Search This Blog

April 25, 2009

என் ஜன்னலுக்கு வெளியே...

2005'லிருந்து 2008 வரை தினமணி,தமிழ்முரசு,புதியபார்வை,உயிர்மை மற்றும் அவர் வலைப்பதிவு என அரசியல்,சமூகம்,இலக்கியம்,வரலாறு என பலதரப்பட்ட தளங்களின் நிகழ்வுகள் பற்றிய மாலனின் கட்டுரைகளின் தொகுப்பு ச்என்ற புத்தகமாக 'கிழக்குப் பதிப்பகத்தால்' வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் தளத்தில் 2005'லிருத்து ஏற்பட்ட ஏகப்பட்ட நிகழ்வுகள்,கலைஞர் தலைமையிலான ஆட்சி,கலைஞர் குடும்பகுழப்பங்கள்.கவுடா குடும்ப அரசியல், அத்வானியின் ஜின்னா பற்றிய பேச்சினால் ஏற்பட்ட குழப்பங்கள், சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வன்முறை சம்பவங்கள்,காவிரி,ராமர் பாலம்,அணுஒப்பந்த சர்ச்சைகள்,கனிமொழியின் அரசியல் பிரவேசம் என சமகாலத்தில் நடந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களும் அதைப்பற்றிய மாலனின் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.பெரும்பாலான விஷயங்கள் சுவைப்பட எழுதப்பட்டுள்ளது.

சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகளான மும்பை தொடர் ரயில்குண்டு வெடிப்புகள்,தமிழககடலோர கிராமங்களின் சுனாமிக்குபிறகான வாழ்க்கைமுறைகள், குறிப்பாக ஒரு கடலோரகிராமத்தில் பத்தாவது படிக்கும் மாணவன்,அங்குள்ள குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர் கற்றுக்கொடுக்கும் செய்தி, சுனாமிக்குபிறகும் ஏன் இன்னும் மீன்பிடி தொழில் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்ற மாலனி கேள்விக்கு 'ஐயா,கடல் எங்களுக்கு அம்மா மாதிரி, இத்தனை வருடமும் அவதான் எங்களுக்கு சோறு போட்டிருக்கா,அன்னிக்கு அவளுக்கு ஏதோ கடும்கோவம்,அடிச்சிட்டா, அதனால அவள விட்டு போய்விடமுடியுமா' என்ற யதார்த்தமான பதில் பளீரென என்னை அறைந்தது.

'பாரதியின் மரணம் எழுப்பிய கேள்விகள்' என்ற கட்டுரை,திருவல்லிக்கேணியில் யானையால் தூக்கியெறியப்பட்டதால் பாரதி மரணமடைந்தார் என்று நினைத்துக்கொண்டிருந்த என் அறியாமையை தெளிவுப்படுத்தியது.

'மூளையை மட்டும் கழற்றி வைக்க முடிந்திருந்தால்..' என்றக்கட்டுரையில் மாலன் 'சிவாஜி' படம்பார்த்த அனுபவத்தையும் அதைச்சார்ந்த அவரின் அலசல்களையும் சொல்லியிருந்தார். காட்சிஅமைப்புகளும், கதையும் லாஜிக்கலாக இல்லை என்பது அவர் கருத்து. 'மாலன் அவர்களே, தமிழ்படங்களை,குறிப்பாக ரஜினி படங்கள்,அதுவும் சங்கர்(ஷங்கர்???) இயக்கிய படத்தில் லாஜிக் பார்ப்பது உம் தவறு.படம்பார்க்கும் மூன்று மணி நேரத்தில் திரையில் விரியும் சாகசங்களையும்,அழகி(????)களையும்,பர்ந்துபர்ந்து அடிப்பதையும், ஒரே பாட்டில்(பாட்டிலில் இல்லை.....) கட்டாந்தரையிலிருந்து, கோபுரத்திற்கு உயரும் மாயாஜாலத்தையும், இன்னபிற க்ராப்பிக்ஸ் கலக்கல்களையும் வாய்ப்பிளந்து பார்த்து,இனிமையாக பொழுதைக்கழிப்பதை விட்டுவிட்டு,யார் உங்கள் 'மூளையையெல்லாம் உபயோகப்படுத்தச் சொன்னது? (நான் ரஜினி ரசிகன் என்பது இங்கு தேவையற்ற தகவல்)

