Search This Blog

September 17, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 9

டிஸ்கி : கடந்த சில நாட்களாக வேலைக்கொஞ்சம் அதிகமாகிவிட்டதால், தொடர்ந்து எழுதமுடியவில்லை.....இப்ப Am back......;))

கடந்தப்பதிவில் அமெரிக்காவில் IT கம்பெனியில் காண்ட்ராக்ட்ர் அல்லது நேரடி எம்ப்ளாயி'யாகவோ வேலை செய்யும் இந்தியமக்கள் தன்வேலையைக் காப்பாற்றிக்கொள்ள செய்யும் 'வேலைகள்' என்ன என்பதைப்பற்றி எழுதப்போவதாக சொல்லியிருந்தேன்.இந்தப்பதிவு அதைப் பற்றிதான்.

முதலில் அமெரிக்க கம்பெனியில் நேரடியாக வேலைப்பெற்றுப் பணிப்புரியும் நம் மக்களைப்பற்றி. கடந்தப்பதிவில் decision maker level'ல் பணிப்புரியும் நம்மவர்கள் அதைப்பயன் படுத்தி பணம் செய்யும் வித்தைகளைக் கூறியிருந்தேன். அவர்களைத்தவிர்த்து அவர்களுக்கு கீழேப் பணிப்புரியும் team lead,techlead போன்றவர்கள் அவர்களுடன் இந்திய சர்வீஸ் கம்பெனியிலிருந்து வந்து பணிப்புரியும் மக்களுக்கு வேலையை பகிர்ந்தளிப்பவர்களாகவோ, அல்லது செய்துமுடிக்கப்பட்ட வேலைகளை review செய்பவர்களாகவோ இருப்பார்கள். பொதுவாக சர்வீசஸ் கம்பெனியிலிருந்து வேலை செய்பவர்கள் process oriented'ஆக இருப்பார்கள்(அல்லது அப்படி இருப்பதாக காட்டிக் கொள்வார்கள்) .process oriented என்றால் ஏகப்பட்ட 'டாக்குமெண்ட்' வேலைகள் இருக்கும். சாப்ட்வேரில் செய்யப்படும் அனைத்து வேலைகளும் விவரமாக ஆவணப்படுத்த வேண்டும்.இதனால் நன்மை என்னவென்றால் ஒரு புராஜக்ட் அதில் வேலைச் செய்துக்கொண்டிருக்கும் ஒரு சிலரை மட்டும் என்றென்றும் நம்பியிருக்க தேவையில்லை. புதிதாக சேரும் எவரும்,அந்த ஆவணங்களைப் படித்து புரிந்துக்கொண்டு,விட்ட இடத்திலிருந்து அதிகப்பிரச்சனைகளின்றி வேலையைத்தொடர ஏதுவாக இருக்கும். தீமை என்னவென்றால், இதற்கு ஆகும் நேரத்திற்கு 'கஸ்டமர்' செலவு செய்யவேண்டும்.அதோடு முன்பே கூறியுள்ளதுப்போல் அதில் வேலை செய்தவரின் முக்கியத்துவம் அதிகமில்லை.ஆகவே நம்மவர்களின் முதல் எதிர்ப்பு 'ஆவணப்படுத்துதல்' வேலைகளுக்கு.

நான் முதலில் வேலைச்செய்த அமெரிக்க கம்பெனியின் techlead ஒரு இந்தியர். நான் அனைத்து விவரங்களையும் டாகுமெண்ட் செய்ய ஆரம்பித்தேன். அது முடிந்தவுடன் review'க்காக அவருக்கு அனுப்பினேன். அதைப்பார்த்துவிட்டு என்னை அழைத்து இதற்கேல்லாம் நெரம் செலவழிக்கவேண்டாம் எனக்கூறிவிட்டார். ஆனால் எங்கள் கம்பெனியில் நாங்கள் அதைச் செய்யவேண்டும் என்பதால், ஓய்வு நேரத்தில் நான் தொடர்ந்து ஆவணப்படுத்திக் கொண்டிருந்தேன். அங்கு ஒரு வருடம் வேலைப் பார்த்து விட்டு வேறு நகருக்கு செல்வதற்குமுன், நான் கடந்த ஒருவருடமாக தயாரித்திருந்த ஆவணங்களை என்னுடைய பரிசாக அவருக்கு அளித்தேன். சில மாதங்களுக்குப்பிறகு என்னைத் தொடர்புக்கொண்ட அவர்,நான் அளித்திருந்த ஆவணங்கள் அந்தப்புராஜக்ட்க்கு பெருமளவில் உபயோகப் படுவதாகவும்,இனிமேல் டாகுமெண்ட் செய்வதை நடைமுறைப் படுத்தப்போவதாகவும் கூறினார்.

அதேப்போல், ஒரு சர்வீஸ் கப்பெனியிலிருந்து ஒரு அமெரிக்க கம்பெனிக்கு Time & material முறையில் ஆட்கள் தேவைப்படும்போது சர்வீஸ் கம்பெனி பரிந்துரைக்கும் developer/techlead ஆகியோரை அமெரிக்க கம்பெனியை சேர்ந்தவர்கள் இண்டர்வியூ செய்வார்கள். அந்த இண்டட்வியூ பேனலில் 'இந்தியர்' யாராவது இருந்தால்,நீங்கள் காலி. ஏதோ 'நாசா'விலிருந்து ஏவப்படும் ராக்கெட்'க்கான சாப்ட்வேரை தயாரிக்கும் பணியில் உங்களை அமர்த்தப் போவதற்கான இண்டர்வியூப்போல அக்குவேறு ஆணிவேறாக உங்களைக் கேள்விமேல் கேள்விக்கேட்டு குடாய்ந்து நம்முடைய கான்பிடன்ஸ் லெவலையே காலி செய்துவிடுவார்கள். அந்த இண்டரியூவில் தேர்வாக எளிதான வழி, அவர்கள் அறிவுஜீவித்தனமாக( ????) கேட்கும் கேள்விகளுக்கு ராஜேந்திரக்குமார் பாணியில் 'ங்கே' என முழித்துவிட்டு, இது ஒரு சிறந்தக்கேள்வி,என் வாழ்நாளில் இதுப்போல யாரும் கேட்டதில்லை என அடித்துவிட்டால்,அவரும் 'இவன் ரொம்ம்ம்....ப நல்லவன்,இங்க வந்து நம்ப வேலைக்கு வேட்டு வைக்கமாட்டான்' என நம்பி நம்மை தெர்ந்தெடுத்து விடுவார். கடைசியில் 'ஆன்சைட்' போனப்பிறகு, ராக்கெட்'க்கான சாப்ட்வேரை எழுதாமல்,ஏதாவதொரு ஆதிக்கால மெயின்ப்ரேம்' சாப்ட்வேரில் 'சிக்'கெடுக்கும் வேலையை தலையில் கட்டிவிடுவார்கள்.

உங்கள் புராஜக்ட் ஆப்ஷோரிலிருந்து முழுவதுமாக தயாரிக்கப்பட்டு acceptance testing' காக ஆன்சைட்டிலுள்ள இந்திய கஸ்டமரிடம் போனால், நீங்கள் எவ்வளவு சிறப்பாக புராஜக்ட் செய்து டெலிவரி செய்திருந்தாலும் அதில் குறைகள் கண்டுப்பிடித்து, application வேலையே செய்யாது அல்லது நாம் எதிர்ப்பார்த்த முறையில் தயாரிக்கப்படவில்லை என management level'ல் escalate செய்துவிடுவார்கள். ஒரு எளிய உதாரணமாக இரண்டு எண்களைக் கூட்டும் வேலை எனச் சொல்லி, நாம் 2+1=3 என காட்டினால், அது எப்படி 2+1=3 எனலாம்,எனக்கு வேண்டியது 1+2=3'தான் என பிரச்சனையைக் கிளப்புவார்கள். ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடித்து 'successful production roll-out' செய்து higher management'க்கு அதை அறிவிக்கும் இ-மெயிலில் கவனமாக நம்முடைய முகவரிகள் இல்லாதவாறு பார்ந்துக்கொள்வார்கள்.

IT துறையில் சிரமமில்லாத வேலை development project. ஆரம்பம்முதல், இறுதிவரை அனைத்து செயல்பாடுகளும் நம் பொறுப்பில் இருப்பதால் ஒரு சிறிய திறமையான குழு அமைந்தால், வேலையை சுலபமாக முடித்துவிடலாம். அவ்வாறில்லாமல் ஏதாவதொரு 'maintenance' டீமில்,அதுவும் அந்த சாப்ட்வேர் அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்'ராக வேலைப்பார்க்கும் நம்பவர்களின் தயாரிப்பென்றால் அவ்வளவுதான். code'ஐ பார்த்தால் தலையும் புரியாது,காலும் புரியாது. ஒழுங்குமுறையின்றி,எவ்விதக்குறிப்புமின்றி அலங்கோலமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, 1+1=2 என்பதை ((18343/45.67223)*(863434-883743(884545-(7454/4545)))+87878*532)+1 என எழுதியிருப்பார்கள். அவர்களுடைய ஒரேக் குறிக்கோள் அவர்களைத் தவிர வேறு யாரும் அவர்கள் எழுதிய லாஜிக்கைப் புரிந்துக்கொள்ளக்கூடாது. அப்படியிருந்தால்தான் அவர்களின் வேலைக்கு யாரும் சுலபமாக வேட்டு வைக்கமுடியாது.

கடந்த சில வாரங்களாக எழுதியப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகப் படித்துப்பார்த்தபோது,இதுவரை IT துறையில் நான் கண்டவைகளில் எனக்கு தவறாகவோ அல்லது வித்தியாசமாகப் பட்டவைகளை, மொழி/இன ரீதியாகப் பாகுபடுத்தி எழுதியிருக்கிறேன்.பெரும்பாலும் இனரீதியான குழுக்களில் உள்ள குறைகள் பற்றி எழுதியிருக்கிறேன். இவைகள் குறைய என்ன செய்யவேண்டும்? எவ்வாறு IT துறையை ஒரு சிறந்தத்துறையாக உருவாக்கலாம்...அதற்கு நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்கு என்ன?

(தொடரும்.....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7
பாகம் 8

September 7, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 8

2006'ம் தொடக்கத்தில் 'பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்பதற்கான நிகழ்வு நடந்தது. நியூ இயர் கொண்டாட்டங்கள் முடித்து, ஆபிஸுக்கு வந்த மேனேஜர்கள்(decision makers) அந்தக்கம்பெனியின் ஆடிட்டிங் டீம்'மால் ஒரே நேரத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த நிமிடமே வேலையிலிருந்து நீக்கப்பட்டு, அவர்கள் லேப்டாப்'பையோ,அவர்கள் க்யூபிக்கில் உள்ள எந்தப் பொருளையும் எடுக்கவிடாமல் பறிமுதல் செய்யப்பட்டு,அவர்களுக்கு கீழே வேலைச் செய்பவர்கள் முன்னிலையில் வெளியேற்றப் பட்டார்கள்.

யாருக்கும் அப்போது எப்படி இது நிகழ்ந்தது எனப் புரியவில்லை.அந்த மேனேஜர்களும் அதற்குப்பிறகு அந்த நகரத்தில் இல்லை.யாராலும் அவர்களைத் தொடர்ப்புக்கொள்ள முடியவில்லை. என்னுடைய 'காண்ட்ராக்ட்டர்' நண்பரும் இந்த நிகழ்ச்சி நடப்பதற்க்கு சில மாதங்களுக்கு முன்பாகவே வேறு கம்பெனிக்கு மாறியிருந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு 'யாஹூ' சாட் வழியாக அந்த நண்பர் கிடைத்தார்.என்னுடைய மொபைல் எண்ணை வாங்கி உடனடியாக தொடர்ப்புக்கொண்டார். அவரிடம் ஏன் அவர் அந்தக் கம்பெனியிலிருந்து வெளியேறிவிட்டார் எனக்கேட்டதற்க்கு ஒரு பெரிய விளக்கத்தைக் கூறினார்.

3-4 வருடங்களாக எந்தவிதச் சிக்கலுமின்றி அந்த மேனேஜர்களுக்கும், கன்சல்டன்சி கம்பெனிக்கும் உறவு தொடர்ந்துள்ளது. அந்த சமயத்தில் ஆரம்பிக்கப்பட்ட இன்னொரு கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்கள் தேர்வுச் செய்யப்பட்டிருக்கிறார்கள். முதல் கம்பெனி மேனேஜர்களிடம் காரணம் கேட்டதற்கு ' பெரும்பாலோனோரை உங்கள் கம்பெனி வழியாகமட்டும் எடுப்பதால் 'higher management'க்கு சந்தேகம் ஏற்படலாம்,ஆகவேதான் 3 இந்தியன் சர்வீசஸ் கம்பெனிகளோடு,இந்த புது கன்சல்டன்சி கம்பெனியிலிருந்தும் ஆட்களைத் தேர்வு செய்வதாகவும்' கூறியுள்ளார்கள். ஆனால் போகப்போக புதிய கன்சல்டன்சி கம்பெனியிலிருந்து ஆட்களை எடுப்பது அதிகரித்துள்ளது.

இதில் ஏதோ விஷ(ய)ம் இருக்கிறது என சந்தேகித்த முதல் கன்சல்டன்சி கம்பெனி விவகாரத்தை ஆராய்ந்தப்போது, அந்தப் புதிய கன்சல்டன்சி கம்பெனியில் இந்த மூன்று மேனேஜர்களும் மறைமுகப் பங்குதாரர்களாகவும்,அந்தக்கம்பெனியை நடந்துவது அவர்களின் உறவினர்கள்தான் என்றத்தகவல் கிடைத்துள்ளது. இந்த விவரங்களைக் கூறி அந்த மேனேஜர்களைக் கேட்டதற்கு பேச்சு முற்றி அவர்களுக்குள்ளே பிரச்சனை ஏற்ப்பட்டுள்ளது.சிறிது நாட்களில் அந்த கன்சல்சன்சி வழியாக சேர்ந்தவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அக்கம்பெனியிலிருந்து வெளியேற்ற ஆரம்பித்துள்ளனர்.2-3 மாதங்களில் கிட்டத்தட்ட 70 பேர் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனால் பெரும் நெருக்கடிக்கும், நஷ்டத்திற்க்கும் ஆளான அந்த கன்சல்டன்சி கம்பெனி கடந்த 3-4 வருடங்களாக அந்த மேனேஜர்களுக்கு கொடுக்கப்பட்ட கமிஷன் விவகாரங்களை 'higher management' க்கு போட்டுக்கொடுத்துவிட்டு அவர்கள் கன்சல்டன்சி கம்பெனியை மூடிவிட்டிருக்கிறார்கள். விவரங்களை ஆராய்த்த கம்பெனி ஆடிட்டிங் டீம் அந்த மேனேஜர்களின் பேங்க் கணக்குகளை தடைச்செய்துவிட்டு அவர்களை நீக்கிவிட்டார்கள்.ஆனால் விஷயம் வெளியே தெரிந்தால் கம்பெனி பெயர் கெட்டுவிடும் என்பதால் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது ஒரேஒரு எடுத்துக்காட்டுதான்.இதுபோல் பலக்கம்பெனிகளில் நடைப்பெருகிறது. இந்தியர்கள் மட்டும் அல்ல,அனைத்து நாட்டினரும் ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறமென எவ்வித வேறுபாடுகளுமின்றி 'ஒற்றுமையாக' ஒன்று சேர்ந்து உலகத்தின் தொன்றுத்தொட்டு நிகந்துவரும் லஞ்சம், குறுக்குவழியில் பணம் சம்பாதித்தல், துரோகம்,சுயநலத்துடன் தன்முன்னேற்றத்திற்காக எவ்விதசெயலையும் மனசுத்தியுடன் செய்தல் போன்றவைகளை, 21'ம் நூற்றாண்டில் பல இந்திய நடுத்தரக்குடும்பத்து மக்களின் வாழ்வில் பெரும்மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் IT துறையிலும் மேற்க்கூறிய விஷயங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதைத்தவிர தங்கள் வெலைகளைக் காப்பாற்றிக்கொள்ள அமெரிக்காவில் 'காண்ட்ராக்ட்டர்களாக வேலைச் செய்யும் நம்மக்கள் செய்யும் 'தகிடுதம்'கள் என்னென்ன??

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6
பாகம் 7

(தொடரும்)

September 2, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 7

2003'ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து அமெரிக்கவாசம் ஆரம்பித்தது.எங்கள் கம்பெனியிலிருந்து நானும், ஆப்ஷோரிலிருந்து இருவரும் வேலையை ஆரம்பித்தோம். அது ஒரு டெவலப்மெண்ட் ப்ராஜக்ட்.எங்களைத்தவிர மேலும் 18-20 பேர் டீமிலிருந்தார்கள்.அதில் பெரும்பாலோர் நான் அமெரிக்காவிலிருந்த நகரத்திலிருந்தும்,மற்றவர்கள் வேறொரு நகரத்திலிருந்தும் வேலை செய்தார்கள்.கிட்டத்தட்ட 4 மாதங்கள் வேலை அதிகமிருந்தது, என்னுடைய டீம் ஆப்ஷோரிலிருந்ததால் சிலசமயம் இரவுமுழுவதும் வேலையிருந்தது.ஆகவே வெலையைத்தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தமுடியவில்லை. முதல் 'ரிலீசுக்கு' பிறகு வேலை சுலபமானது.மேலும் 'ஆப்ஷொரிலிருந்து' வேலைப்பார்த்தவர்களையும் நான் அமெரிக்காவிற்கு வரசெய்துவிட்டேன்.ஆகவே எனக்கு வேலை முன்பிருந்ததுபோல் அதிகமில்லை. ஆகவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பார்க்க ஆரம்பித்தேன்.

