Search This Blog

March 5, 2009

வானமே எல்லை

புகைப்படம் : கல்யாண் சுப்ரமணி & ஷிவானி சுதாகர்
புது உலகம்தான்
இது நமக்கு!
புதுமைகளும்,
புதிர்களுமே
காத்திருக்கின்றன,

வழியெங்கும்
நம்மை வரவேற்க்க.

அடுத்தவர்களை
எதிர்ப்பார்க்காதே,
அவநம்பிக்கை
கொள்ளாதே!
நமக்கு நாமே
எதிர்கொள்வோம்,
காத்திருக்கும்
சவால்களை!

வானம்தான்
நமக்கு எல்லை,
அடையும்வரை
உறக்கம் இல்லை.


கைக்கோர்த்து வா
நண்பனே!

உலகத்தை வெல்லவே
புதிதாய்
பிறந்திருக்கிறோம்
நாம்.

2 comments:

மாதேவி said...

"புது உலகம்தான் இது நமக்கு! ....உலகத்தை வெல்லவே
புதிதாய் பிறந்திருக்கிறோம்" அருமையான வரிகள்.வாழ்த்துக்கள்.

மோகன் said...

மாதேவி..
வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி