Search This Blog

August 31, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 5

இது என்னுடைய 50வது பதிவு.....

முன்பே குறிப்பிட்டதுப்போல் தெலுங்குதேச மக்களுக்கு இணையாக அல்லது மிகக்குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் IT துறையில் கொடிநாட்டுபவர்கள் தமிழர்கள். மற்ற மாநில மக்களுக்கு இணையாக பெரியப்பொறுப்புகளில் சம அளவில் திறைமையாக செயல்படுகிறார்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது,குழுமனப்பான்மை,தன் மாநில/இன மக்களை ஆதரிப்பது தமிழினத்தில் குறைவுதான். அதற்கான பலக்காரணங்களில் ஒரு காரணம், தான் தன் இனத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற ஒரு எண்ணம். இது தமிழக மக்களுக்கே உள்ள பொதுவான குணமோ? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இந்தக்குழு மனப்பான்மை,ஆரம்பக்கட்டத்தில் 'fresher' ஆக இருக்கும்போது மிக அதிக அளவில் இருப்பதில்லை. காலேஜிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்திருப்பதால், அந்த சூழலையே இங்கும் தொடர்கிறார்கள்.ஆனால்,ஒரு டீம் லீட், டேமேஜர் என ஆகும்போது ஆட்டோமெடிக்'காக வேறு நிலைக்கு சென்றுவிருகிறார்கள்.

அதேப்போல் ஆங்கில மோகம் (அல்லது) தமிழில் இன்னோரு தமிழரோடு, அவர் தமிழர் என நன்றாகத்தெரிந்தும் பொதுவான விஷயங்களைக்கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது நம் மக்களிடம் அதிகம் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட இருவர் ஒரே 'ப்ராஜக்ட்'ல் இருந்தால், சகஜமாகத் தமிழில் பேசக் கொஞ்சம் காலமாகிறது. மற்ற மொழிக்காரர்கள் இதில் பெரிதும் மாறுப்பட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூக்காக ஒருக்கல்லூரிக்கு சென்றிருந்தேன். என்னுடன் ஒரு சிங்'கும் (சிங்கம் இல்லைங்க !!!) பேனலில் வந்திருந்தார். இரவு உணவு முடித்துவிட்டு காலேஜ் கேம்பஸ்'சை வலம் வந்தபோது, எதிரில் மூன்று பஞ்சாபிகள் வந்தார்கள். இரண்டுப் பெரியவர்கள், ஒரு மாணவன். தலையைப்பார்த்தவுடன் அவர்கள் மாநிலத்தவர் எனத்தெரிந்துக் கொண்டு, பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு சிறிது நேரம் பேசிப்பின்பு விடைப்பெற்றனர். அதன்பிறகு நான் நம்ப சிங்'கத்திடம் கேட்டேன்,என்ன உங்களுக்கு தெரிந்தவர்களா? என்று. அதற்கு அவர் சொன்னார்,இப்போதுதான் முதல்முறை சந்தித்தோம்.அவர்கள் அவர் பையனை இந்தக்கல்லூரியில் சேர்க்க வந்துள்ளார்கள்.அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்,எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னுடன் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்',எனச் சொன்னார். இப்படிப்பட்ட மனப்பான்மை நம்பவர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என நமக்கேத்தெரியும்.

நான் சிலவருடங்களுக்கு முன்பு டெவலப்பராக இருந்தபோது, புது டேமேஜராக தமிழர் ஒருவர் சேர்ந்தார்.அவருக்கு பேங்களூர் புதுசு அப்போது.ஒருமுறை ரிலீஸ் இருந்ததால் இரவுமுழுவதும் வேலை இருந்தது. டின்னருக்காக நானும் இன்னொரு தமிழ் நண்பரும் கேன் டீன் செல்லக் கிளம்பினோம். அப்போது அங்குவந்த டேமேஜரும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். வேறுவழியில்லாமல் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அவருக்கு அவர் தங்கும் ஏரியாவில் காய்கறிகள் எங்கு கிடைக்கும் என்று சரியாகத்தெரியவில்லை. அதைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அன்றுக்காலையில் அவர் ஏதோ ஒருக்காயை வாங்க வேண்டுமெனத் தேடியதாகவும்,கிடைக்கவில்லை எனக்கூறினார். அது என்னடா,பெங்களூரிலே கிடைக்காத காய் என ஆச்சர்யப்பட்டு அவரிடமேக் கேட்டோம். அவருக்கு அதற்கு சரியான ஆங்கில வார்த்தை சொல்லமுடியாமல்,இவ்வாறு சொன்னார்...' you know,its a long one.... green color' ... இது என்னடா..பச்சைப்பாம்பைச் சொல்றாரா... எங்காவது சீனாவிற்க்கு long-term assignment போய்ட்டு வந்துவிட்டாரா?" என நினைத்துக்கொண்டே....'கொஞசம் விளக்கமாகச் சொல்லுங்க'னு கேட்டோம்... அதற்கு..." you know,we can prepare sambar using that....imm.... hey... by one of the Bakiya raj movie, this vegitable became very popular' எனச் சொன்னார்... 'முருங்கைகாயா?' என தமிழிலேயேக் கேட்டோம்.... அப்போதும் 'உஜாலா'விற்கு மாறாமல்.. 'yaya...you are rite' னு வழிந்தார்... அப்போதிருந்து அவரை 'பாக்கியராஜ்'னு டீமி'ல் ஓட்டிக்கொண்டிருந்தோம்(அவருக்கு தெரியாமல்தான்...).

இந்த ஆங்கிலத்தில் பேசும் மோகம்(????) வடத்தமிழகத்திலிருந்து(சென்னையும்...அதைச்சார்ந்த மாவட்டங்களும்...)வந்து 'பொட்டித்தட்டும்' மக்களிடம்,கொஞ்சம் அதிகமாக இருக்கிறது... தென்தமிழகப் பாசக்கார பயல்களிடம் தமிழ் மொழிப்பாசம் கொஞ்சம் அதிகம்தான்....அதற்கு ஒரு முக்கியக்காரணம், பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும்வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இருப்பதும், அதை ஒரு மொழியாகக் கற்றுப் பழகாமல், ஒரு subject' ஆக பாஸ் பண்ணால் போதுமென மக்'கடிப்பதே. அதேப்போல் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்றக்கட்டாயம்,பள்ளிக் கல்லூரி படிப்புகள் முடிக்கும்வரை ஏற்ப்படுவதில்லை. வேலைக்கு செல்லும்போதுதான் அதற்க்கான சந்தர்ப்பமே அமைகிறது.

நானே ஆங்கிலத்தில் தட்டுதடுமாறிப் பேச ஆரம்பித்தது 'பொட்டித்தட்டும்' தொழிலுக்கு வந்தப்பிறகுதான். ஆரம்பக்காலத்தில் இந்தக்குறையே,என்னை பிற மாநில மக்களோடு சகஜமாகப் பேசிப்பழகும் தன்னம்பிக்கையைக் கொடுக்கவில்லை. பிறகு ஜப்பான்,அமெரிக்கா என கட்டாயமாக ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய இடங்களில் சில வருடங்கள் பணிப்புரிந்தப் பிறகு சரியாகிவிட்டேன்.

வேலை விஷயத்தில்,கொடுத்த வேலையை கொஞ்சம் 'ப்ரஷர்' கொடுத்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடும் திறமை நம் மக்களுக்கு உண்டு. மேனேஜ்மெண்ட்' வேலைகளைவிட, டெக்னிக்கல் பொறுப்புகளை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.

முந்தையப்பதிவில், மலையாள/அழகான வட இந்தியப்பெண்களிடம் கடின வேலையைக் கொடுத்தால், குறிப்பிட்ட வெளையில் அந்த வேலை முடிக்கப்பட்டு விடும் என்றும், அந்தவேலையைச் செய்தவர்கள் யாரென்பது,அந்தப் பெண்ணோடு யார் அடுத்த நாள் 'லஞ்ச்'க்கு செல்கிறார்களோ அவர்களே எனச் சொல்லியிருந்தேன்....அப்படி கவனித்துப் பார்த்தால்...தமிழ் மக்களின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான்....( அலோ....யாருப்பா அது... நான் எத்தனை முறை அப்படி 'லஞ்ச்'க்கு போனேனு கேக்கறது???)

Disclaimer : ( இக்குழு மனப்பான்மை தமிழர்களுக்கு மிகக் குறைவு என சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் பங்குக் கொண்ட மல்லு நண்பர் ஒருவர் ' மல்லுகளிடம் தான் அந்த மன்ப்பான்மை மிகமிகக் குறைவு எனக்கூறி அதற்க்கான சான்றுகளையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்'. இதான் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதா???? )
அடுத்தப் பதிவில் கன்னட மக்களின் பங்கைப்பற்றி எழுதலாமென இருக்கிறேன்....

(தொடரும்....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

August 26, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
என் 9 வருட IT வாழ்க்கையில் ஏறத்தாழ 5 வருடங்கள் மலையாளதேச டெமெஜர்களுடன் கழித்துள்ளேன். குழுமனப்பான்மைக்கு இவர்களை விட்டால் ஆளில்லை.எல்லாவற்றிலும் அவர்கள் இனத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமைக்கொடுப்பார்கள். கஷ்டப்பட்டு ஜாவா,சி,சி++ மொழிகள் கற்றுக்கொள்வதற்கு பதில் 30 நாட்களில் மலையாளம் கற்றுக் கொண்டால் நம்முடைய கேரியர் புரோக்ரஷன் வேகமாக இருக்கும் என நண்பர்களுடன் சீரியசாக பலமுறை விவாத்திருக்கிறோம்.