வழக்கமாக இந்தியாவிலிருந்து 'சர்வீஸ் கம்பெனிகளின்' சேவையை பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்,முதலில் ஒரு இந்தியன் கம்பெனியோடு வேலையை ஆரம்பிப்பார்கள். சிறிதுக்காலத்திற்கு பிறகு சில வேலைகளை வேறோரு இந்திய சர்வீஸ் கம்பெனிக்கு கொடுப்பார்கள். இதனால் இரண்டு இந்தியக் கம்பெனிகளுக்கும் ஒரு போட்டி ஏற்படும் ஆகவே வேலையை திறமையாக முடித்துக்கொடுக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படும்.சில சமயம் பில்லிங் ரேட்டும் குறைக்கவேண்டியிருக்கும். இதனால் அமெரிக்க கம்பெனிக்கு குறைந்த செலவில் சிறப்பான சேவையைப் பெறமுடியும். இந்த உத்தியை நான் வேலைச் செய்த அமெரிக்க கம்பெனியும் செய்திருந்தது. இந்தியாவின் முதல் மூன்று முண்ணனி நிறுவனங்களில் இருந்தும் இந்த ப்ராஜக்ட்டில் ஆட்கள் இருந்தார்கள். ப்ராஜக்ட் மேனேஜர், டெக்னிக்கல் மேனேஜர், குரூப் ஹெட்(decision makers for that group) அனைவரும் அமெரிக்க கம்பெனியைச் சார்ந்த அமெரிக்காவில் செட்டில் ஆன இந்தியர்கள்.

நான் மேற்சொன்ன உத்தியை அமெரிக்க கம்பெனியில் வேலை செய்யும் இந்தியர்கள்தான் அவர்கள் க்ரூப்'பில் புகுத்தியிருந்தார்கள். நான் வேலை செய்த ப்ராஜக்ட் தவிர மேலும் சில ப்ராஜக்ட்களும் அவர்களுக்கு கீழே இருந்தது.குறைந்தது 60-80 பேர்கள் அந்த க்ரூப்பில் இருந்தார்கள். குறைந்த செலவில் 3 இந்திய சர்வீஸ் கம்பெனிகளுக்குள் போட்டியை ஏற்படுத்தி நிறைவான சேவையைப் பெற்று,அவர்கள் வேலைச் செய்யும் அமெரிக்க கம்பெனிக்கு லாபத்தை ஏற்படுத்துவதாக முதலில் நானும் பெருமைப்பட்டேன் அந்த இந்தியர்களின் சாமார்த்தியத்தை எண்ணி.

சிறிது மேலும் ஆராய்ந்தப்பிறகு வேறொரு உண்மை கண்ணில் பட்டது. மொத்தம் உள்ள 60-80 பேரில் அதிகப்பட்சம் ஒரு 30 சதவிகிதம்தான் இந்த இந்திய சர்வீஸ் கம்பெனி மக்கள்(எங்கள் கம்பெனியிலிருந்து நாங்கள் மூவர்தான்..) மீதி அனைவரும் அமெரிக்காவில் இயங்கும் 'கன்சல்டன்சி' கம்பெனி வழியாக 'காண்ட்ராக்ட்' தொழிலாளியாக இங்கு வந்து வேலை செய்பவர்கள்.அதிலும் 80%க்கு மேல் அனைவரும் தெலுங்குதேச மக்கள். இன்னொரு முக்கிய விஷயம்,நான் மேற்க்கூறிய மேனேஜர்கள் (decision makers) அனைவரும் தெலுங்கு மக்கள்.

காண்ட்ராக்ட் மக்களோடு பழகி அவர்களோடு நெருக்கமாக நட்புமுறையில் பழக ஆரம்பித்தப் பிறகு தெரிந்த மற்றொரு உண்மை, அந்த கன்சல்டென்ஸி கம்பெனியும் தெலுங்கு மக்களாலேயே நடத்தப்படுவதை அறிந்தேன். அப்போதுதான் ஏதோ ஒரு உள்குத்து இருப்பதாக உணர்ந்தேன். எங்கள் கம்பெனி மேனேஜரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, 'ஏன் நம் கம்பெனிக்கு 3 பேரைத் தவிர வேறு யாரையும் சேர்க்க முடியவில்லை? என வினவினேன். 'decisions makers' வோடு அவர் தொடர்ந்துப் பேசுவதாகவும் ஆனால் மேலும் சிலரை சேர்க்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லையென்றும்,ஆனால் அந்த கன்சல்டென்ஸி கம்பெனிக்கே முன்னுரிமைக் கொடுப்பதாகவும் சொன்னார். ஆனால் அதேக் கம்பெனியின் வேறு க்ரூப்பில் உள்ள ப்ராஜக்ட்டில் எளிதில் நம் கம்பெனி மக்களை சேர்க்க அந்த க்ரூப்பின் ஹெட்(அமெரிக்கன்) அனுமதிப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில் 'காண்ட்ராக்ட்' மக்களில் என்வயதைச் சார்ந்த ஒருவர் எனக்கு நன்கு பழக்கம் ஆனார் மனம்விட்டு பேசும் அளவிற்கு. ஒருநாள் அவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டேன்.'எப்படி நீ சார்ந்த கன்சல்டன்சி கம்பெனி ஆட்களை மட்டும் இந்த க்ரூப்பில் சுலபமாக சேர்த்துக்கொள்கிறார்கள்?' . நீண்ட தயக்கத்திற்குப் பிறகு ஒரு பெரிய உண்மையை வெளியிட்டார். அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக வரும் ஒவ்வொருவரின் 'பில்லிங் ரேட்டிலும்' ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், 'decision makers'க்கு கமிஷனாகப் போகிறது'. நான் ஆடிப்போனேன்.எப்படியென்றால், உதாரணத்திற்கு ஒரு காண்ட்ராக்டர்க்கு ஒரு மணி நேரத்திற்கு 100 டாலர் என அமெரிக்க கம்பெனியோடு(நம் decision makers மேனேஜர்களோடு) டீலை அந்த கன்சல்டன்ஸி கம்பெனிப் போடும். அதில் ஒரு 25 டாலர் அந்தக்கன்சல்டன்சி கம்பெனிக்குப் போகும்,ஒரு 20-25 டாலர்கள் கமிஷனாக 'நம் decision makers' மேனேஜர்கள் பங்குப் போட்டுக்கொள்வார்கள். மீதியுள்ள 50 டாலர் காண்ட்ராக்ட் எம்ப்ளாயிக்குப் போகும். இப்படியாக கணக்குப்போட்டால் (1 employee*25$*8hrs/day*21days/month) ஒரு 4200 டாலர் கமிஷனாகப் போகும்,அந்த க்ரூப்பில் 50-60 பேர்வரை அந்தக் கன்சல்டன்ஸி கம்பெனி வழியாக வேலைச் செய்பவர்கள். அப்படியென்றால் அந்த மேனெஜர்கள் மாதத்திற்க்கு அடிக்கும் கமிஷன் எவ்வளவு என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால்,அந்த க்ரூப்பில் இந்தியர்கள் தவிர வேறு நாட்டவர் (அமெரிக்கன்,சைனீஸ், ஜப்பானியர்கள்) எவரும் தொடர்ச்சியாக இடம் பெறவில்லை. தப்பித்தவறிச் சேறுபவர்களும் சில வாரங்கள்/மாதங்களில் வேறு க்ரூப்பிற்கோ,கம்பெனிக்கோ மாறிவிடுவார்கள். நான் வேலைச் செய்தக் காலத்தில் ஒரு சைனீஸ் எங்கள் ப்ராஜக்ட்டில் சேர்ந்தார். அவருக்கு அவர் டெக்னிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கு சம்பந்தமே இல்லாத வேலையைக் கொடுத்தார்கள்.அவரும் வேறு வழியில்லாமல் செய்ய ஆரம்பித்தார். ஏதாவது சந்தேகம் என்றுக்கேட்டால் சரியான விளக்கத்தை யாரும் அவருக்கு கொடுக்கவில்லை. சைனீஸ் என்பதால் அவரது ஆங்கிலமும் சிறப்பான முறையில் இல்லை.மேலும் எந்த மீட்டிங் என்றாலும் 'டெக்னிக்கல்' விஷயங்கள் தவிர பெருப்பாலும் தெலுங்கில்தான் பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் ஆபிசில் இருக்கும்போது,ஏதோ ஹைதராபாத்தில் உள்ள கம்பெனியில் வேலைப் பார்ப்பதுப் போல சுற்றுசூழ்நிலை இருக்கும். ஆபிசை விட்டு வெளியில் வந்தால்தான் நீங்கள் அமெரிக்காவில் இருப்பதை உணர்வீர்கள். இந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியாமல் மூன்றே மாதத்தில் அந்த சைனீஸ் அன்பர் 'கனடா'வில் வேலைவாங்கி சென்றுவிட்டார். சொன்னால் நம்பமாட்டீர்கள்,ஒரு சில மாதங்களுக்குப் பிறகு நாங்கள் இருந்த ஆபிஸ் கட்டிடத்தில் காவலாளிகளைத் தவிர மற்ற அனைவரும் இந்தியர்கள் மட்டும்தான். இந்தியர்கள் வேலைச் செய்யும் ப்ராஜக்ட் அனைவற்றையும் இந்த பில்டிங்'கு மாற்றிவிட்டு அமெர்க்கர் அனைவரும் வேறு பில்டிங் மாறிவிட்டார்கள். இன்றும் அந்த பில்டிங்கை(919) இந்தியன் பில்டிங்காகத்தான் வைத்திருப்பதாக நண்பர் கூறினார்.

