Search This Blog

March 7, 2009

மாத்தி யோசி...

அவர் முதல்முறையாக ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அந்த காலக்கட்டத்தில் கல்வி அறிவு மிகமிகக்குறைவாக இருந்தது. நிலைமையை ஆராய்ந்தபோது,வறுமைக்காரணமாக சிறுவர்கள் வேலைக்குப்போய் சம்பாதித்து உண்ணவேண்டியிருப்பது தெரியவந்தது. சொல்லப்போனால்,முதல்வரே அவர் சிறுவனாக இருந்த காலத்தில் குடும்ப வறுமைக்காரணமாக படிக்க முடியவில்லை.

'செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்' என வள்ளுவர் ஒரு திருக்குறளில் சொல்லியிருப்பார்.ஆனால் செயல்முறை வாழ்க்கையில் வயிற்றில் ஏதாவதிருந்தால்தான் தன்னுணர்வு பெற்று,ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பதைக் காது கொடுத்து கேட்கமுடியும் என்பதை அந்த முதல்வர் அறிந்திருந்தார்.

ஆகவே,அனைத்துப் பள்ளிகளிலும் 'இலவச மதிய உணவு' என்ற ஒரு அருமையான திட்டத்தை ஆரம்பித்தார்.ஒரு வேளையாவது தன் மகன்/மகள் நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினார்கள். அந்த உணவை உண்டு,மாணவர்களும் செஞ்சோற்றுக் கடனாக நன்கு படித்து அந்த மாநிலத்தை இந்தியாவில் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் சிறந்ததாக மாற்றினார்கள்.

அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் காமராஜ்.அவர் காதலித்தக் கொள்கை 'மாற்று வழி'.வள்ளுவனின் குறளுக்கான பொருளை மாற்றி யோசித்ததால் ஒரு கல்விப்புரட்சி பிறந்தது.

4 comments:

Anonymous said...

Is your name Mohan?

நட்புடன் ஜமால் said...

அவர் மக்களிடமும் அரசியலிலும் மாற்றம் வேண்டும் என்பதற்காக மாற்றி யோசித்தார்


இவர்கள் மாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசிக்கின்றனர்

எதை எதை என்று கேட்காதீர்கள் பட்டியல் நீளும் ...

மோகன் said...

//Anonymous said...
Is your name Mohan?
////

அனானி..நீங்க யாரு??

மோகன் said...

//அவர் மக்களிடமும் அரசியலிலும் மாற்றம் வேண்டும் என்பதற்காக மாற்றி யோசித்தார்


இவர்கள் மாற்ற வேண்டும் என்று மட்டுமே யோசிக்கின்றனர்

எதை எதை என்று கேட்காதீர்கள் பட்டியல் நீளும் ...///

ஜமால்..
உண்மைதான்...பட்டியல் போட முடியாது..