இவர்கள் விஷயம் எப்படியென்றால்,ஏதாவதொரு முக்கியப்பொறுப்பில் ஒரு மலையாளி இருக்கிறார் என்றால்,அவருக்கு கீழேயுள்ள அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும்,குறைந்தது 80% மல்லுக்'களையே பார்க்கலாம்.அதற்குப்பிறகு அவர்கள் ராஜ்ஜியம்தான்.

நான் முன்பிருந்த க்ரூப்'பின் வைஸ் ப்ரசிடென்ட் ஒரு மல்லு.அவருக்கு டைரக்ட் ரிபோர்டீஸ்(group head,delivery head,solution head,program mgr etc)எல்லோருமே மல்லுஸ்தான்.ஒரே தமிழரும்,பெங்காலியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அவருக்கு கீழ் பணிப்புரிந்தார்கள்.அந்த க்ரூப்பில் வரும் progression, stock options,qurterly best performer awards எல்லாமே அவர்கள் மக்களுக்கு மட்டும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.

ஒருமுறை நண்பன் ஒருவர், ஒரு கேண்டிடெடை முதல்சுற்று இண்டர்வியூ செய்துவிட்டு அவருடைய மல்லு பாஸிடம் சென்று,அந்த கேண்டிடேட் பிலோ ஆவெரேஜ்'தான், நிராகரித்துவிடலாம் என சொல்லியிருக்கிறார், resume'யை வாங்கிப்பார்த்த அந்த மல்லு டேமேஜர் அவன் மல்லுவென தெரிந்துக்கொண்டு,'கேரளாவிலிருந்து வந்து இருக்கிறான், கண்டிப்பாக நன்றாக வேலை செய்வான்' எனச்சொல்லி அவனை தேர்வுசெய்யச் சொல்லி விட்டார். நண்பன் ஆடிப்போய்விட்டான்.

ஒரு டீம் மீட்டிங் எனப்போனால்,அங்கே பெரும்பாலும் மலையாளத்தில்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அதேப்போல் லன்ச்'க்கு போகும்போதும் அவர்கள் குழுவோடுதான் செல்வார்கள். தவறியும் வேறுயாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

வேலை விஷயத்தில் தெலுங்குதேச மக்களைவிட நன்றாக செயல் படுவார்கள்.ஆங்கிலம் பிரச்சனையாக இருக்காது,என்ன பிரச்சனையென்றால், எல்லாவற்றிலும் 'ஓ' சேர்த்து விடுவார்கள்.ஒரு மல்லுப்பொண்ணு ஒரு டீமி'ல் இருக்கிறது என்றால்,அனைத்து இள(ன)ங்காளைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அவள் வேலையை முடித்துக்கொடுத்துவிடுவார்கள்.

நான் கடந்த வருடம் ஒரு ப்ராஜக்டில் டேமேஜராக இருந்தப்போது, எல்லாக்கடினமான வேலையையும் ஒரு மல்லுப்பெண்ணிற்கு கொடுத்து விடுவேன்.வேலை சுலபமாக முடிந்துவிடும்.சிலசமயம் மாலை 5 மணிக்குமேல் வேலையைக்கொடுத்து(குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும் முடிப்பதற்க்கு) அன்றே முடிக்கச்சொல்லிவிட்டு 6மணிக்கு நான் கிளம்பிவிடுவேன்.அப்பெண்ணும் 6மணிக்கு கிளம்பிவிடும்.ஆனால் அடுத்த நாள் காலையிலே அந்தவேலை முடிந்துவிட்டிருக்கும்.யார் அந்தவேலையை முடித்தார்கள் என்பது,அந்தப்பெண் 'லன்ச்'க்கு யாருடன் அன்று செல்கிறாள் எனப்பார்த்தால் விளங்கிவிடும். சில சமயங்களில் இந்த லாஜிக் அழகான வட இந்தியப்பெண்களுக்கும் பொருந்தும்.