அரசியல் சார்ந்த 'நா காக்க' என்ற கட்டுரையில் 1971 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 'வங்கதேசம்' தொடர்பான போர் நடந்தசமயம் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனும்,இந்திராகாந்தியும் வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினர்,ஆனால் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.அந்த சமயத்தில் நிக்சன் அவர் உதவியாளரிடம் இந்திராவை 'கிழட்டு சூனியக்காரி' என திட்டி தீர்த்துள்ளார்.இதைப்பற்றிய விவரங்கள் ,அமெரிக்க அரசாங்க வழக்கப்படி 30 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டு சர்ச்சையானது நாம் அனைவரும் அறிந்ததுதான்.அந்த சமயத்தில் பிரிட்டன் சென்ற இந்திராகாந்தி பிபிசிக்கு பேட்டியளித்தார்,இந்தியா ஏன் வங்கதேசப்போர் விஷயத்தில் பொறுமைக்காக்கக்கூடாது எனற கேள்விக்கு இந்திரா 'பொறுமையாக இருந்தால் படுகொலைகள் நின்றுவிடுமா?கற்பழிப்புகள் நின்றுவிடுமா? கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?ஹிட்லர் படையெடுத்து வந்தபோது,யூதர்கள் சாகட்டும் என நீங்கள் பொறுமை காத்தீர்களா? என பொரிந்துதள்ளியுள்ளார்' என மாலனின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய நிலைமையில் இலங்கையிலும் மேலே இந்திராகாந்தி சொல்லியுள்ள நிலைமைதான்.ஆனால் இந்திராவின் மருமகளும்,தமிழகத்தலைவர்களும்,இலங்கையில் உள்ள கடைசித்தமிழனின் தலை வெட்டுப்பட்டு சாயும்வரை மிகவும் பொறுமையாக 'கடையடைத்தும்,உண்ணாவிரதம் இருந்தும்,தந்தியடித்தும்,தொலைக்காட்சிகளில் சிறப்புத்திரைபடம் காண்பித்தும் தங்கள் பொறுமையைக் காட்டி, 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்ற பழமொழிக்கு புதுஅர்த்தத்தை கற்பித்துக்கொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப்பார்த்தால்,'என் ஜன்னலுக்கு வெளியே' புத்தகம் கடந்த சில ஆண்டுகளில் நம்மைச்சுற்றி நடந்த விஷயங்களின் தொகுப்பை,நாம் கவனிக்கத்தவறிய சில செய்திகளையும்,மறந்துபோன/மருத்துப்போன நிகழ்வுகளையும் அசைபோடவைக்கிறது.


விவரங்களுக்கு http://nhm.in/shop/978-81-8493-063-4.html

April 20, 2009

டாடா நேனோ'வும்,நானும்...

இன்று அலுவலகத்தில் வழக்கமான வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது,அலுவலக நண்பர் ஒருவர் என்னிடம் வந்து,டாடா நேனோ கார் பார்வையாளர்களுக்காக அலுவலக கார் பார்க்கிங்கில் வைத்திருக்கிறார்கள்,பார்க்க செல்லலாமா என கேட்டார்....உடனே கிளம்பிச் சென்றோம்.

ஒரு பெரும்கூட்டம் காரைச்சுற்றி நின்றுக்கொண்டிருந்தது.வெளியிலிருந்து பார்க்கையில் ரொம்பக்குட்டியாய் தெரிந்த கார்,உள்ளே அமர்ந்துப் பார்த்த போதுதான் innovative design and quality of work தெரிந்தது.

