Search This Blog

November 17, 2008

இதுதான்டா வாழ்க்கை.......

வாழ்க்கை என்பதை காற்றில் ஐந்து பந்துகளைத் தூக்கிப்போட்டு விளையாடும் விளையாட்டாக கருதிக்கொள்வோம்.ஒவ்வொருப் பந்துக்கும் ஒரு பெயரும் வைப்போம்.







முதல் பந்து : வேலை


இரண்டாம் பந்து : குடும்பம்


மூன்றாம் பந்து : உடல்நலம்


நான்காம் பந்து : நண்பர்கள்


ஐந்தாம் பந்து : உத்வேகம்/தன்னம்பிக்கை



இப்போது அனைத்துப் பந்துகளும் காற்றில் உள்ளது. வாழ்க்கை எனும் விளையாட்டை விளையாடும்போது முதல் பந்தான வேலை என்பது ரப்பர் பந்து போன்றது.தவறவிட்டாலும், மீண்டும் கைக்கு வந்துவிடும் எந்தவித சேதாரமும் இன்றி.



ஆனால் இதரப் பந்துகளான குடும்பம்,உடல்நலம், நண்பர்கள்,உத்வேகம் போன்றவை கண்ணாடி பந்துகள் போன்றது.ஒரே ஒருதடவை ஏதாவது ஒரு பந்தைத் தவறவிட்டாலும் அது அடிப்பட்டுவிடும்.மீண்டும் பழைய நிலையை அடையவே முடியாது.



ஆகவே இதனால் அறியப்படும் நீதி யாதெனில்.....

மீண்டும் முதல் வரியிலிருந்து படிக்கவும்.....

---- எங்கேயோ படித்தது....