Search This Blog

May 2, 2005

ஞாபகம் வருதே.....

(இரண்டு மனம் வேண்டும்.........ராகத்தில் பாடவும்)

இரண்டு இட்லி வேண்டும்..
சர்வரிடம் கேட்பேன்..
சட்னியோடு ஒன்று...
சாம்பாரோடு ஒன்று...
இரண்டு இட்லி வே.......ண்டும்.

ஒரு செட்டு இட்லி இரண்டானால்....
ஒரு செட்டு பூரி இரண்டானால்....
ஒரு செட்டு தோசை இரண்டானால்....
ஒரு செட்டு தோசை இரண்டானா...ஆ...ஆ....ஆ......ல்....
தோட்டுக்கொள்ள சட்னி,சாம்பார் போதாதே..ஏஏஏ......
இரண்டு இட்லி வே...ஏ...ஏ..ஏ....ண்டும்.......

அரிசியின் தண்டனை மாவு வழி...
மாவின் தண்டனை தோசை வழி.....
தோசையின் தண்டனை வயித்துவலி..இ...இ...இ.....

தோசையின் தண்டனை வயித்துவலி...
வயித்துவலி..தீர என்ன வழி.....
இரண்டு இட்லி வே...ஏ...ஏ..ஏ....ண்டும்.......

*#*#*#*#*#*****************#*#*#*#*#*#*#**#*#*#*#*#**#**##**#*#*

ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை,எங்கள் ஊரில் உள்ளகிருஸ்துவ பள்ளியில்தான் படித்தேன். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, படிப்பைத்தவிர, மற்ற திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், நான்காம் வகுப்புமுதல் எட்டாம் வகுப்புவரையிருக்கும் மாணவர்களை, நான்குப்பிரிவுகளாக, ஒவ்வொரு வகுப்பிலும் பிரித்து, வியாழன்தோறும் 4-530 மணி வரையில்,ஏதாவதொரு போட்டி (நாடகம் ,பாட்டு, ஓவியம்,பேச்சுப்போட்டி,நடனம்,மாறுவேடம் இன்னபிற)நடத்துவார்கள்.
அந்தந்த வகுப்பாசிரியர்களே, வெற்றி அணியை மதிப்பெண் வழங்கி தேர்ந்து எடுப்பார்கள்.பிறகு 4-8 வகுப்புவரை உள்ள நான்கு அணிகளின்,அந்த வாரத்தின் மதிப்பெண்களை சேர்த்து,அதிக மதிப்பெண்களை பெற்ற அணி அந்த வாரத்தின் வெற்றி அணியாக அறிவிக்கப்படும். ஆண்டு
இறுதியில்,அதிகமுறை வென்ற அணி,ஆண்டு விழாவில்,சிறந்த அணியாக அறிவிக்கப்பட்டு பரிசு வழங்குவார்கள்.

அந்தவகையில்,நான் ஒரு அணியிலிருந்தேன்.மேலும்,அந்தவருடத்தில்,பள்ளி
மாணவத்தலைவனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன்.(அது ஒரு பெரியகதை.ஒரு சட்டசபை தேர்தல் போலயிருந்தது.அதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.).எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதான் பொறுப்பு அதிகமாகயிருக்கும். ஒவ்வொரு போட்டிக்கும் ஏற்றார்போல மாணவர்களை தேர்ந்தெடுத்து,அவர்களுக்கு பயிற்சியளித்து, வெற்றிப்பெற கடும்முயற்சி எடுப்போம்.அந்தவயதில் மிகவும் உற்சாகமாக எல்லாப் போட்டிகளிலும்
பங்குகொண்டு வெற்றிப்பெற பாடுபடுவோம்.உண்மையில் இந்தப்போட்டிகள், மாணவர்களுக்குள் இருந்த திறமைகளை வெளிக்கொணர்ந்தது.

மேற்க்கண்ட பாடல், ஒரு பாட்டுப்போட்டியில்,நான் எழுதியது,பாட்டுப்போட்டியென்று அறிவித்துவிட்டார்கள்.ஆனால், பாடல்களை படத்தில் உள்ளதுபோல் அப்படியே பாடக்கூடாது.வெண்டுமானால்,அதே ராகத்தில் பாடலாம்.வியாழன் மதியம்வரை எந்த பாடல்களும் தயாராகவில்லை.மேலும் அந்த ஆண்டில்,அதுதான் கடைசிப்போட்டி. முதலிடம் பெற வெண்டுமெனில்,இந்தப்போட்டியில் கண்டிப்பாக வெல்ல வேண்டியக் கட்டாயம். ஜூனியர்களெல்லாம் பாட்டுக்காக காத்திருந்தார்கள். பாட்டு எழுதி பின் அவர்களுக்கு பயிற்சிவேறு அளிக்கவேண்டும்.அந்த நெருக்கடியான சமயத்தில் எழுதிய பாடல்தான் மேலே உள்ளது. இன்றைக்கும் ஒரு வார்த்தைக்கூட மறக்கவில்லை.

அதே போட்டிக்கு என் அணியை சேர்ந்த மாணவன் எழுதிய பாடல்,முழுவதும் நியாபகமில்லை.

A-புள்ள கருப்பாயி...
B-புள்ள கருப்பாயி...
C-புள்ள கருப்பாயி...
D-புள்ள கருப்பாயி.......

வேலவெட்டி இல்லாம வெறகு வெட்டப்போனேனே.....
வெட்டிவெலை சென்சிக்கினு வீணா பொழுதைக்கழிச்சேனே......

A-புள்ள கருப்பாயி...
B-புள்ள கருப்பாயி...
C-புள்ள கருப்பாயி...
D-புள்ள கருப்பாயி....... - இப்படியேப்போகும் பாடல்.

கடைசியில்....அந்த ஆண்டிற்க்கான சிறந்த அணியாக எங்கள் அணி தேர்வு செய்யப்பட்டது.

No comments: