்டிருக்கும்... அதன் எதிரிகளான பூனையையோ, நாயையோ பார்த்துவிட்டால் வேகமாக ஓடி பரணிலோ,அல்லது வீட்டிலுள்ள யாராவது ஒருவரின் மேலோ ஏறிக்கொள்ளும். எங்காவது வெளியூர் சென்றால் அதுவும் ஒரு விருந்தினராக எங்களோடு விஜயம் செய்யும். பயணம் செய்யும் சமயங்களில் எங்களில் ஒருவரது சட்டைப்பையில்தான் வாசம் செய்யும்.கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் எங்கள் வீட்டில் அதன் ராஜ்ஜியம்தான்.
ஒருநாள் வீட்டில் அண்ணனைத்தவிர அனைவரும் வெவ்வேறு வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தர்ர்கள். அண்ணனுக்கு கடுமையான காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு போய்விட்டு வந்து மருத்துவர் குடுத்த மாந்திரைகளைப் போட்டுக்கொண்டு பெரிய கம்பளியை போர்த்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு கட்டிலில் படுத்து தூங்கிவிட்டார். வீட்டில் யாரையும் காணாத அணில் வழக்கம் போல கட்டிலில் ஏறி கம்பளிக்குள் புகுந்துக்கொண்டது. சிறிது நேரம் கழித்து தூக்கத்தில் அண்ணன் பு...ர...ண்...டு....ப் படுத்தார்.

July 15, 2008

இதற்கு என்னதான் தீர்வு ?

கடந்த வாரத்தில்,என் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு, லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள ஊரில் சிகிச்சைக்காக சென்றார்.அங்கு ECG எடுத்துப்பார்த்துவிட்டு bad cholesterol அதிக அளவில் இருப்பதால்தான் வலி ஏற்பட்டதாக கூறினார்கள். மேலும் பெங்களுரில் உள்ள 'இருதய' மருத்துவமனைக்கு referance letter கொடுத்து பரிசோதனைக்கு செல்ல சொன்னார்கள்.
இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால்,உடனடியாக பெங்களூர் வந்து அந்த மருத்துவமனைக்கு சென்றார்கள். செக்கப் செய்துவிட்டு, மேலும் சில டெஸ்ட் செய்ய இருப்பதால் ஒருநாளாவது இருக்கவேண்டும் என சொல்லி ஜெனரல் வார்டில் தங்க சொல்லிவிட்டார்கள். அன்று மாலைவரை பல்வேறு டெஸ்டு' செய்துவிட்டு, மருத்துவர் மேற்க்கொண்டு என்ன செய்வது என்று நாளை சொல்வார்கள் என சொல்லிவிட்டார்கள். அடுத்த நாள் ரவுண்ட்ஸ் வந்த முதல் மருத்துவர், அறிக்கைகளை பார்த்துவிட்டு,அபாயகரமாக எதுவும் இல்லை,உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் போதும் என சொன்னார். சிறிது நேரம் கழித்து,மற்றொரு மருத்துவர் வந்து பரிசோதித்து விட்டு,அதே கருத்தை தெரிவித்துவிட்டு சென்றார்.
அடுத்ததாக தலைமை மருத்துவர் ரவுண்ட்ஸ் வந்தார்.அவர்தான் கடைசியாக முடிவு செய்ய வேண்டியவர். அவரும்,அறிக்கைகளையெல்லாம் பார்த்தார்.எங்கிருந்து வருகிறீர்கள்,என்ன வேலை பார்க்கிறீர்கள்( ஆசிரியராக இருக்கிறார்) எனக்கேட்டுவிட்டு, கடைசியாக ஒரு குண்டைப் போட்டார். இதயத்தில் அடைப்பு இருக்கலாம் என சந்தேகப் படுவதாகவும், ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் உடனடியாக எடுக்கவேண்டும்,பணத்தைக் கட்டிவிடுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்.அதற்கு மட்டும் ரூ 10500 ஆகும் என தெரிவித்தார்கள்.
அவர்கள் வேண்டிய பணம் எடுத்து வராததால், என்னை வரசொன்னார்கள். நானும் அங்கு சென்று தலைமை மருத்துவரை சந்தித்தேன். மற்ற இருமருத்துவர்கள் எந்தப்பிரச்சனையும் இல்லை என சொல்லிவிட்டபிறகும் எதற்கு ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுக்கவேண்டும் எனக் கேட்டதற்க்கு, 'இதய அடைப்பு இருப்பதாக தான் கருதுவதாகவும், அதனால் மாரடைப்பு எப்போதுவேண்டுமானாலும் ஏற்படலாம் என சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு எந்த விளக்கங்களையும் தரவில்லை. மற்ற இருமருத்துவரர்களையும் சந்திக்கவும் முடியவில்லை. வேறு வழியும் இல்லாததால்,அதுவரை ஆகியிருந்த செலவு,ஆன்ஜியோக்ராம் டெஸ்ட்'கான பணத்தையும் (ரூ 13000) 'கடன் அட்டை' வழியாக கட்டிவிட்டேன்.
அன்று மாலையே ஆன்ஜியோக்ராம் டெஸ்ட் எடுத்துவிட்டார்கள்.ஆனால் தலைமை மருத்துவர் இல்லாததால்,மறுநாள்தான் ரிசல்ட் சொல்லப்படும் என சொல்லிவிட்டார்கள். அன்று இரவும் அங்கே தங்கவேண்டியதாகிவிட்டது.
மறுநாள் அறிக்கையை பார்த்துவிட்டு,பெரிய அடைப்பு ஏதும் இல்லை, இருக்கும் badcholesterol 'ஐ மருந்துகள் மூலமாக சரிப்படுத்திவிடலாம் எனக்கூறி சென்று விட்டாராம். அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆக மாலை 7 மணிவரை ஆகிவிட்டது. மொத்தமாக ரூ 22000 வரை 2 நாட்களில் செலவானது.

இந்த நிகழ்ச்சியால்,எனக்கு எழுந்த கேள்விகள்...
1. எந்த அடிப்படையில் எடுக்கவேண்டிய சிகிச்சை முறைகள்,டெஸ்டுகள் முடிவாகிறது? 3 மருத்துவர்களில் ஒருவர் சந்தேகம் எழுப்பியதால், ரூ 10500'ம்,மேலும் ஒருநாள் தங்கலும் ஏற்பட்டது. வேண்டிய பணம் என்னால் உடனடியாக கொடுக்க முடிந்ததால்,டெஸ்ட் உடனடியாக எடுக்க முடிந்தது. இல்லையெனில் வேறு ஏற்பாடு செய்யவோ, சில நாட்கள் கழித்தோ,வேறு மருத்துவமனையிலோ டெஸ்ட் எடுத்திருக்க வேண்டும்.ஆனால்,அந்த மருத்துவர்,மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என பயமுறுத்திய பிறகு,தள்ளிப்போடும் முடிவை எப்படி எடுக்க முடியும்?

2. ஒருவேளை வசதியில்லாதோர் இந்த நிலைமைக்கு ஆளானால் அவர்கள் கதி என்ன?
3. மருத்துவர் சரியான விளக்கம் தராததால், அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்துவிட்டு வேறு ஒரு மருத்துவமனைக்கு சென்றால், கண்டிப்பாக,முதல் மருத்துவமனையில் எடுதத எந்த அறிக்கையையும் பார்க்காமல், அதே டெஸ்டுகளை இங்கேயும் ஒருமுறை எடுக்க சொல்ல மாட்டார்கள் என என்ன நிச்சயம் ?
4. பணவசதியிருந்தும், தலைமை மருத்துவர் சரியான விளக்கம் தராததாலும்,மற்ற இரு மருத்துவர்களும் ஏதும் இல்லை என்று சொல்லிவிட்டதால் வீட்டிற்கு வந்துவிட்டு,சில நாட்கள் கழித்து நிஜமாகவே பிரச்சனையாகி ஏதாவது இழப்பு ஏற்பட்டால் என்ன ஆவது?