மேலும் நானிருந்த டீமி'ல் பார்த்தால் அந்த மேனேஜர்களின் மனைவிகள்,அவர்களின் உறவினர்களும் அந்தக் கன்சல்டன்சி கம்பெனி வழியாக இங்கு வேலைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள். மனைவிகள் 'working from home' என்று பெரும்பாலும் வீட்டிலிருந்தே வேலைப்பார்ப்பதாக கணக்குக் காட்டிவிட்டு சம்பாதித்துக் கொண்டிருநதார்கள்.அவர்கள் கணவர் மேனேஜர் என்பதால் பெரிய அளவிற்கு வேலையும் இருக்காது.


அந்த டீமில் நான் 2005 தொடக்கம்வரை இருந்தேன்.அதுவரை அவர்களின் வாழ்க்கை கொண்டாட்டமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு வேறு நகரத்திற்கு நான் சென்றுவிட்டேன். 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது இவர்களுக்கெல்லாம் பொருந்தாது' என்று அடிக்கடி எண்ணிக்கொள்வேன். ஆனால் அந்தப் பழமொழி அனைவருக்கும் பொருந்தும் என நிரூபித்த நிகழ்ச்சி, அந்த மேனேஜர்கள் யாரால் பலனடைந்தார்களோ அவர்களாலேயே நிகழ்த்தப்பட்டது 2006 ஆம் ஆண்டு தொடக்கத்திலே.....

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
பாகம் 5
பாகம் 6

(தொடரும்....)

September 1, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 6

நான் முதல்முறையாக அமெரிக்காவுக்கு 2003'ம் ஆண்டு,ஜூலை மாதவாக்கில் எங்கள் கம்பெனி வழியாக கஸ்டமர் ஆபிசில் வேலைச் செய்யச் சென்று,கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள், மூன்று வெவ்வேறு நகரங்களில் பணிப்புரிந்தேன்.பிறகு இந்தியா திரும்பியப்பின்,கடந்த ஜனவரி 2008 வரை ஆப்ஷோர் டேமேஜராக 2 வருடங்கள் பணிப்புரிந்தேன்.இந்த 5 ஆண்டுகளாக வேலைச்செய்த 'கஸ்டமர்' கம்பெனிகளில், என்னுடன் பணியாற்றிய,கஸ்டமர் மக்கள் பெரும்பாலோர் இந்தியர்கள்.அதிலும் தெலுங்கு மக்கள் அதிகம்.

IT துறையில் பெரும்பாலும் ஜப்பானியர்களுடன் வேலைச் செய்வது மிகவும் கடினம் என்பது பெரும்பான்மையானக் கருத்து.அது 100% உண்மையும்கூட.நான் கிட்டத்தட்ட 3 வருடங்கள்(2000-2003) ஜப்பான் கம்பெனியின் ப்ராஜக்ட்டில் வேலைச் செய்துள்ளேன். அவர்கள் திருப்திபடுத்தும் விதத்தில் வேலைச்செய்வது(customer satisfaction),அதுவும் இந்தியச் சூழ்நிலையில் மிகமிகக்கடினம். அதற்கு சில முக்கியக் காரணங்கள்.

1. மொழிப்பிரச்சனை - ஜப்பானியமொழி கொஞ்சம் கடினமானது நாம் கற்றுக்கொள்ள.அதேப் போல் ஜப்பானியர்கள் அவர்கள் கல்வியை ஜப்பானியமொழியிலே கற்பதால்,ஆங்கிலத்தைச் சரளமாகக் கையாளத் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு. நான் வேலைவிஷயமாக ஒரு மாதம் டோக்கியோவில்(2001) தங்கியிருந்தேன். உணவு விஷயத்தில் அங்குள்ள உணவங்களில் உள்ளவர்களிடம் 'ஆர்டர்' செய்வதென்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்.என்னுடன் வந்த மற்றோரு நண்பர் சைவம். நாங்கள் Mcdonald'க்கு சாப்பிடச் சென்றால்,நான் வழக்கமாக சிக்கன் பர்கரை ஆர்டர் செய்துவிடுவேன்.ஆனால் நண்பரோ வெஜ்பர்கர் சாப்பிடுபவர்.வெஜ்பர்கர் மெனுக்கார்டில் இருக்காது. ஆகவே அவர் 'பில் போடுபவரிடம்' மெனுக்கார்டை எடுத்து 'சிக்கன் பர்கரை' காண்பித்து, பர்கர் 'without chicken' வேண்டும் என்பார்..'பில்'லரோ' ராஜேந்திரக்குமார் ஸ்டைலில் 'ங்கே..' என முழிப்பார்.பிறகு மீண்டும் அந்தப் படத்தைக் காண்பித்து,'burger,no chicken...no meat...only vegitable' எனப் பலமுறைச் சொல்வார்,சிலபல நிமிட தலைச் சொறிதலுக்குப் பிறகு 'ஓ...வெஜ் பர்கர்???' எனப் புரிந்துக்கொண்டு, பில்லைப் போடுவார்.அதற்குப்பிறகு உள்ளே பர்கர் தயாரிப்பவர்க்கும் அவர் சொல்லிவிடுவார்.நண்பருக்கோ பாதிபசி அவர் 'சைகை மொழியை' அந்த ஜப்பானியருக்கு புரிய வைத்த மகிழ்ச்சியிலேயே போய்விட்டு இருக்கும்.

ஒரு புராஜக்ட் செய்யும்போது அனைத்து 'டாக்குமெண்ட்ஸ்'ஐயும்(req,design,functional, testplan/cases/results) ஆங்கிலத்தில் தயார் செய்து, பிறகு ஜப்பானியமொழியில் மாற்றி அவர்களுக்கு அனுப்பிவைப்போம்.ஆனால் எதற்கும் ரெஸ்பான்ஸ் இருக்காது 'கிணற்றில் போட்டக்கல்' போல. இப்படிபட்ட நிலையில் ஒரு 'டெவலப்மெண்ட்' ப்ராஜக்டை முடித்து 'அக்ஸப்டன்ஸ்' டெஸ்டுக்காக அவர்களுக்கு அனுப்பினோம். அனுப்பிய முதல்வாரம் எந்த பதிலும் இல்லை.இரண்டாவது வாரமும் 'NO SOUND'...'என்னாடா இது,நாம்ப bug-ஏ இல்லாத அப்ளிகேஷனை தயாரித்துவிட்டோமா? இரண்டு வாரம் டெஸ்ட் பண்ணியும் எந்த பிழையையும் அவர்கள் அனுப்பவில்லையே என 'நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி' அதற்கடுத்த வாரத்தில் 'டீம் ட்ரிப்' போகப் பெரிய ப்ளானே தயாரித்துவிட்டோம்.அவ்வார இறுதியில்,டீம் டின்னர்'க்கு சென்று பயங்கர கூத்து வேறு.