உண்மையிலேயே மிகவும் சிறப்பாக வடிவமாக்கப்பட்டுள்ளது காரின் உள்புறமும்,வெளிப்புறமும்.பின்சீட்டில் என்னளவுள்ள மூன்று பேர் தாராளமாக அமரமுடிந்தது.

நான் ஏறக்குறைய ஆறடி உயரம்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால் மாருதி 800,ஆல்டோவில் கால்முட்டி முன்புறமுள்ள டேஷ்போர்டில் இடிக்கும்.அண்மையில் நண்பன் ஒருவனுக்கு கார் வாங்க அலைந்தபோது, மர்ருதி சுசூகியின் 'ஏ ஸ்டார்' ஓட்டிப்பார்த்தேன்.டிரைவர் சீட்டில் அமர்ந்தால், கால் முட்டி நன்றாக முன்புறத்தை இடித்தது. சீட்டை மிகவும் பின்னுக்கு தள்ளி அமர்ந்தாலும் முட்டி இடித்தது.கஷ்டப்பட்டுதான் ட்ரைவ் செய்ய முடிந்தது.

அதே எதிர்ப்பார்ப்புடன் நேனோ'வில் டிரைவர் சீட்டில் அமர்ந்தேன். எந்தவிதப்பிரச்சனையும் இல்லை.சீட்டும் பின் தள்ளாமல் இருந்தது.ஸ்டியரிங் வீலையும்,கியர்,கிளட்ச்,ஆக்சிலேட்டர் மற்றும் ப்ரேக் ஆகியவற்றை சிறந்த முறையில் கையாள(காலாள???) முடிந்தது.நான் கடந்த ஆறு மாதங்களாக hyundai-i10 ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.என் காரில்,டிரைவிங் சீட்டில் அமர்ந்தால் எந்த அளவுக்கு சவுக்கரியமாக உணர்வேனோ,அதே அளவு சவுக்கரியம் நேனோவிலும் இருந்தது.உண்மையிலேயே, டாடா என்சினியர்கள் சிறந்த தயாரிப்பை அளித்திருக்கிறார்கள். காரின் மற்றப்பகுதிகளும் சிறந்த முறையில் அமைக்கப்பெற்றுள்ளது.

காரின் ரிவர்யூ மிர்ரர்கூட தேர்ந்தமுறையில் அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஸ்டெப்னி டயர்,பெட்ரோல் போடுவதற்கான அமைப்பு ஆகியவை உள்ளது.ஒவ்வொருமுறை பெட்ரோல் போடும்போதும் காரின் முன்புறத்தை திறந்து மூடுவது ஒரு அசவுக்ரியமாக இருக்கும்.

காரின் வெளிப்புறத்தோற்றமும் மிகச்சிறப்பாக,ஒரு 'ரிச்லுக்' தருகிறது.கதவுகள்,சீட்கள் அனைத்தும் மிக மெலியதாக அமைக்கப்பட்டுள்ளது.வண்டி ஏதாவது ஆக்சிடென்ட் ஆனால் அப்பளம்கூட அல்ல,அணுஅணுவாக சிதைந்துவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

காரை இன்று ஓட்டிப்பார்க்கமுடியவில்லை,கூட்டம் அதிகமாக இருந்ததால்.நாளையும் காரை பார்வைக்கு வைக்க இருக்கிறார்கள்,அப்போது முயன்று பார்க்கவேண்டும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் 'டாடா' அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றியிருகிறார்கள் என்றே தோன்றுகிறது. குறுகிய தூர,வழக்கமான போக்குவரத்திற்கு ஏற்ற வண்டியாக நேனோ வெற்றிப்பெறும்.

