Search This Blog

May 9, 2005

கனவே கலையாதே...

பலவருடக் கனவு அது.
ஒவ்வொரு முறையும்,
விமான நிலையம் சென்று
நண்பர்களை வழியனுப்பும்போதும்,
வரவேற்க்கும்போதும்....
என்று என்முறை வரும்?

இதோ அந்த கனவுநாள்...
பிரியும்துயரை தாங்கமுடியாமல்
ஊரிலேயே தங்கிவிட்ட தாயும்,துணைவியும்.
சோகத்தை மனதிலே தேக்கி
இன்முகத்துடன் தம்பியும்,தந்தையும்..

எத்தனையோ நண்பர்களை வழியனுப்பியிருக்க,
என்னை வழியனுப்ப யாரும் வரவில்லையே என
எண்ணிக்கொண்டிருந்தபோதே,இன்ப அதிர்ச்சியளித்து
இருநண்பர்கள் தோளணைக்க..
தோடங்கிவிட்டது என் பயணம்.

புது நாடு,புது மக்கள், புது சூழல்...
எதுவும் ஒட்டவில்லை மனதில்.
ஒவ்வொரு நொடியும் யுகமாய்
கழிந்துகொண்டிருக்கின்றன,
பிரியமானவர்களின் பிரிவால்.

விரல்விட்டு எண்ணிக்கொண்டிருக்கிறேன்,
தாய்நாடு திரும்பப்போகும் நாளை...
போதும் இந்த அயல் நாட்டு மோகம்...
கனவாகவே கலைந்திருக்கலாம்
என் பலவருடக்கனவு.

--------------------------------------------------------------------------------------------
கடந்த வாரம் என் நண்பன் ஒருவன் பணிநிமித்தம் அமெரிக்கா சென்றான்.
இன்று அவனுடன் தொலைப்பேசியப்பின், அவன் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக எழுதியதுதான் மேலே உள்ளது.

1 comment:

சேதுக்கரசி said...

யதார்த்தமாக இருக்கிறது!

தமிழ்மணத்தில் மறுமொழி நிலவரம் தெரிய வழி செய்யலாமே? வாழ்த்துக்கள்.