மீண்டும் திங்கள் அன்று பணிக்கு வந்தோம். காலை 10 மணியளவில் ஒரே ஒரு இ-மெயில் ஒரு எக்ஸல் இணைப்போடு 'கஸ்டமரிடம்' இருந்து வந்து இருந்தது. ஏதோ பாராட்டுப்பத்திரம்தான் அனுப்பியிருக்கிறார்கள் என்ற 'நினைப்புடன்(ரொம்ம்ம்ம்பதான்)' அதைத் திறந்துப் பா...ர்...த்.....த.... டேமேஜர் அலறிவிட்டார்...அவர்விட்ட சவுண்டில் அடுத்த நொடியில் அனைவரும் ஒரு கான்பரன்ஸ் ரூமில் இருந்தோம். கிட்டத்தட்ட 500'க்கும் அதிகமான 'defect' அந்த எக்ஸல் சீட்டில் எங்களைப் பார்த்து ஏளனமாகப் பல்லிளித்தது. அவர்கள் செய்த முதல் டெஸ்ட் என்னவென்றால், அந்த அப்ளிகேஷனை ப்ரொவ்சர் வழியாக இணைத்து 'லாகின்' செய்துவிட்டு,பிறகு நெட்வொர்க் கேபிளை பிடுங்கிவிட்டு, மறுபடியும் 'அப்ளிக்கேஷனில்' உள்ள சில 'லிங்க்'களை 'க்ளிக்'கினால், 'கேபிள் இணைப்பு இல்லை' என எர்ரர் மெசேஜ் 'பாப்பப்'பில் வரவேண்டும்' என்று டெஸ்ட் செய்துள்ளார்கள். அவ்வளவுதான்,டேமேஜர் அடுத்தப் ப்ளைட்டை பிடித்து ஜப்பானுக்கு ஓடினார்.நாங்கள் அடுத்த இரண்டு மாதங்கள் ராப்பகலாக வேலைச் செய்து எல்லாவற்றையும் சரிசெய்தோம்.

2.இந்தியர்களுக்கும்,ஜப்பானியர்களுக்கும் வேலைச்செய்வதிலுள்ள அணுகுமுறை :
அனைவரும் அறிந்ததுப்போல,ஜப்பானியர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை நேரத்தில் வேலையை மட்டும்தான் பார்ப்பார்கள்.நான் அங்கிருந்த ஒரு மாதத்தில் அவர்கள் கடும் உழைப்பைப்பார்த்து அசந்துப்போனேன். காலை 930-10மணிக்கு சீட்டில் அமர்ந்தால், பகல் உணவுக்கு மணி அடிக்கும்வரை(1230pm-100pm- உண்மையிலேயே நம் ஊரில் பள்ளிக்கூடங்களில் மணி அடிப்பதுப்போல ஆபிசில் அடிக்கிறார்கள்)வேலை பார்க்கிறார்கள்.அநாவசியமாக பக்கத்து சீட்டு மக்களிடம் அரட்டை அடிப்பதோ,டீ ப்ரேக்'கென 30 நிமிடங்கள் வெளியேப்போவதோ, எதுவும் கிடையாது. மிகவும் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.அதனால்தான் அவர்களால் 'மேக்ஸிமம் அவுட்புட்' கொடுக்கமுடிகிறது.

நாமெல்லாம்,காலையில் கஷ்டப்பட்டு ஒரு 9 மணிக்கு ஆபிசில் நுழைந்து, அட்டெண்டன்ஸ் போட்டுவிட்டு, நண்பர்களுடன் கேண்டின் சென்று,காலை உணவு முடித்து சீட்டிற்கு வர 930-945 ஆகிவிடும். அதற்குப்பிறகு இ-மெயில் செக் செய்துவிட்டு, வந்துள்ள அனைத்து மெயில்களையும் படித்துவிட்டு,கஸ்டமரிடமிருந்து வந்த முக்கியமான மெயில்களை உடனடியாக 'டீமுக்கு' அனுப்பிவிட்டு, அதையும்விட முக்கியமாக வந்துள்ள 'பார்வேர்ட்' மொக்கை மெயில்களை படித்து,சிறிதும் தாமதிக்காமல் நண்பர்குழுக்களுக்கு அனுப்பிவிட்டு, வழக்கமாக செய்திகளைப்பார்க்கும்,rediff,தினமலர், தட்ஸ்தமிழ், தமிழ்மணம், விகடன், குமுதம் என மேய்ந்துவிட்டு 'வாட்சை'ப்பார்த்தால்,1030am ஆகிவிட்டிருக்கும்.உடனடியாக ஒரு காப்பி ப்ரேக் 11 மணிவரையில்.ஏதாவது டீம் மீட்டிங் இருந்தால் 11 மணிக்குமேல் செல்வதும், இல்லையேல், இருக்கும்வேலைகளை இன்றே செய்யலாமா? இல்லை பிறகு பார்த்துக்கொள்ளலாமா என்ற யோசிப்பிலேயெ மதிய உணவுக்கு சென்றுவிட்டு நிதானமாக ஒரு 2 மணியளவில் சீட்டிற்குவந்து, உண்டமயக்கத்தில்,கடனேயென அன்றைய வேலையை ஆரம்பித்து ஒரு 7-8 மணிவாக்கில் அன்றையதினம் முடியும்(இடையில் காப்பி ப்ரேக்,கடலை ப்ரேக்,ஸ்நாக்ஸ் ப்ரேக் என ஏகப்பட்ட தடங்கல்கள் வேறு).

ஜப்பானியர்களைப்போல நாமும் வேலை நேரத்தில் வேலைகளை மட்டும் பார்த்தால் எங்கேயோ போய்விடுவோம்.நம்மிடம் உள்ள இன்னொரு கெட்டப்பழக்கம் எந்தவேலையையும் தள்ளிப்போடுவது,அதற்குப்பிறகு அடித்துப்பிடித்து கடைசி நிமிடங்கள்வரை பயங்கர டென்சனோடு வேலைப்பார்ப்பது. இன்னொரு முக்கியமான வேறுபாடு,ஜப்பானியர்கள் hard-workers ஆனால் smart-workers கிடையாது.ஆனால் இந்தியர்களோ எடுத்துக்கொண்ட வேலையை திறம்பட செய்வதில் வல்லவர்கள்(smart workers-இதற்கு ஒரு முக்கியக் காரணம்,நம்முடைய கணித அறிவு & we are good at logical thinking.ஜப்பானியர்களுக்கு machine-dependency அதிகம்.ஒரு சிறியக் கணக்குப்போடக்கூட 'கால்குலேட்டர்' தேடுவார்கள்),ஆனால் 'எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனோபாவத்துடன், வேலைகளைத் தள்ளிப் போடுவது நம்முடைய பலவீனம்.

இவ்வளவுத்தூரம் நான் மேலே எழுதியிருப்பதற்கு காரணம்,முன்பே கூறியுள்ளதுப்போல, IT துறையில்,ஜப்பானியக் கஸ்டமரோடு வேலைப்பார்ப்பது கடினம்,அவர்களைத் திருப்திபடுத்துவது மிகமிகக் கடினம் என்றக் கருத்தை வலியுறுத்தவே...

மேற்க்கூறிய கருத்துகளில் அசையா நம்பிக்கை வைத்திருந்த நான் அமெரிக்காவில் இரண்டரை ஆண்டுகளும்,இந்தியாவிலிருந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளும் 'இந்தியன் கஸ்டமரோடு' வேலைப்பார்த்தப் பின்பு,என் முந்தையக் கருத்துகளிலிருந்து எவ்வித நிபந்தனைகளுமின்றி பின்வாங்கிவிட்டேன்.அமெரிக்காவில் உள்ள IT கம்பெனிகளிலிருந்து, இந்தியாவில் உள்ள 'IT services' கம்பெனிகளோடு இணைந்து 'customer' என்ற நிலையில் பணிப்புரியும் இந்தியர்களைவிட ஜப்பானியக் கஸ்டமர்கள் 100..இல்லை 1000 சதவிகிதம் மேலானவர்கள்.
இது உண்மை....உண்மை...உண்மை...இதற்கு ஒரு மிகவும் முக்கியமானக் காரணம்...அவர்கள் செய்யும் அரசியல்,அவர்களில் மிகச்சிலர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கச் செய்யும் தகிடுதம்கள்.....

அதைப்பற்றி விரிவாக அடுத்த பகுதியில்....

disclaimer : கடந்த பாகத்தில் IT துறையில் கன்னடர்களின் பங்குக் குறித்து எழுதுவதாகக் கூறியிருந்தேன்.ஆனால்,கன்னடமக்களின் சதவிகிதம் IT துறையில் மிகக்குறைவு என்பதும்,நானும் அவர்களுடன் சேர்ந்து வேலைப்பார்த்தது மிகவும் குறைவு என்பதால் அதைப்பற்றி விரிவாக எழுத எதுவுமில்லை...நிறைவுப் பகுதியில் சிலக்குறிப்பிட்ட விஷயங்களைப் பகிர்ந்துக்கொள்கிறேன்.

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4
>பாகம் 5


(தொடரும்)

August 31, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 5

இது என்னுடைய 50வது பதிவு.....

முன்பே குறிப்பிட்டதுப்போல் தெலுங்குதேச மக்களுக்கு இணையாக அல்லது மிகக்குறைந்த சதவிகித வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் IT துறையில் கொடிநாட்டுபவர்கள் தமிழர்கள். மற்ற மாநில மக்களுக்கு இணையாக பெரியப்பொறுப்புகளில் சம அளவில் திறைமையாக செயல்படுகிறார்கள்.

மற்றவர்களுடன் ஒப்பிடும்போது,குழுமனப்பான்மை,தன் மாநில/இன மக்களை ஆதரிப்பது தமிழினத்தில் குறைவுதான். அதற்கான பலக்காரணங்களில் ஒரு காரணம், தான் தன் இனத்தை சார்ந்தவர்களை ஆதரிப்பது பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ? என்ற ஒரு எண்ணம். இது தமிழக மக்களுக்கே உள்ள பொதுவான குணமோ? என்ற சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் இந்தக்குழு மனப்பான்மை,ஆரம்பக்கட்டத்தில் 'fresher' ஆக இருக்கும்போது மிக அதிக அளவில் இருப்பதில்லை. காலேஜிலிருந்து நேரடியாக வேலைக்கு வந்திருப்பதால், அந்த சூழலையே இங்கும் தொடர்கிறார்கள்.ஆனால்,ஒரு டீம் லீட், டேமேஜர் என ஆகும்போது ஆட்டோமெடிக்'காக வேறு நிலைக்கு சென்றுவிருகிறார்கள்.

அதேப்போல் ஆங்கில மோகம் (அல்லது) தமிழில் இன்னோரு தமிழரோடு, அவர் தமிழர் என நன்றாகத்தெரிந்தும் பொதுவான விஷயங்களைக்கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது நம் மக்களிடம் அதிகம் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட இருவர் ஒரே 'ப்ராஜக்ட்'ல் இருந்தால், சகஜமாகத் தமிழில் பேசக் கொஞ்சம் காலமாகிறது. மற்ற மொழிக்காரர்கள் இதில் பெரிதும் மாறுப்பட்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் கேம்பஸ் இண்டர்வியூக்காக ஒருக்கல்லூரிக்கு சென்றிருந்தேன். என்னுடன் ஒரு சிங்'கும் (சிங்கம் இல்லைங்க !!!) பேனலில் வந்திருந்தார். இரவு உணவு முடித்துவிட்டு காலேஜ் கேம்பஸ்'சை வலம் வந்தபோது, எதிரில் மூன்று பஞ்சாபிகள் வந்தார்கள். இரண்டுப் பெரியவர்கள், ஒரு மாணவன். தலையைப்பார்த்தவுடன் அவர்கள் மாநிலத்தவர் எனத்தெரிந்துக் கொண்டு, பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொண்டு சிறிது நேரம் பேசிப்பின்பு விடைப்பெற்றனர். அதன்பிறகு நான் நம்ப சிங்'கத்திடம் கேட்டேன்,என்ன உங்களுக்கு தெரிந்தவர்களா? என்று. அதற்கு அவர் சொன்னார்,இப்போதுதான் முதல்முறை சந்தித்தோம்.அவர்கள் அவர் பையனை இந்தக்கல்லூரியில் சேர்க்க வந்துள்ளார்கள்.அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்,எந்த உதவி வேண்டுமென்றாலும் என்னுடன் பேசுமாறு சொல்லியிருக்கிறேன்',எனச் சொன்னார். இப்படிப்பட்ட மனப்பான்மை நம்பவர்களிடம் எந்த அளவுக்கு உள்ளது என நமக்கேத்தெரியும்.

நான் சிலவருடங்களுக்கு முன்பு டெவலப்பராக இருந்தபோது, புது டேமேஜராக தமிழர் ஒருவர் சேர்ந்தார்.அவருக்கு பேங்களூர் புதுசு அப்போது.ஒருமுறை ரிலீஸ் இருந்ததால் இரவுமுழுவதும் வேலை இருந்தது. டின்னருக்காக நானும் இன்னொரு தமிழ் நண்பரும் கேன் டீன் செல்லக் கிளம்பினோம். அப்போது அங்குவந்த டேமேஜரும் எங்களுடன் இணைந்துக்கொண்டார். வேறுவழியில்லாமல் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தோம். அவருக்கு அவர் தங்கும் ஏரியாவில் காய்கறிகள் எங்கு கிடைக்கும் என்று சரியாகத்தெரியவில்லை. அதைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அன்றுக்காலையில் அவர் ஏதோ ஒருக்காயை வாங்க வேண்டுமெனத் தேடியதாகவும்,கிடைக்கவில்லை எனக்கூறினார். அது என்னடா,பெங்களூரிலே கிடைக்காத காய் என ஆச்சர்யப்பட்டு அவரிடமேக் கேட்டோம். அவருக்கு அதற்கு சரியான ஆங்கில வார்த்தை சொல்லமுடியாமல்,இவ்வாறு சொன்னார்...' you know,its a long one.... green color' ... இது என்னடா..பச்சைப்பாம்பைச் சொல்றாரா... எங்காவது சீனாவிற்க்கு long-term assignment போய்ட்டு வந்துவிட்டாரா?" என நினைத்துக்கொண்டே....'கொஞசம் விளக்கமாகச் சொல்லுங்க'னு கேட்டோம்... அதற்கு..." you know,we can prepare sambar using that....imm.... hey... by one of the Bakiya raj movie, this vegitable became very popular' எனச் சொன்னார்... 'முருங்கைகாயா?' என தமிழிலேயேக் கேட்டோம்.... அப்போதும் 'உஜாலா'விற்கு மாறாமல்.. 'yaya...you are rite' னு வழிந்தார்... அப்போதிருந்து அவரை 'பாக்கியராஜ்'னு டீமி'ல் ஓட்டிக்கொண்டிருந்தோம்(அவருக்கு தெரியாமல்தான்...).

இந்த ஆங்கிலத்தில் பேசும் மோகம்(????) வடத்தமிழகத்திலிருந்து(சென்னையும்...அதைச்சார்ந்த மாவட்டங்களும்...)வந்து 'பொட்டித்தட்டும்' மக்களிடம்,கொஞ்சம் அதிகமாக இருக்கிறது... தென்தமிழகப் பாசக்கார பயல்களிடம் தமிழ் மொழிப்பாசம் கொஞ்சம் அதிகம்தான்....அதற்கு ஒரு முக்கியக்காரணம், பெரும்பாலும் நாம் அனைவரும் பள்ளியில் படிக்கும்வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இருப்பதும், அதை ஒரு மொழியாகக் கற்றுப் பழகாமல், ஒரு subject' ஆக பாஸ் பண்ணால் போதுமென மக்'கடிப்பதே. அதேப்போல் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்றக்கட்டாயம்,பள்ளிக் கல்லூரி படிப்புகள் முடிக்கும்வரை ஏற்ப்படுவதில்லை. வேலைக்கு செல்லும்போதுதான் அதற்க்கான சந்தர்ப்பமே அமைகிறது.

நானே ஆங்கிலத்தில் தட்டுதடுமாறிப் பேச ஆரம்பித்தது 'பொட்டித்தட்டும்' தொழிலுக்கு வந்தப்பிறகுதான். ஆரம்பக்காலத்தில் இந்தக்குறையே,என்னை பிற மாநில மக்களோடு சகஜமாகப் பேசிப்பழகும் தன்னம்பிக்கையைக் கொடுக்கவில்லை. பிறகு ஜப்பான்,அமெரிக்கா என கட்டாயமாக ஆங்கிலம் பேசியே ஆகவேண்டிய இடங்களில் சில வருடங்கள் பணிப்புரிந்தப் பிறகு சரியாகிவிட்டேன்.

வேலை விஷயத்தில்,கொடுத்த வேலையை கொஞ்சம் 'ப்ரஷர்' கொடுத்தால் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துவிடும் திறமை நம் மக்களுக்கு உண்டு. மேனேஜ்மெண்ட்' வேலைகளைவிட, டெக்னிக்கல் பொறுப்புகளை சிறப்பாக செய்யக்கூடியவர்கள்.

முந்தையப்பதிவில், மலையாள/அழகான வட இந்தியப்பெண்களிடம் கடின வேலையைக் கொடுத்தால், குறிப்பிட்ட வெளையில் அந்த வேலை முடிக்கப்பட்டு விடும் என்றும், அந்தவேலையைச் செய்தவர்கள் யாரென்பது,அந்தப் பெண்ணோடு யார் அடுத்த நாள் 'லஞ்ச்'க்கு செல்கிறார்களோ அவர்களே எனச் சொல்லியிருந்தேன்....அப்படி கவனித்துப் பார்த்தால்...தமிழ் மக்களின் சதவிகிதம் கொஞ்சம் அதிகம் என்பது உண்மைதான்....( அலோ....யாருப்பா அது... நான் எத்தனை முறை அப்படி 'லஞ்ச்'க்கு போனேனு கேக்கறது???)