April 14, 2009

அசல் குருவி - திரைவிமர்சனம்

அலுவல் நெருக்கடிகளாலும்,வேறு சில வேலைகளாலும்,ஆன்லைனில் டிக்கட் கிடைக்காததாலும், சரியான கம்பெனி அமையாததாலும்(போதும்பா பில்ட்அப்....),வழக்கமான சோம்பேறிதனத்தினாலும் (இதுதான் உண்மை...) படம் வெளியாகி ரொம்ப நாட்களாகனப்பிறகு சென்ற வெள்ளியிரவு நண்பனொருவன் டிக்கட் புக் செய்துவிட்டு அலைபேசியில் அழைத்தான். அன்று இரவு உணவும் அவன் வீட்டிலேயே என்று அழைத்ததால் வேறுவழியில்லாமல் அவன் வீடு சென்று ஒரு பிடிபிடித்துவிட்டு இரவு 10 மணிக்காட்சிக்கு நண்பனின் குடும்பத்தோடு படம் பார்க்கச்சென்றோம்.

பரபரப்பாக ஆரம்பித்தது படம்,அமெரிக்கன் இங்கிலீசில் பேசிக்கொண்டு ஏர்போர்ட்விட்டு வரும் நாயகன்,வெளியே வந்ததும் லோக்கல் இங்கிலிபீசில் பீட்டர் உட்டுக்கினு வராரு..மேட்டரு இன்னானா....நாளிக்கி காத்தாலிக்கா ரிலீசாகிற தலீவர் பட்த்தோட திர்ட்டு டிவிடி'ய மலேசியாலருந்து சுட்னுவந்து,லோக்கல் டமில்நாட்லே ரிலீஸ் பண்ற பிரபுகிட்ட அடியாளா மெயின்டைம் வேல(பார்ட்டைமா MSc compSci படிக்கிறார்)பாக்ராரு நம்ம ஹீரோ...நம்ம ஆளு சோக்கா CD'ஐ எட்துனு வந்தத பாத்து காண்டான வில்லன் போலிஸ்கிட்ட போட்டுகு(கெ)டுத்துற்றான்...போலிசு பக்காவா போயி எல்லாதியும் சீஸ் பண்ணி, ஒரிசினல் CD'ஐ ஜன்னல் வழியா வில்லன்கிட்ட குடுத்துற்றாங்கோ...அங்க ஆரம்பிக்ற சீனு...காங்கோ... மலேசியா, சென்னைனு சுத்தோ சுத்துனு சுத்து கட்சியா ஏர்போர்ட்ல வந்து முடியுது...

படத்தில் கதைன்னு தேடினால் மேற்கூறியவையும்,இன்னும் ஒரு 4 வரியும் சேரும்.ஆனால் திரைக்கதையிலும்,தேர்ந்த நடிப்பிலும்(சூர்யா,பிரபு & விஜய் டிவி நட்டு),சுமாரான இசையிலும் படத்தை தேத்திவிடுகிறார்கள். கில்லிக்கு பிறகு விறுவிறுப்பான படம்.சிறப்பான கேமிரா காட்சிகளும், புத்திசாலிதனமான திருப்பங்களும்,பரப்பரப்பான சண்டைக்காட்சிகளும், கிளுகிளுப்பான(????) தமனாவும் நம்மை போர் அடிக்கவிடாமல் நாற்காலியில் உட்கார வைத்துவிடுகிறார்கள்.

காங்கோவில் வரும் அந்த சண்டைக்காட்சி,ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் (கேசினோ ராயல்) சண்டைக்காட்சிக்கு சவால்விடும் விதத்திலும்,குருவி படத்தில் விஜய் போடும் சண்டைக்கு நக்கல்விடும் விதத்திலும் அமைந்துள்ளது.சூர்யாவின் இளமையும்,துடிப்பான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது. 'நேருக்கு நேர்' படத்தில் LKG'யாக இருந்த சூர்யா,இந்த படத்தில்
IIT'ல் GPA 10 வைத்திருக்கும் லெவலில் அசத்துகிறார்.