அடுத்தப் பதிவில்(என்னுடைய வெற்றிக்கரமான 50வது பதிவு) 'தங்கத் தமிழனின்' சேவை/லீலைகளைப் பற்றி எழுதுகிறேன்...
(தொடரும்...)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

August 25, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3

பாகம் 1 பாகம் 2
கொல்கத்தாவிலிருந்து USA தலைநகரான ஹைதராபாத் வர முதலில் ப்ளைட்தான் தேர்வுசெய்திருந்தேன்.ஒரு மாறுதலுக்காக ரயிலில் பயணம் செய்யலாமென முடிவு செய்து ரயிலில் வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை! ( அடப்பாவி, வாரயிறுதி முழுவதும் இழுத்துப்போர்த்தி தூங்கிவிட்டு,போதாக்குறைக்கு நேற்று முழுவதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு,இப்படி ஒரு பில்டப்பா??? )...ஒகே..ஓகே...இப்ப நம்ப கதையைப் பார்க்கலாம்...
IT துறையில் தமிழர்களுக்கு இணையாக,இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட அதிக சதவிகிதத்தில் கோலோச்சுபவர்கள் தெலுங்குமக்களே....எல்லாப்புகழும் சந்திரபாபு'காருக்கே.... ஆந்திராவிலிருந்து ஏதாவது ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் எந்த ஆணைக்கேட்டாலும்,பெரும்பாலானவர்கள் அவர்கள் லட்சியமாக கூறுவது...எப்படியாவது என்ஜினியரிங் முடித்துவிட்டு,முடிந்தால் கேம்பஸில் ஏதாவது ஒரு MNC'யிலேயோ அல்லது service company'யிலோ வேலை வாங்கி இந்தியாவில்,பல்லைக்கடித்துக்கொண்டு 2-3 வருடங்களைக் கழித்துவிட்டு ஏதாவதொரு வழியில் US-longterm வாங்கிக்கொண்டு US சென்றுவிடவேண்டியது,அல்லது குறைந்தப்பட்சம் 2-3months shortterm assigment'ஆக US போய்விட்டு வந்து US Return என்ற 'tag'கோடு, உடனடியாக பெண்பார்த்து லட்சக்கணக்கான(சிலருக்கு கோடிக்கணக்கில்) வருமானத்துடன் வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டியது. இதுதான் பெரும்பாலோனோரின் குறைந்தப்பட்ச லட்சியம்.
மேலும் இந்திய கம்பெனி வழியாக H1B-BL1 விசாவோ வாங்கி அங்கு சென்றுவிட்டு, project ஏதாவதொருக்காரணத்தால் close ஆகிவிட்டால்,அங்கிருந்தே ரிசைன் செய்துவிட்டு ஏதாவதொரு கன்சல்டன்சி கம்பெனி வழியாக வேறு வேலைக்கு தாவிவிடுவதில் முதலிடம் ஆந்திர மக்களுக்கே (நம்மவர்கள் இரண்டாமிடம்). மேலும் அவர்கள் சேரும் கன்சல்டன்சி கம்பெனிகள் பெரும்பாலும் ரொம்ப நாளைக்கு முன்னால் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்ட ஆந்திர'வாடுவின் கம்பெனியாக இருக்கும்(இந்த கன்சல்டன்சி கம்பெனி எனும் போர்வையில் இவர்கள் காசுப் பண்ணும் வித்தைகளை விரைவில் எழுதுகிறேன்).

கேம்பஸில் வேலைக்கிடைக்காதோர் அல்லது அவர்கள் 'மார்க்கெட் வேல்யுவை' அதிகப்படுத்த விரும்புவோர் தெர்ந்தெடுக்கும் அடுத்தவழி 'அமெரிக்காவில் மேற்படிப்பு'(பெரும்பாலும் MS). அமெரிக்காவின் ஏதாவதொரு யுனிவர்சிட்டியில் இடம்பிடித்து அங்கு செல்வதற்கான விசா,தங்கும் இடம்,செலவுக்கான பணம்/வேலை ஆகியவவைகளை தயார் செய்துவிட்டு அங்கு சென்று விடுவார்கள். படிப்பு முடிந்தவுடன் மேற்சொன்ன 'கன்சல்டன்சி கம்பெனி' வழியாக ஏதாவதொருக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.பிறகு வழக்கம்போல போட்ட முதலை,வட்டியுடன் எடுக்க,கல்யாணம்,கச்சேரி,பிறகு க்ரீன்கார்டுக்கான கடும்தவம்.

அமெரிக்கா செல்வதற்கான முதல்படி விசா(H1B/BL1/Business/student visa) வாங்குவது.விசா பெறுவதற்கான முதற்கட்ட வேலைகளை முடித்து, சென்னையில் உள்ள US கவுன்ஸ்லெட்டில் இண்டர்வியு தேதி முடிவானவுடன்,பெரும்பாலான ஆந்திரவாசிகள் படை எடுப்பது 'விசா பாலாஜி (அ) விசா வெங்கனா'யை தரிசிக்க ஹைதராபாத் அருகிலுள்ள 'ச்சில்கூரு'க்கு. இந்தக்கோயிலுக்கு சென்று வேணடிக்கொண்டால் விசா கிடைப்பதில் எந்தச்சிக்கலும் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.விசாக்கிடைத்து ப்ளைட் டிக்கெட்,கிளம்பும் தேதி முடிவானவுடன் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் கண்டிப்பாக உண்டு.