Disclaimer : ( இக்குழு மனப்பான்மை தமிழர்களுக்கு மிகக் குறைவு என சமீபத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, விவாதத்தில் பங்குக் கொண்ட மல்லு நண்பர் ஒருவர் ' மல்லுகளிடம் தான் அந்த மன்ப்பான்மை மிகமிகக் குறைவு எனக்கூறி அதற்க்கான சான்றுகளையும் அடுக்க ஆரம்பித்துவிட்டார்'. இதான் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பதா???? )
அடுத்தப் பதிவில் கன்னட மக்களின் பங்கைப்பற்றி எழுதலாமென இருக்கிறேன்....

(தொடரும்....)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
பாகம் 4

August 26, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 4

பாகம் 1
பாகம் 2
பாகம் 3
என் 9 வருட IT வாழ்க்கையில் ஏறத்தாழ 5 வருடங்கள் மலையாளதேச டெமெஜர்களுடன் கழித்துள்ளேன். குழுமனப்பான்மைக்கு இவர்களை விட்டால் ஆளில்லை.எல்லாவற்றிலும் அவர்கள் இனத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமைக்கொடுப்பார்கள். கஷ்டப்பட்டு ஜாவா,சி,சி++ மொழிகள் கற்றுக்கொள்வதற்கு பதில் 30 நாட்களில் மலையாளம் கற்றுக் கொண்டால் நம்முடைய கேரியர் புரோக்ரஷன் வேகமாக இருக்கும் என நண்பர்களுடன் சீரியசாக பலமுறை விவாத்திருக்கிறோம்.

இவர்கள் விஷயம் எப்படியென்றால்,ஏதாவதொரு முக்கியப்பொறுப்பில் ஒரு மலையாளி இருக்கிறார் என்றால்,அவருக்கு கீழேயுள்ள அனைத்து முக்கியப் பொறுப்புகளிலும்,குறைந்தது 80% மல்லுக்'களையே பார்க்கலாம்.அதற்குப்பிறகு அவர்கள் ராஜ்ஜியம்தான்.

நான் முன்பிருந்த க்ரூப்'பின் வைஸ் ப்ரசிடென்ட் ஒரு மல்லு.அவருக்கு டைரக்ட் ரிபோர்டீஸ்(group head,delivery head,solution head,program mgr etc)எல்லோருமே மல்லுஸ்தான்.ஒரே தமிழரும்,பெங்காலியும் எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அவருக்கு கீழ் பணிப்புரிந்தார்கள்.அந்த க்ரூப்பில் வரும் progression, stock options,qurterly best performer awards எல்லாமே அவர்கள் மக்களுக்கு மட்டும் கிடைக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.

ஒருமுறை நண்பன் ஒருவர், ஒரு கேண்டிடெடை முதல்சுற்று இண்டர்வியூ செய்துவிட்டு அவருடைய மல்லு பாஸிடம் சென்று,அந்த கேண்டிடேட் பிலோ ஆவெரேஜ்'தான், நிராகரித்துவிடலாம் என சொல்லியிருக்கிறார், resume'யை வாங்கிப்பார்த்த அந்த மல்லு டேமேஜர் அவன் மல்லுவென தெரிந்துக்கொண்டு,'கேரளாவிலிருந்து வந்து இருக்கிறான், கண்டிப்பாக நன்றாக வேலை செய்வான்' எனச்சொல்லி அவனை தேர்வுசெய்யச் சொல்லி விட்டார். நண்பன் ஆடிப்போய்விட்டான்.

ஒரு டீம் மீட்டிங் எனப்போனால்,அங்கே பெரும்பாலும் மலையாளத்தில்தான் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.அதேப்போல் லன்ச்'க்கு போகும்போதும் அவர்கள் குழுவோடுதான் செல்வார்கள். தவறியும் வேறுயாரையும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்.

வேலை விஷயத்தில் தெலுங்குதேச மக்களைவிட நன்றாக செயல் படுவார்கள்.ஆங்கிலம் பிரச்சனையாக இருக்காது,என்ன பிரச்சனையென்றால், எல்லாவற்றிலும் 'ஓ' சேர்த்து விடுவார்கள்.ஒரு மல்லுப்பொண்ணு ஒரு டீமி'ல் இருக்கிறது என்றால்,அனைத்து இள(ன)ங்காளைகளும் போட்டிப் போட்டுக்கொண்டு அவள் வேலையை முடித்துக்கொடுத்துவிடுவார்கள்.

நான் கடந்த வருடம் ஒரு ப்ராஜக்டில் டேமேஜராக இருந்தப்போது, எல்லாக்கடினமான வேலையையும் ஒரு மல்லுப்பெண்ணிற்கு கொடுத்து விடுவேன்.வேலை சுலபமாக முடிந்துவிடும்.சிலசமயம் மாலை 5 மணிக்குமேல் வேலையைக்கொடுத்து(குறைந்தபட்சம் 3 மணி நேரமாகும் முடிப்பதற்க்கு) அன்றே முடிக்கச்சொல்லிவிட்டு 6மணிக்கு நான் கிளம்பிவிடுவேன்.அப்பெண்ணும் 6மணிக்கு கிளம்பிவிடும்.ஆனால் அடுத்த நாள் காலையிலே அந்தவேலை முடிந்துவிட்டிருக்கும்.யார் அந்தவேலையை முடித்தார்கள் என்பது,அந்தப்பெண் 'லன்ச்'க்கு யாருடன் அன்று செல்கிறாள் எனப்பார்த்தால் விளங்கிவிடும். சில சமயங்களில் இந்த லாஜிக் அழகான வட இந்தியப்பெண்களுக்கும் பொருந்தும்.

அடுத்தப் பதிவில்(என்னுடைய வெற்றிக்கரமான 50வது பதிவு) 'தங்கத் தமிழனின்' சேவை/லீலைகளைப் பற்றி எழுதுகிறேன்...
(தொடரும்...)

பாகம் 1
பாகம் 2
பாகம் 3

August 25, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3

பாகம் 1 பாகம் 2
கொல்கத்தாவிலிருந்து USA தலைநகரான ஹைதராபாத் வர முதலில் ப்ளைட்தான் தேர்வுசெய்திருந்தேன்.ஒரு மாறுதலுக்காக ரயிலில் பயணம் செய்யலாமென முடிவு செய்து ரயிலில் வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை! ( அடப்பாவி, வாரயிறுதி முழுவதும் இழுத்துப்போர்த்தி தூங்கிவிட்டு,போதாக்குறைக்கு நேற்று முழுவதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு,இப்படி ஒரு பில்டப்பா??? )...ஒகே..ஓகே...இப்ப நம்ப கதையைப் பார்க்கலாம்...
IT துறையில் தமிழர்களுக்கு இணையாக,இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட அதிக சதவிகிதத்தில் கோலோச்சுபவர்கள் தெலுங்குமக்களே....எல்லாப்புகழும் சந்திரபாபு'காருக்கே.... ஆந்திராவிலிருந்து ஏதாவது ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் எந்த ஆணைக்கேட்டாலும்,பெரும்பாலானவர்கள் அவர்கள் லட்சியமாக கூறுவது...எப்படியாவது என்ஜினியரிங் முடித்துவிட்டு,முடிந்தால் கேம்பஸில் ஏதாவது ஒரு MNC'யிலேயோ அல்லது service company'யிலோ வேலை வாங்கி இந்தியாவில்,பல்லைக்கடித்துக்கொண்டு 2-3 வருடங்களைக் கழித்துவிட்டு ஏதாவதொரு வழியில் US-longterm வாங்கிக்கொண்டு US சென்றுவிடவேண்டியது,அல்லது குறைந்தப்பட்சம் 2-3months shortterm assigment'ஆக US போய்விட்டு வந்து US Return என்ற 'tag'கோடு, உடனடியாக பெண்பார்த்து லட்சக்கணக்கான(சிலருக்கு கோடிக்கணக்கில்) வருமானத்துடன் வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டியது. இதுதான் பெரும்பாலோனோரின் குறைந்தப்பட்ச லட்சியம்.
மேலும் இந்திய கம்பெனி வழியாக H1B-BL1 விசாவோ வாங்கி அங்கு சென்றுவிட்டு, project ஏதாவதொருக்காரணத்தால் close ஆகிவிட்டால்,அங்கிருந்தே ரிசைன் செய்துவிட்டு ஏதாவதொரு கன்சல்டன்சி கம்பெனி வழியாக வேறு வேலைக்கு தாவிவிடுவதில் முதலிடம் ஆந்திர மக்களுக்கே (நம்மவர்கள் இரண்டாமிடம்). மேலும் அவர்கள் சேரும் கன்சல்டன்சி கம்பெனிகள் பெரும்பாலும் ரொம்ப நாளைக்கு முன்னால் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்ட ஆந்திர'வாடுவின் கம்பெனியாக இருக்கும்(இந்த கன்சல்டன்சி கம்பெனி எனும் போர்வையில் இவர்கள் காசுப் பண்ணும் வித்தைகளை விரைவில் எழுதுகிறேன்).

