Search This Blog

May 21, 2005

படித்ததில் பிடித்தது

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே காதல் என்கிற பூ மலர்வதற்கு முன்பு,நட்பு என்கிற பசுமை நிறைந்த இலைகள் வளர்ந்திருக்க வேண்டும்.நட்பு என்கிற அந்தப் பசுமை நிறைந்த இலைகளின் கிளைகள் நம்பிக்கை.நம்பிக்கை என்ற கிளைகளின் அடிவேர், சுயநலமற்ற தன்மை.சுயநலம் கொண்டவர்களால் காதலிக்க முடியாது; காதலிப்பது போல்நாடகமாட மட்டுமே முடியும்.எல்லா நாடகமும் பொய்களும்,கடைசியில்தோல்வியில்தான் முடியும்.உலகில் நிறைய காதல்கள் தோல்வியுற இந்த நாடகமாடல்தான் காரணம்.

காதலில் மிக சுவாரசியமான விசயம் தன்னைக் காதலித்தவரைப் பற்றி எல்லா விவரங்களும் எவர் மூலமாகவோ தெரிந்து கொள்ள நேருவதுதான். யாரையோ மனதில் பூட்டி வைத்து அவரைப்பற்றி நெகிழ்வாக நினைத்துக் கொண்டிருக்க வேறு எவரோ அருகே வந்து உட்கார்ந்து அவரைப் பற்றி உனக்குத் தெரியுமா? என்று விதவிதமாக காதலிப்பவரின் கல்யாண குணங்களைஅடுக்கிக் கொண்டு போக, அவர் வீட்டு விவரங்களை விவரித்துக்கொண்டு போக மெய்மறந்து கேட்கின்ற ஒரு தன்மை ஏற்படும். இன்னும்தூண்டித்துருவி கேள்விகள் கேட்க ஆசை வரும்.அந்த ஆசைக்கு நல்ல தீனி கிடைத்தால் மனம் இடைவிடாது காதலித்தவரைப் பற்றி யோசிக்கத்தொடங்கிவிடும்.அந்த யோசிப்பு பொங்கி நல்ல கொதிநிலைக்கு வந்து,பக்குவமாய்க் கரைந்து காதலைக் கெட்டிப்படுத்தும். சொல்லப்பட்ட விவரங்கள் லட்சணமாகவும்,சுவையாகவும் இருப்பின் காதலித்தவர் மீதுமதிப்பு அபரிதமாய்க் கூடும்.

5 comments:

Muthu said...

மோகன்,
ரொம்ப நல்லா இருக்குங்க :-) :-).

Anonymous said...

seri ipo yaru adhunu sollurengala??? nan kekkumbpodhu ellam yaru yaru sollave mattengurengalae...

Anonymous said...

oiiii.. what is this

வெங்கி / Venki said...

Mohan,
இது பாலகுமாரனின் வரிகள் தானே. நீங்களும் பாலகுமாரனின் ரசிகரா? உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

hello r u alright , i m searching for mohan hw drink with us
ganesh