நான் சிறிதுக்காலம் technical interview panel'ல் இருந்தேன்.சில HR மக்களிடமும் நல்ல பழக்கம் உண்டு.வரும் resume'க்களில் fake மிக அதிக சதவிகிதம் ஆந்திரமக்களிடமிருந்துதான்(வழக்கம் போல நம்மவர்கள் இரண்டாம் இடம்). அவர்கள் போட்டிருக்கும் யுனிவர்சிட்டி,வேலை செய்ததாகப் போட்டிருக்கும் கம்பெனிகள்(பெரும்பாலும் மன்னார்&கம்பேனியாக இருக்கும்) ப்ளாக்லிஸ்ட் பண்ணப்பட்டிருக்கும். இதில்தப்பி முதல்சுற்றுக்கு தேறுபவர்கள் டெக்னிக்கல் இண்டர்வியூக்கு வருவார்கள்.நான் வழக்கமாக அவர்கள் வேலை செய்த கடைசி புராஜக்ட் பற்றி விளக்க சொல்வேன்...அதிலேயே அவர்களின் திறைமை விளங்கிவிடும். ஒருமுறை தெலுங்குதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்திருந்தார்.அவரின் resume'வை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,tellme abt u' என்றுக் கேட்டுவிட்டு resume'வைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் resume'ல் என்ன படித்துக்கொண்டிருந்தேனோ,அதையே வார்த்தை மாறாமல், வரிபிசகாமல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா இது,சந்திரமுகியில் ரஜினி,வடிவேல் மனசில் நினைப்பதையெல்லாம் சொல்வதுபோல இந்தப்பெண்ணும் சொல்லுதே, ஏழாவதறிவு ஏதாவது வேலைச்செய்கிறதா என நிமிர்ந்துப் பார்த்தால், அவர்மடியில் ஒரு பைலை வைந்துக்கொண்டு,அதிலிருந்த மற்றோரு resume copy'யை பார்த்து சின்சியராக படித்துக்கொண்டிருந்தார்.நான்கேட்ட ஒரு சின்னக்கேள்விக்கு எவ்வளவு சின்சியரா பதில் சொல்றாங்க... இவங்க ரோ...ம்ம்ம்ம்ப நல்லவங்க'னு அத்தோட அந்த இண்டர்வியுவை முடித்துவிட்டேன்.

சமீபத்தில் ஒருக்கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூக்காக சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட 25 பேரை இண்டர்வியூ செய்து ஒரு 12 பேரை தேர்வுசெய்தேன்.அது தமிழகத்தில் உள்ள தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி(மேலும் அடியேன் ஒருகாலத்தில் படித்துப்பட்டம் பெற்றக்கல்லூரி).ஒரு 10 பேரைப் பார்த்தப்பிறகு 11வதாக ஒரு மாணவர் வந்தார்.ஹைதராபாத் சொந்த ஊர் என்றும், எங்கள் கம்பெனியில் வேலைப்பார்ப்பது லட்சியம் என்றும் சொன்னார்.நானும் வழக்கமாக மற்றவர்களைக் கெட்டக்கேள்விகளையே கேட்க ஆரம்பித்தேன்.எதற்கும் தெளிவான பதிலில்லை. ஆவரேஜ் லெவலில்கூட இல்லாததால்,அவரிடம் நீ தேர்வுபெறவில்லை,இப்போது போகலாமென கூறினேன்.அவ்வளவுதான்...அழும் நிலைக்கு சென்றுவிட்டார்...எப்படியாவது என்னை தேர்வு செய்துவிடுங்கள்,கம்பெனியில் சேர்வதற்க்கு முன்பு நன்றாகப் படித்து விடுகிறேன்' எனக்கூறி விடாப் பிடியாக அறையைவிட்ட வெளியே செல்லாமல் அடம் பிடித்தார்... இது என்னடா வம்பாப் போச்சி'யென வெளியிலிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டு அம்மாணவரை வெளியேற்றினேன்.