கேம்பஸில் வேலைக்கிடைக்காதோர் அல்லது அவர்கள் 'மார்க்கெட் வேல்யுவை' அதிகப்படுத்த விரும்புவோர் தெர்ந்தெடுக்கும் அடுத்தவழி 'அமெரிக்காவில் மேற்படிப்பு'(பெரும்பாலும் MS). அமெரிக்காவின் ஏதாவதொரு யுனிவர்சிட்டியில் இடம்பிடித்து அங்கு செல்வதற்கான விசா,தங்கும் இடம்,செலவுக்கான பணம்/வேலை ஆகியவவைகளை தயார் செய்துவிட்டு அங்கு சென்று விடுவார்கள். படிப்பு முடிந்தவுடன் மேற்சொன்ன 'கன்சல்டன்சி கம்பெனி' வழியாக ஏதாவதொருக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.பிறகு வழக்கம்போல போட்ட முதலை,வட்டியுடன் எடுக்க,கல்யாணம்,கச்சேரி,பிறகு க்ரீன்கார்டுக்கான கடும்தவம்.

அமெரிக்கா செல்வதற்கான முதல்படி விசா(H1B/BL1/Business/student visa) வாங்குவது.விசா பெறுவதற்கான முதற்கட்ட வேலைகளை முடித்து, சென்னையில் உள்ள US கவுன்ஸ்லெட்டில் இண்டர்வியு தேதி முடிவானவுடன்,பெரும்பாலான ஆந்திரவாசிகள் படை எடுப்பது 'விசா பாலாஜி (அ) விசா வெங்கனா'யை தரிசிக்க ஹைதராபாத் அருகிலுள்ள 'ச்சில்கூரு'க்கு. இந்தக்கோயிலுக்கு சென்று வேணடிக்கொண்டால் விசா கிடைப்பதில் எந்தச்சிக்கலும் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.விசாக்கிடைத்து ப்ளைட் டிக்கெட்,கிளம்பும் தேதி முடிவானவுடன் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் கண்டிப்பாக உண்டு.

நான் சிறிதுக்காலம் technical interview panel'ல் இருந்தேன்.சில HR மக்களிடமும் நல்ல பழக்கம் உண்டு.வரும் resume'க்களில் fake மிக அதிக சதவிகிதம் ஆந்திரமக்களிடமிருந்துதான்(வழக்கம் போல நம்மவர்கள் இரண்டாம் இடம்). அவர்கள் போட்டிருக்கும் யுனிவர்சிட்டி,வேலை செய்ததாகப் போட்டிருக்கும் கம்பெனிகள்(பெரும்பாலும் மன்னார்&கம்பேனியாக இருக்கும்) ப்ளாக்லிஸ்ட் பண்ணப்பட்டிருக்கும். இதில்தப்பி முதல்சுற்றுக்கு தேறுபவர்கள் டெக்னிக்கல் இண்டர்வியூக்கு வருவார்கள்.நான் வழக்கமாக அவர்கள் வேலை செய்த கடைசி புராஜக்ட் பற்றி விளக்க சொல்வேன்...அதிலேயே அவர்களின் திறைமை விளங்கிவிடும். ஒருமுறை தெலுங்குதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்திருந்தார்.அவரின் resume'வை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,tellme abt u' என்றுக் கேட்டுவிட்டு resume'வைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் resume'ல் என்ன படித்துக்கொண்டிருந்தேனோ,அதையே வார்த்தை மாறாமல், வரிபிசகாமல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா இது,சந்திரமுகியில் ரஜினி,வடிவேல் மனசில் நினைப்பதையெல்லாம் சொல்வதுபோல இந்தப்பெண்ணும் சொல்லுதே, ஏழாவதறிவு ஏதாவது வேலைச்செய்கிறதா என நிமிர்ந்துப் பார்த்தால், அவர்மடியில் ஒரு பைலை வைந்துக்கொண்டு,அதிலிருந்த மற்றோரு resume copy'யை பார்த்து சின்சியராக படித்துக்கொண்டிருந்தார்.நான்கேட்ட ஒரு சின்னக்கேள்விக்கு எவ்வளவு சின்சியரா பதில் சொல்றாங்க... இவங்க ரோ...ம்ம்ம்ம்ப நல்லவங்க'னு அத்தோட அந்த இண்டர்வியுவை முடித்துவிட்டேன்.

சமீபத்தில் ஒருக்கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூக்காக சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட 25 பேரை இண்டர்வியூ செய்து ஒரு 12 பேரை தேர்வுசெய்தேன்.அது தமிழகத்தில் உள்ள தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி(மேலும் அடியேன் ஒருகாலத்தில் படித்துப்பட்டம் பெற்றக்கல்லூரி).ஒரு 10 பேரைப் பார்த்தப்பிறகு 11வதாக ஒரு மாணவர் வந்தார்.ஹைதராபாத் சொந்த ஊர் என்றும், எங்கள் கம்பெனியில் வேலைப்பார்ப்பது லட்சியம் என்றும் சொன்னார்.நானும் வழக்கமாக மற்றவர்களைக் கெட்டக்கேள்விகளையே கேட்க ஆரம்பித்தேன்.எதற்கும் தெளிவான பதிலில்லை. ஆவரேஜ் லெவலில்கூட இல்லாததால்,அவரிடம் நீ தேர்வுபெறவில்லை,இப்போது போகலாமென கூறினேன்.அவ்வளவுதான்...அழும் நிலைக்கு சென்றுவிட்டார்...எப்படியாவது என்னை தேர்வு செய்துவிடுங்கள்,கம்பெனியில் சேர்வதற்க்கு முன்பு நன்றாகப் படித்து விடுகிறேன்' எனக்கூறி விடாப் பிடியாக அறையைவிட்ட வெளியே செல்லாமல் அடம் பிடித்தார்... இது என்னடா வம்பாப் போச்சி'யென வெளியிலிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டு அம்மாணவரை வெளியேற்றினேன்.

வேலை விஷயத்தில் பெரும்பாலான 'சுந்தர தெலுங்கர்கள்' அபொவ் ஆவெரெஜ் லெவலில் உள்ளார்கள்.ஒருவிஷயத்தை ஒருமுறைக்கு இருமுறை சொல்லவேண்டும்.மேலும் தொடர்ந்தக் கண்காணிப்பும் இருக்கவேண்டும்,இல்லையேல் சொதப்பிவிடுவார்கள். ஆங்கில அறிவிலும், தமிழ்நாட்டின் இரண்டாம்/மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துவரும் மக்கள் அளவுக்கு சிரமப் படுவார்கள்.development project'ஐவிட maintenance project'ல் போட்டுவிட்டால் ஓரளவிற்கு சிரமமில்லாமல் இவர்களை வைத்து வண்டியை ஓட்டிவிடலாம்.மொழிப்பாசம் மற்ற இனத்தவர்களைப்போல இவர்களுக்கும் உண்டு,team'ல் அவர்கள் இனத்தினருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
சமீபத்தில் முடிந்த 'appraisal cycle'ன்போது, என்னுடன் பணிப்புரியும் தெலுங்குதேச அன்பர் ஒருவர் வந்து அளாவளாவிக்கொண்டிருந்தார்.எப்போதும் வழியிலோ அல்லது ஏதாவதொரு மீட்டிங்கிலோ சந்தித்துக்கொண்டால் 'ஹாய்''பை' என்ற அளவில்தான் எங்கள் தொடர்ப்புஇருக்கும்.இப்போது வழக்கத்திற்க்கு மாறாகத்தானாக வந்துப்பேசிக் கொண்டிருக்கிறாரே என்ன விஷயம் எனக்கேட்டதற்க்கு அவருக்கு தெரிந்தவரின் 'appraisal' என்னிடம் வந்து இருப்பதாகவும்,பார்த்துப்போடுமாறும் கூறினார்.நானும் பார்த்துப் "போட்டு" விட்டேன்.;)).
இந்தியாவில் தெலுங்கு மக்களுடன் வேலைப்பார்த்ததைவிட அமெரிக்காவில் 3 வருடம் 'மடிப்பொட்டி' தட்டியபோது ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது,அதைப்பற்றி விரைவில் எழுதுகிறேன்.அடுத்தப்படியாக,ஹைதராபாத்திலிருந்து கொச்சினுக்கு செல்லலாமென இருக்கிறேன்...

(தொடரும்...)
பாகம் 1 பாகம் 2