இப்போதுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள், சேவை என்பதையே மறந்துவிட்டு, மருத்துவ தொழிலை பெரும் வியாபாரமாக பார்க்க தொடங்கிவிட்டார்கள். அங்கு செல்பவர்களை,மனரீதியான நெருக்கடிக்கு தள்ளி,அவர்கள் சொல்லும் சிகிச்சைமுறைகளை செய்வதை தவிர வேறுவழியில்லை என்றாக்கிவிடுகிறார்கள்.

இதற்கு என்னதான் தீர்வு ?

நீ பாதி...நான் பாதி...

பழகிய காலத்தில்
என்னில் பாதி நீ என்றாள்...
திருமணத்திற்கு பிறகு,
அவள் பிள்ளையின் பெயரில்
பாதியாகிப் போனான்...

July 9, 2008

BSNL-நம்பினால் நம்புங்கள்...

கடந்த ஏப்ரல் மாதத்தில் அதுவரை தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, அங்கிருந்து 6 கிமீ தொலைவில் வெறொரு வீட்டிற்க்கு குடிபெயர்ந்தேன். வீட்டில் இருந்த BSNL landline,broadband இணைப்பை புது வீட்டிற்க்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து BSNL அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திலேயே கொடுத்திருந்தேன். மே மாதம்வரை எந்த சத்தமும் காணோம். customer service'ஐ அழைத்து சொன்ன உடன், புதிதாக குடியேறியுள்ள பகுதியில் உள்ள BSNL அலுவலகத்தை அணுக சொல்லி,நம்பரையும் கொடுத்தார்கள்.
மே மாத முதல் இரண்டு வாரங்களில் தினமும் அவர்களை அழைத்து, என் BSNL இணைப்பு புது வீட்டிற்க்கு எப்போது கிடைக்குமென கேட்டுக்கொண்டிருந்தேன். எவ்விதமான பாசிடிவ் பதிலும் இல்லை. சனிக்கிழமைகளில் அவ்வலுவலகத்திற்கே நேரடியாகப் படையெடுக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக எங்கள் தெருவுக்கு பொறுப்பான லைன்மேனை சந்தித்து எப்ப்போது போன் லைன் கொடுக்கப்போகிறீர்கள் எனக்கேட்டதற்க்கு, உங்கள் வீட்டிற்க்கு 2 முறை வந்தேன்.வீட்டில் யாருமில்லை என விட்டேத்தியாக பதில் வந்தது( என்னுடடைய தாயார் 24*7 வீட்டில்தான் இருப்பார்கள்). வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு, மறுபடி எப்போது வருவீர்கள் என்றதற்க்கு,அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் வருவதாக வரம் தந்தார்.
அந்தவாரம் முழுவதும் போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததில் மனமிரங்கி(???) வெள்ளிக்கிழமை இணைப்பு வந்துவிட்டது.வெலையை முடித்துவிட்டு மொய் பணம் கேட்டுள்ளார்,என் தாயார் ரூ 100 கொடுத்தற்க்கு,இவ்வளவுதானா? என நக்கலாக கேட்டுவிட்டு சென்றிருக்கிறார். ஒருவழியாக மே கடைசி வாரத்தில் இணைப்புக்கிடைத்து விட்டது.
நான் வீட்டிற்க்கு வந்து 'Broadband' இணைப்பை சோதித்தால் அது வேலை செய்யவில்லை. மறுபடியும் போன் வழியே படையெடுப்பு.ஒன்றும் நடக்கவில்லை. ஏர்டெல்'க்கு மாறிவிடலாமா என தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் அலுவலகத்தின் Intranet-forum'ல் ஒரு BSNL e-mail முகவரியை பார்த்தேன்.அந்த முகவரிக்கு புகார் அனுப்பினால் மாயம் நிகழும் என போட்டிருந்தார்கள். சரி முயன்றுதான் பார்க்கலாமே என முழுக்கதையையும் எழுதி அனுப்பினேன்.
இரண்டு நாட்களாக எந்த சத்தத்தையும் காணோம். 3ம் நாள் ஒரு இ-மெயில் வந்தது. "உங்கள் புகார்,பங்களூர் அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உங்களை தொடர்ப்பு கொள்வார்கள்" என்றிருந்தது. அட்லீஸ்ட் ஒரு பதிலாவது வந்ததேயென வீட்டிற்க்குப் போனால்,அதுநாள்வரை வெலை செய்துக்கொண்டிருந்த போன் 'கோமா' நிலைக்குப்போயிருந்தது.