வேலை விஷயத்தில் பெரும்பாலான 'சுந்தர தெலுங்கர்கள்' அபொவ் ஆவெரெஜ் லெவலில் உள்ளார்கள்.ஒருவிஷயத்தை ஒருமுறைக்கு இருமுறை சொல்லவேண்டும்.மேலும் தொடர்ந்தக் கண்காணிப்பும் இருக்கவேண்டும்,இல்லையேல் சொதப்பிவிடுவார்கள். ஆங்கில அறிவிலும், தமிழ்நாட்டின் இரண்டாம்/மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துவரும் மக்கள் அளவுக்கு சிரமப் படுவார்கள்.development project'ஐவிட maintenance project'ல் போட்டுவிட்டால் ஓரளவிற்கு சிரமமில்லாமல் இவர்களை வைத்து வண்டியை ஓட்டிவிடலாம்.மொழிப்பாசம் மற்ற இனத்தவர்களைப்போல இவர்களுக்கும் உண்டு,team'ல் அவர்கள் இனத்தினருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
சமீபத்தில் முடிந்த 'appraisal cycle'ன்போது, என்னுடன் பணிப்புரியும் தெலுங்குதேச அன்பர் ஒருவர் வந்து அளாவளாவிக்கொண்டிருந்தார்.எப்போதும் வழியிலோ அல்லது ஏதாவதொரு மீட்டிங்கிலோ சந்தித்துக்கொண்டால் 'ஹாய்''பை' என்ற அளவில்தான் எங்கள் தொடர்ப்புஇருக்கும்.இப்போது வழக்கத்திற்க்கு மாறாகத்தானாக வந்துப்பேசிக் கொண்டிருக்கிறாரே என்ன விஷயம் எனக்கேட்டதற்க்கு அவருக்கு தெரிந்தவரின் 'appraisal' என்னிடம் வந்து இருப்பதாகவும்,பார்த்துப்போடுமாறும் கூறினார்.நானும் பார்த்துப் "போட்டு" விட்டேன்.;)).
இந்தியாவில் தெலுங்கு மக்களுடன் வேலைப்பார்த்ததைவிட அமெரிக்காவில் 3 வருடம் 'மடிப்பொட்டி' தட்டியபோது ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது,அதைப்பற்றி விரைவில் எழுதுகிறேன்.அடுத்தப்படியாக,ஹைதராபாத்திலிருந்து கொச்சினுக்கு செல்லலாமென இருக்கிறேன்...

(தொடரும்...)
பாகம் 1 பாகம் 2

August 22, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 2

முதல் பதிவிற்கு இங்கே போகவும்...

நேற்றைய பதிவில் ஜாதிவித்தியாசம் என்பது மற்றதுறைகளோடு ஒப்பிடும்போது, IT துறையில் மிகவும் குறைந்தபட்சமே உள்ளது என முடித்திருந்தேன்.அந்த குறைந்தப்பட்சமும் வெளிப்படையாக தெரிவது 'அவாளி'டம் மட்டும்தான். அதனாலான பாதிப்புகள் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது,IT துறையில் மிகவும் குறைவுதான்.ஆகவே அதைப்பற்றிய விவாதங்களை தொடர விரும்பவில்லை.

பின்னூட்டமிட்ட நண்பர்கள் மாநிலவாரியான அணுகுமுறை பெருமளவில் இருப்பதாக சொன்னார்கள்..உண்மைதான்...நானும் அதைப்பற்றிதான் எழுதப்போகிறேன்.மேலும் சில ஆண்டுகள் அமெரிக்காவில் பணிப்புரிந்தபோது,அங்குள்ள கம்பெனிகளில் பணிபுரியும் நம்தேச மக்கள், அவர்களின் இன உணர்வையும்,மாநில பாசத்தையும்,குறுக்குவழியில் பணம் பார்க்கும் திறமையையை பற்றியும் எழுதலாம் என இருக்கிறேன்.

வடக்கு,தெற்கு என பாகுபடுத்துவது,இந்திய அரசியல் முதல்கொண்டு,அனைத்து துறைகளிலும் கொடிக்கட்டி பறக்கும் அணுகுமுறை. அதற்கு IT துறையும் விதிவிலக்கல்ல.ஆனால் ஒட்டு மொத்த IT மக்கள்தொகையில் வடக்கத்திய மாநிலங்களிலிருந்து பணிப்புரிவோரின் சதவிகிதம்,தென்மாநில மக்களின் சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது,மிகவும் குறைவுதான்.

அக்குறைந்த வடக்கத்திய மக்களில் கோலோச்சுவது 'பெங்காலி' மக்கள்.பேச்சில் அவர்களை அடித்துக்கொள்ள முடியாது.வெறும் கையில் முழம் போடுவதில் திறைமைசாலிகள். மற்றவர்களை எப்படிப் பயன்படுத்தினால் தான் முன்னேறமுடியும் என்பதை விரல்நுனியில் வைத்திருப்பார்கள். எதுவுமே தெரியாமல் கண்மூடித்தனமாக 'ரிஸ்க்' எடுப்பது அவர்களுக்கு
'ரஸ்க்(ரசகுல்லா)' சாப்பிடுவதுபோல...இதில் அதிசயம் என்னவென்றால்,பெரும்பாலான சமயங்களில் அதில் அவர்கள் வெற்றியடைந்து விடுவதுதான்.அதற்கு காரணம்,முன்பே குறிப்பிட்டதுபோல,மடுவையும்,மலையாக காட்டும் அவர்களின் பேசும்திறமைதான்.