ஒட்டுமொத்தமா சொல்லனும்னா,கொடுத்த காசுக்கும்(நான் எங்க கொடுத்தேன்... சாப்பாடும் போட்டு,டிக்கட்டும் ஸ்பான்சர் செய்த நண்பன் அரவிந்த் வாழ்க....),செலவிட்ட 3 மணி நேரத்திற்கும் பங்கம் வராம 'இன்றைய பொழுது இனிதே கழிந்தது' என்ற நிறைவுடன் வரமுடிகிறது.

பார்த்த படத்தோட பேரு 'அயன்'... ஆக்சுவலா பார்த்தா இந்த படத்துக்கு 'குருவி'ங்ற பேரு ரொம்ப பொருத்தமா இருந்து இருக்கும்.ஆனா 'வருங்கால(வரும்'ங்கறீங்க?????????) சூப்பர்ஸ்டார்' இளைய தளபதி 'விஜய்' படத்தோட பேர்ல மட்டும் 'குருவி'ய வச்சிட்டு மத்ததெல்லாம்(நடிப்பு,கதை,திரைக்கதை) கோட்டைவிட்டதால படத்த ஊத்திமூடிட்டாரு... அதனாலதான் 'அயன்'னு சொல்லாம 'அசல் குருவி'னு தலைப்பு..(அட...'அசல்' தல அஜித் நடிக்கும் அடுத்த படம்.. தல'யின் அசல், குருவி மாதிரி இல்லாம இருக்க...வாங்க எல்லாரும் 'கூட்டு ப்ரார்த்தனை' செய்வோம்.

3 முட்டாள்கள் கடைசி பெஞ்சில்....

அது ஆண்களுக்கான ஆஸ்டல்.முதல்வருடம் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்கள் அவர்களின் சீனியர்களின் முன்பாக 'பிறந்தநாள் உடையில்' நின்றுக்கொண்டிருக்கிறார்கள்.ஒரு சீனியர் காலி கோக் பாட்டில்களை எடுத்து வருகிறான்..எதற்காக?

இவ்வாறு ஆரம்பிக்கும் கதை ,அந்த மூன்று நண்பர்களுக்கிடையே அரும்பும் நட்பு,பிரச்சனைகள்,கடினமான IIT வகுப்புகள், பழமையை போதிக்கும் புரபசர்கள்,விடுமுறை கொண்டாட்டங்கள், கண்டவுடன் காதல், நண்பர்களுக்கிடையேயான மோதல், குடும்பத்துக் குடைச்சல்கள்,நண்பர்களின் உதவிகள்,உபத்திரங்கள், தேர்வுகள்,தோல்விகள், தற்கொலை முயற்சிகள், சஸ்பென்சன்,காதல் தோல்வி என பலதரப்பட்ட பாதைகளில் பயணித்து சில ஆண்டுகள் அந்த மூன்று நண்பர்கள் கழித்த கல்லூரி வாழ்க்கையின் பரிமாணங்களைக் காட்டி வழக்கமான சுபமுடிவுடன் முடிகிறது.


நான் மழைக்குக்கூட IIT பக்கம் ஒதுங்கியது இல்லை.இஞ்சினியரிங் படிப்பையே ரொம்பக் கஷ்டப்படாமல் 4 வருடத்தில் எந்த அரியரும் வைக்காமல்(நம்புங்கப்பா.....நிஜமாத்தான்...) பாஸ் செய்துவிட்டு புத்தகங்களை தூக்கிப்போட்டதோடு சரி... இந்தக்கதையின் நாயகர்கள் என்னைப்போல ஒழுங்காக படிக்காமல்( டேய்...இதெல்லாம் ரொம்ப ஓவரு....) முதலாமாண்டிலிருந்தே குறைவான மதிப்பெண்கள் பெற்று GPA'வில் 5 க்கும் 6க்கும் நடுவில் அல்லாடுகிறார்கள். அவர்களின் நிலைக்கு IIT'யும் அதன் கடினமான பாடமுறைகளும்,புரபசர்களும் காரணம் என்ற கற்பிதத்தோடு, கல்லூரி வாழ்க்கையின் மற்ற சுகங்களை அனுபவிக்கலாம் என திசைமாறி போகிறார்கள்.