உள்ளதும் போச்சடா...என்ற எரிச்சலுடன் மறுநாள் படுகாரமாக இன்னோரு இ-மெயிலை தட்டிவிட்டேன். அன்று மதியம் பங்களூர் BSNL அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து பேசசொன்னார்கள். முக்கியமான வேலையில் நான் மூழ்கியிருந்தால் அவர்களை தொடர்புக்கொள்ளவில்லை. மறுபடியும் வேறொருவர் BSNL'லிருந்து அழைத்து,மிகவும் மரியாதையுடன் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, நீங்கள் எப்பொது வீட்டிற்க்கு வருவீர்களென கேட்டார்கள். சரி என்னதான் நடக்கிறது பார்க்கலாமென,அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வருவதாக சொன்னேன். பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினேன். வீட்டை அடைவதற்குள்,3-4 மிஸ்டு கால். வீட்டை அடைந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டு நான் வீட்டிலிருப்பதாக கூறினேன். அடுத்த 5 நிமிடத்தில், 3 BSNL ஊழியர்கள் வந்து, 10 நிமிடத்தில் போன், broadband இணைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.அந்த 3 பேரில், முன்பு வந்த லைன்மேனும் இருந்தார், ஒரு வார்த்தைக்கூட பேசாமல்,இணைப்பைக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக வெலை செய்கிறதா என என்னிடம் ஒருமுறைக்கு இருமுறை சரிப்பார்க்க சொல்லி, மிக மரியாதையுடன் 'நன்றி' சொல்லிவிட்டு (பணம் எதும் கேட்க்காமல்) கிளம்பிச்சென்றார்கள்.

எனக்கு சில நிமிடங்கள் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா,இல்லை நடந்ததுயெல்லாம் ஏதாவது பகல்கனவா? என தெரியவில்லை. அடுத்த 2 நாட்கள் அவர்கள் போன் செய்து எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா எனவேறு விசாரித்தார்கள்.
இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்னவென்றால்,நான் புகார் அனுப்பிய இ-மெயில் முகவரி, டெல்லியில் உள்ள BSNL உயரதிகாரியின் ID. அவர் அங்கிருந்து பெங்களூர் அதிகாரிக்கு அனுப்பி follow-up செய்ததால்தான் மேற்கண்ட மாயாஜாலங்கள் நடந்தன.
ஒரு 10 நிமிட வேலைக்கு,கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நேரம் செலவிட்டு இருக்கிறேன். கடைசியாக மேலிடத்தில் புகார் செய்ததால் எல்லாம் விரைவில் முடிந்தது,இல்லையென்றால் இன்னும் எந்தனை வாரங்கள்,மாதங்கள் ஆகியிருக்குமோ?
பின்குறிப்பு : இத்தகவலை,என் நண்பர்களிடமும் சொல்லி,அவர்களும் புகார்களை இ-மெயில் தட்டிவிட்டதில், பெரும்பாலானவர்களின் BSNL பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன.

May 26, 2008

இருவர் !!

நீண்ட நாட்களாக பார்க்கவேண்டும் என்று எண்ணியிருந்தப் படம்,தொலைக்காட்சியில் பலமுறை ஒளிப்பரப்பியிருந்தும்,ஏதேதோ காரணங்களால் பார்க்கவேமுடியவில்லை. கடைசியாக கடந்த வார இறுதியில் பார்த்தேவிட்டேன்,DVD மூலமாக.