நான் 'பொட்டிதட்டும்' கம்பெனியில், சிறிதுகாலம் ஒரு 'பெங்காலி' டேமேஜருடன் வெலை செய்துக்கொண்டிருந்தேன். அவருடைய IT அறிவு எப்படிப்பட்டது என்றால், testing team அவரிடம் வந்து black box,white box testing செய்யவேண்டும் என்று சொன்னால், அந்த இரண்டு box'ம் வாங்குவதற்கான செலவு 'estmation sheet'ல் சேர்த்துவிட்டாயா? என கேட்டு அவர்களின் ஏழாவதறிவை சோதிப்பார்.ஒருமுறை 'SDLC process'ஐ optimize செய்யப்போகிறேன் என களத்தில் குதித்து, அதைப்பற்றிய விவாதத்தின்போது, sequence, class,activity diagram'போன்ற design phase' வேலைகளையெல்லாம் 'requirement phase'லயே செய்யனும்னு ஒரு பெரிய புரட்சியே பண்ணினார்.இதுபோல இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள்.

ஆனால் இம்மாதிரியான 'அதிமேதாவிதனமெல்லாம்' தனக்கு கீழே வேலைச் செய்பவர்களிடம்தான். அவருடைய பாஸ்'க்கோ அல்லது கஸ்டமர்கான பிரசண்டேசனுக்கோ, அதற்கு தேவையான விவரங்களை அவருக்கு கீழே வேலைப்பார்க்கும் நம்மைப்போன்ற பேசாமடந்தைகள் தலையில கட்டி,அவர்களிடமே விவரங்களை கேட்டுக்கொள்வார்.மீட்டிங் செல்லும்போதும்,நம்மை துணைக்கு அழைத்துக்கொண்டு, நம்மிடம் தெரிந்துக்கொண்ட விவரங்களை,யாருக்கும் எளிதில் புரிந்துவிடாதவண்ணம் எடுத்துவிட ஆரம்பித்தாரென்றால், 'என்னமா பேசுரான்...இவன் பேசுரது நம்பளுக்கு ஒன்னும் புரியமாட்டங்குதே...நமக்குதான் டெக்னாலஜி டச் விட்டுப்போச்சோ...இவன் ரொம்...ப புத்திசாலிடா..' என கேட்பவர்களின் கான்பிடன்ஸ் லெவலையே காலிப்பண்ணிவிடுவார்.இதிலும் மயங்காத சில புத்திசாலி கஸ்டமர்கள்,அவர் சொல்வதைப் புரிந்துக்கொண்டு சில ஆழமான கேள்விகள் கேட்கும்போது, 'இதெல்லாம் ஒரு கேள்வி,இதற்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும்,என்கீழ் வேலை செய்பவனே பதில் சொல்லிவிடுவான்' என ஒரு நக்கல் புன்னகையுடன் நம்பக்கம் கைக்காட்டி விடுவார்.இப்படிப்பட்ட திருவிளையாடல்களால், சில ஆண்டுகளுக்கு முன்பு 'டேமேஜராக' சேர்ந்தவர் இப்போது 'குரூப் ஹெட்'டாக உயர்ந்துவிட்டார்.very high growth rate....

அவர்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களைக் கைத்தூக்கிவிடுவதிலும் வல்லவர்கள்.அதேபோல் நான் புடித்த முயலுக்கு இரண்டரைக்கால்தான் என சாதிப்பதிலும்,அதை மறுப்பவர்களை வன்மம் கொண்டு சரியான நெரத்தில் மட்டம் தட்டுவதிலும் மன்னர்கள்.சில நேரங்களில் அவர்கள் 'ஈகோவே' அவர்களை படுகுழியிலும் தள்ளியிருக்கிறது.

மொத்தத்தில்,முன்பே குறிப்பிட்டதுபோல 'வெறும் கையில் முழம்' போடும் பேச்சாற்றல், விளைவைப் பற்றிக்கவலைப் படாமல் துணிந்து 'ரிஸ்க்' எடுப்பது,'ஈகோ' என கலந்து செய்த கலவைதான்...பெங்காலிகள்....

பெங்காலிகள் தவிர இதர வடமாநில IT மக்களோடு நான் வேலை செய்தது மிகவும் குறைவு.ஆகவே 'கொல்கத்தா'விலிருந்து 'ப்ளைட்' பிடித்து நேராக 'USA'க்கு அடுத்த பதிவில் இறங்குகிறேன்....