நாவலில் IIT வாழ்க்கையின் மறுபக்கங்கள் சிறப்பாக திறந்து காண்பிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் தனித்தன்மைக்கும், செயல்திறனுக்கும் வேலைக் கொடுக்காத கல்விஅமைப்பு,எதற்கும் உதவாத GPA சார்ந்த ரேட்டிங், மாணவர்களின் நலனில் அக்கறைக்கொள்ளாத புரபசர்கள் என பல்வேறு தளங்களில் பயணிக்கிறது.


கடைசிக்கட்டத்தில் GPA'வை உயர்த்த(இன்னொரு காரணம், ஹரி டாவடிக்கும் நேகா, இம்மூவரின் head of dept செரியனின் பெண், செரியனிடம் நல்ல பெயர் வாங்க,அவர் எடுக்கும் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற ஒரு வழி,கேள்வித்தாளை செரியனின் அறையிலிருந்து ஜூட் விடுதல்) கேள்வித்தாள்களை திருட மூன்று நண்பர்கள் போடும் திட்டமும், அதில் ஏற்பட்ட சொதப்பலால் மூவரும் மாட்டிக்கொண்டு ஒரு செமஸ்டர் சஸ்பெண்ட் ஆகிறார்கள்.


கடைசியாக அவர்கள் கொடுக்கும் project proposal வீரா என்ற புரபசரின் பரிந்துரையால் ஏற்க்கப்பட்டு அதை வெற்றிகரமாக முடித்து (சினிமாவாக எடுத்தால் இந்த நிகழ்வுகளை ஒரே பாடலில் முடித்துவிடலாம்,படையப்பா 'வெற்றிக்கொடி கட்டு' பாடல் பாணியில்) கேம்பஸில் வேலையும் வாங்கி எப்படியோ வாழ்க்கையில் செட்டில் ஆகிறார்கள்.


சேதன் பகத்தின் நாவல்கள் ஒரு மசாலா திரைப்படத்திற்கேயுரிய அனைத்து flavour'களையும் கொண்டுள்ளது.முதல் பக்கத்தை படிக்க ஆரம்பித்தால் முழு புத்தகத்தையும் முடிக்காமல் கீழே வைக்க முடிவதில்லை. ஒரு சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்கு படித்து முடித்து விட்டேன்...நோ காபி,நோ லஞ்ச்,நோ ப்ரேக்...


இந்த நாவலும் இந்தியில் அமீர்கான்,மாதவன் கரீனா கபூர் நடிப்பில் தயாரிப்பில் உள்ளது.திரைக்கதையை நன்றாக கையாண்டால் ஒரு நல்ல படம் கிடைக்கும். சமீபத்திய 'ஆனந்த தாண்டவம்'- சுஜாதாவின் பிரிவோம்,சந்திப்போம் நாவலை ஒட்டி எ(கெ)டுத்த படம்போல் சொதப்பாமல் இருந்தால் சரிதான்.


சேதன்பகத்தின் லேட்டஸ்ட் நாவலான 'Three mistakes of my life' அண்மையில் வாங்கிவிட்டேன்.படிக்கதான் இன்னும் நேரம் கிடைக்கவில்லை.கடந்த வாரயிருதியில் சாருநிவேதிதாவின் 'ராஸ லீலா' என் இரண்டு நாட்களையும் சாப்பிட்டுவிட்டது.

புத்தாண்டு வாழ்த்துக்கள்

இன்று பிறந்துள்ளது
'ஸ்ரீவிரோதி' ஆண்டு...
விரோதங்களை மறந்து,
துரோகங்களை துறந்து,
குரோதங்களை குறைத்து,
சொந்தங்களை அணைத்து,
பந்தங்களை பணிந்து,
நண்பர்கள் நலமாய்,
அன்பே சிவமாய்,
என்றும் வளமாய்
வாழ
இந்நன்னாளில்
என் இனிய
நல்வாழ்த்துக்கள்....