படம் பார்க்கவேண்டும் என தூண்டியவைகள்,

1.ஒரு (திமுக)கொடியில் பூத்த இருமலர்கள்,வெவ்வேறு துருவங்களாக மாறிய வரலாறு எந்த அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது ?

2. பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் மிகவும் இனிமையாக இருக்கும்,படத்தில் எந்த இடத்தில்,எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது ?

3. ஐஸ்வர்யா'வின் முதல் படம்

4. மணிரத்னத்தின் இயக்கத்தில்,சமீபத்திய திராவிட வரலாறு எவ்வாறு காட்சிப்படுததப்பட்டிருக்கிறது ?

5. மோகன்லால்,பிரகாஷ்ராஜின் நடிப்பு,நிஜத்துடன் எந்த அளவுக்கு ஒத்துப்போயுள்ளது ?

படம் 'அனைத்து சம்பவங்களும் கற்பனையே' என்ற டைட்டிலுடன் ஓடத்தொடங்கியது. மோகன்லால் படக்கம்பெனிகளில் வாய்ப்பு கேட்பது, சிறு வேடங்களில் நடிப்பது, ஒரு படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டு நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் அறிமுகம் ,திடீரென மோகன்லால்,ஐஸ்வர்யா; ப்ரகாஷ்ராஜ்,ரேவதி திருமண நிகழ்வுகள், படபிடிப்பு நின்றுபோவது, ஐஸ்வர்யாவின் காரணமே தெரியாத மரணம், லால் மீண்டும் சிறுவேடங்களில் நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் ரயில் மறியல் போராட்டம், நாசர் கட்சி ஆரம்பிப்பது என ஒரு கோர்வையேயில்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது,கடைசிவரை.

என்னுடைய முதல் கேள்விக்கான பதில் கடைசிவரை கிடைக்கவில்லை. எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் 1940-1987(மோகன்லால்/MGR நடிக்க ஆரம்பிப்பதிலிருந்து, மரணம் அடையும்வரை) ஏகப்பட்ட சம்பவங்கள் 'இருவர்' வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளன. திரைக்கதையில்,எதை எடுப்பது/விடுவது என்ற குழப்பம் இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது.அதே சமயத்தில் 'உண்மை சம்பவங்களை' எந்த அளவுக்கு காண்பிப்பது/மாற்றுவது ( முதல் தேர்தல் வெற்றிக்குப்பிறகு,நாசர்(அண்ணா) முதல்வராகாமல், ப்ரகாஷ்ராஜ்(கலைநர்) முதல்வராவது; இரண்டாவது ஐஸ்வர்யாவை(ஜெயலலிதா) விபத்தில் மரணமடைவதாக காண்பிப்பது) என்ற குழப்பமும் தெரிகிறது.மேலும் இவ்விருவரின் வாழ்க்கையின் பெரும்பாலான நிகழ்வுகள், அனைத்துதரப்பு மக்களும் ஆரம்பம் முதல் அறிந்ததே. படம் பார்க்கும் ரசிகன்,ஒவ்வொரு காட்சியையும், கேரக்டரையும், அவனுக்கு தெரிந்த நிஜத்துடன் ஒப்பிடும்போது பெருமளவு ஒத்துப்போகாதது,அவனுக்கு குழப்பத்தையே ஏற்ப்படுத்தி படத்தின் நம்பகத்தன்மை அடிப்பட்டு போகிறது. ஆனால் இந்த நிலைமை 'வீரப்பாண்டிய கட்டபொம்மனு"க்கோ, வீரசிவாஜிக்கோ ஏற்படவில்லை.ஏனெனில்,அவர்களின் வரலாறு நாம் புத்தகத்தில் படித்தோ,அடுத்தவர் சொல்லியோ கேட்டறிந்ததுதான்.படத்தில் அதே வரலாற்றை மிகைப்படுத்தியோ, மாற்றியோ காண்பிக்கும்போது சாதாரண ரசிகன் அதை ஏற்றுக்கொள்கிறான்.