உங்கள் கவனத்திற்கு... IT'ல் USA என்றால் 'United state of Andhra pradesh'

அடுத்தப்பதிவில் USA'ல உங்களை சந்திக்கிறேன்..........

முதல் பதிவிற்கு
இங்கே போகவும்...

(தொடரும்)

August 21, 2008

நீயா...நானா? - ஜாதிகள் இல்லையடி பாப்பா...ஆனால் ???

கடந்தவார விஜய் டிவி நீயாநானா நிகழ்ச்சியில் அலுவலகத்தில் ஜுனியர் சீனியர்களுக்கிடையேயான உறவு பற்றி சுடச்சுட விவாதித்தார்கள். அப்போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி,இனம்/ஜாதி அடிப்படையில் சீனியர்கள் அவர்களின் இனத்தை சார்ந்தவர்களை சப்போர்ட் செய்கிறார்களா?

இக்கேள்விக்கு பதில் அளித்தோர் அம்மாதிரியான பாகுபடுத்தும் பாங்கு பெரும்பாலான துறைகளில் இருப்பதாக தெரிவித்தார்கள்.அந்த கேள்வி எனக்குள்ளும் எழுத்தது. நான் கடந்த பல வருடங்களாக 'பொட்டி' தட்டிக்கொண்டிருக்கும் IT துறையில் இந்தக்கேள்விக்கான பதில் என்ன?

என் அனுபவத்தில், ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மிகமிகக் குறைவாகவேதான் இருக்கிறது.அதற்கு முழுமுதற்காரணம்,இங்கு யாருக்கும் கூடவேலை செய்பவர் என்ன ஜாதி என்று அறிந்துக்கொள்ளவேண்டிய அவசியம் சிறிதும் இல்லை.வேலை செய்யும் சூழலிலும் அதை வெளிப்படுத்துவதற்கான எவ்வித முகாந்திரமும் சிறிதளவும் இல்லை.IT துறையில் உள்ளோர் பெருமளவில் இளையவயதினராக இருப்பதும்,அவர்களின் திறமையையும், செயல்படும் திறனையும் கொண்டே அவர்களின் வளர்ச்சி(பெரும்பாலும்) நிர்ணயிக்கப்படுவதால் ஜாதி என்ற ஒரு கேள்வி எங்கும் எழுவதில்லை.

ஒருவர் என்ன இனம் என்று வெளியுலகத்திற்க்கு வெளிப்படுத்துவதில் அவர்கள் அணியும் உடையும்,உணவுப்பழக்கவழக்கங்களுக்கும் ஒருபங்கு இருக்கிறது.ஆனால் உடை விசயத்தில், எல்லோரும் நன்றாக சம்பாதிப்பதால் மாடர்ன் உடைகள்,மற்றும் அலுவலகங்களில் ட்ரெஸ் கோட் இருப்பதால் அதற்கேற்றார்போல் உடுத்துவதால்,உடைகள்மூலம் யாரும் வேறுபடுத்தப்படுவதில்லை.
உணவு விஷயத்திலும்,அலுவலகத்தில் அனைத்துவகை உணவுகளும் கிடைப்பதாலும், சைவம், அசைவம் சாப்பிடுவது ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதால்,அவ்விதத்திலும் ஒருவர் சார்ந்துள்ள இனம் வெளிப்படுத்தப்படுவதில்லை.

இவைகள் எல்லாவற்றையும்விட, இன/ஜாதி அடிப்படையிலான வேலைவாய்ப்புக்கு இங்கு ஆப்பு என்பதால் ஒருவர் என்ன இனம் என்ற கேள்வி அவர்கள் இத்துறையில் காலடி எடுத்து வைக்கும்போதே அவர்கள் காலடியிலேயே மிதிப்பட்டு போகிறது.

ஆகவே பாரதி,காந்தி மற்றும் பல தலைவர்கள் கனவுக்கண்ட ஜாதியற்ற சமுதாயம், எல்லோரும் ஓரினம், லஞ்சலாவணியமற்ற துறை ஒன்று உருவாகிவிட்டதா??? அனைவரும் ஒன்று சேர்ந்து 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என ஆனந்தமாக பாடுவதற்கான நிலைமையை அடைந்துவிட்டோமா? வேறு எவ்விதத்திலும் IT துறையில் பாகுபாடுகள் இல்லாமல் 'திறமைக்கு மட்டுமே முதலிடம்,வேறு எந்த தடைக்கற்களுமே இல்லை' என ஆணித்தரமாக அடித்துக்கூறும் நிலையில் இருக்கிறோமா???

(IT துறையில் உள்ள சில இருண்டப்பக்கங்களைப் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்...)