பாடல்களை பொறுத்தவரை 'நறுமுகையே' பாடல் சிறத்தமுறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மதுபாலா,மோகன்லால் ஜோடியாக நடிக்கும் படப்பாடலை,மோகன்லால்,ஐஸ்வர்யா கல்யாண ஜோடியோடு mix செய்து அருமையாக வந்துள்ளது. 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே' (காலேஜ் ஆட்டோக்ராபில் 'கண்மணி' , 'நண்பனாக' மாறிவிட்டது) ஒரு சிறந்த கவிதைநடை.மற்றப்படி 'ஹ்ல்லோ மிஸ்டர் எதிர்கட்சி', 'ஆயிரத்தில் நான் ஒருவன்' பாடல்கள் சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவின் முதல் தமிழ்படம்,இருவேடங்களில். 'புஷ்பா' கேரக்டரில் அதிக வேலையில்லை. நடிகையாக,இரண்டாவது வேடத்தில் ரசிக்கும்படியான சில காட்சிகளில் நடித்துள்ளார்.கதாநாயகன் தளத்திற்கு வரும்போது மரியாதைக்கொடுக்காமல் இருப்பது, மோகன்லாலுடன் காதல்வசப்படுவது, கல்யாணத்திற்கு சம்மதித்து அரசியல் காரணங்களால், மணம் புரிந்துக்கொள்ளாத நாயகனை கட்சி அலுவலகத்தில் கேள்விகணைகளால் துளைப்பது, அடுத்த அரசியல்வாரிசாகாமல்(நிஜப்படி) விபத்தில் மறைவது என சொல்லும்படியான காட்சிகள். அவரின் அன்றைய அழகு இன்றுவரை எந்த மாற்றமுமின்றி பொலிவாகயிருக்கிறது.

மோகன்லால்,ப்ரகாஷ்ராஜின் நடிப்பு வழக்கம்போல,எடுத்துக்கொண்ட திரைக்கதைக்கு மிகாமல் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

மொத்தத்தில், 'இருவரின்' சமீபத்திய வரலாறை நன்கு அறிந்த சாதாரண ரசிகனின் (தொண்டன்) எதிர்ப்பார்ப்பை மணிரத்னம் நிறைவேற்றவில்லை.அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.

May 22, 2008

எனக்கு(ம்) விருப்பமில்லை...

"என் சிறந்த நண்பர்களில் நீ முதல்வன்!
வாழ்வின் எந்த நிலையிலும் நம் நட்பை
இழக்க எனக்கு விருப்பமில்லை"
நம் கடைசி சந்திப்பில் நீ உதிர்த்த வார்த்தைகள்,
இன்னும் என்னில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் நீதான் நட்பை விலக்கி,உலகின்
ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துவிட்டாய் !

February 25, 2008

கைக்கடிகாரம்

நிகழ்காலத்தைவிட
அவர்கள் பழகிய கடந்தகாலத்தையே காட்டுகிறது,
அவன் பரிசளித்த கைக்கடிகாரம்.

January 21, 2008

முடிவில்லா பயணம்.....

வேகமாக சென்றுக்கொண்டிருக்கும்
வாழ்க்கை பயணத்தில் ஒரு தடங்கல்...
அலசியபோது அற்புதமாயில்லை
நடந்துவந்த தடங்கள்...
காயப்பட்டிருக்கிறது நேசித்த
சில மனங்கள்;
வாழ்வின் நிலையாமையை நியாயப்படுத்திய
சில மரணங்கள்;
அனுபவிக்காமல் அலட்சியப்படுத்தப்பட்ட
பல அற்புத தருணங்கள்;
எனினும்,
சேருமிடம் அறியாமல்
முடிவைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறது தினங்கள்.