Search This Blog

August 25, 2008

IT துறை : ஜாதிகள்(மட்டும்) இல்லையடி பாப்பா...பாகம் 3

பாகம் 1 பாகம் 2
கொல்கத்தாவிலிருந்து USA தலைநகரான ஹைதராபாத் வர முதலில் ப்ளைட்தான் தேர்வுசெய்திருந்தேன்.ஒரு மாறுதலுக்காக ரயிலில் பயணம் செய்யலாமென முடிவு செய்து ரயிலில் வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக பதிவு எழுத முடியவில்லை! ( அடப்பாவி, வாரயிறுதி முழுவதும் இழுத்துப்போர்த்தி தூங்கிவிட்டு,போதாக்குறைக்கு நேற்று முழுவதும் கிரிக்கெட் மேட்ச் பார்த்துட்டு,இப்படி ஒரு பில்டப்பா??? )...ஒகே..ஓகே...இப்ப நம்ப கதையைப் பார்க்கலாம்...
IT துறையில் தமிழர்களுக்கு இணையாக,இன்னும் சொல்லப்போனால் தமிழர்களைவிட அதிக சதவிகிதத்தில் கோலோச்சுபவர்கள் தெலுங்குமக்களே....எல்லாப்புகழும் சந்திரபாபு'காருக்கே.... ஆந்திராவிலிருந்து ஏதாவது ஒரு கல்லூரியில் என்ஜினியரிங் படித்துக்கொண்டிருக்கும் எந்த ஆணைக்கேட்டாலும்,பெரும்பாலானவர்கள் அவர்கள் லட்சியமாக கூறுவது...எப்படியாவது என்ஜினியரிங் முடித்துவிட்டு,முடிந்தால் கேம்பஸில் ஏதாவது ஒரு MNC'யிலேயோ அல்லது service company'யிலோ வேலை வாங்கி இந்தியாவில்,பல்லைக்கடித்துக்கொண்டு 2-3 வருடங்களைக் கழித்துவிட்டு ஏதாவதொரு வழியில் US-longterm வாங்கிக்கொண்டு US சென்றுவிடவேண்டியது,அல்லது குறைந்தப்பட்சம் 2-3months shortterm assigment'ஆக US போய்விட்டு வந்து US Return என்ற 'tag'கோடு, உடனடியாக பெண்பார்த்து லட்சக்கணக்கான(சிலருக்கு கோடிக்கணக்கில்) வருமானத்துடன் வாழ்க்கையில் செட்டில் ஆகவேண்டியது. இதுதான் பெரும்பாலோனோரின் குறைந்தப்பட்ச லட்சியம்.
மேலும் இந்திய கம்பெனி வழியாக H1B-BL1 விசாவோ வாங்கி அங்கு சென்றுவிட்டு, project ஏதாவதொருக்காரணத்தால் close ஆகிவிட்டால்,அங்கிருந்தே ரிசைன் செய்துவிட்டு ஏதாவதொரு கன்சல்டன்சி கம்பெனி வழியாக வேறு வேலைக்கு தாவிவிடுவதில் முதலிடம் ஆந்திர மக்களுக்கே (நம்மவர்கள் இரண்டாமிடம்). மேலும் அவர்கள் சேரும் கன்சல்டன்சி கம்பெனிகள் பெரும்பாலும் ரொம்ப நாளைக்கு முன்னால் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்ட ஆந்திர'வாடுவின் கம்பெனியாக இருக்கும்(இந்த கன்சல்டன்சி கம்பெனி எனும் போர்வையில் இவர்கள் காசுப் பண்ணும் வித்தைகளை விரைவில் எழுதுகிறேன்).

கேம்பஸில் வேலைக்கிடைக்காதோர் அல்லது அவர்கள் 'மார்க்கெட் வேல்யுவை' அதிகப்படுத்த விரும்புவோர் தெர்ந்தெடுக்கும் அடுத்தவழி 'அமெரிக்காவில் மேற்படிப்பு'(பெரும்பாலும் MS). அமெரிக்காவின் ஏதாவதொரு யுனிவர்சிட்டியில் இடம்பிடித்து அங்கு செல்வதற்கான விசா,தங்கும் இடம்,செலவுக்கான பணம்/வேலை ஆகியவவைகளை தயார் செய்துவிட்டு அங்கு சென்று விடுவார்கள். படிப்பு முடிந்தவுடன் மேற்சொன்ன 'கன்சல்டன்சி கம்பெனி' வழியாக ஏதாவதொருக் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துவிடுவார்கள்.பிறகு வழக்கம்போல போட்ட முதலை,வட்டியுடன் எடுக்க,கல்யாணம்,கச்சேரி,பிறகு க்ரீன்கார்டுக்கான கடும்தவம்.

அமெரிக்கா செல்வதற்கான முதல்படி விசா(H1B/BL1/Business/student visa) வாங்குவது.விசா பெறுவதற்கான முதற்கட்ட வேலைகளை முடித்து, சென்னையில் உள்ள US கவுன்ஸ்லெட்டில் இண்டர்வியு தேதி முடிவானவுடன்,பெரும்பாலான ஆந்திரவாசிகள் படை எடுப்பது 'விசா பாலாஜி (அ) விசா வெங்கனா'யை தரிசிக்க ஹைதராபாத் அருகிலுள்ள 'ச்சில்கூரு'க்கு. இந்தக்கோயிலுக்கு சென்று வேணடிக்கொண்டால் விசா கிடைப்பதில் எந்தச்சிக்கலும் இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கை.விசாக்கிடைத்து ப்ளைட் டிக்கெட்,கிளம்பும் தேதி முடிவானவுடன் திருப்பதி வெங்கடாசலபதியின் தரிசனம் கண்டிப்பாக உண்டு.

நான் சிறிதுக்காலம் technical interview panel'ல் இருந்தேன்.சில HR மக்களிடமும் நல்ல பழக்கம் உண்டு.வரும் resume'க்களில் fake மிக அதிக சதவிகிதம் ஆந்திரமக்களிடமிருந்துதான்(வழக்கம் போல நம்மவர்கள் இரண்டாம் இடம்). அவர்கள் போட்டிருக்கும் யுனிவர்சிட்டி,வேலை செய்ததாகப் போட்டிருக்கும் கம்பெனிகள்(பெரும்பாலும் மன்னார்&கம்பேனியாக இருக்கும்) ப்ளாக்லிஸ்ட் பண்ணப்பட்டிருக்கும். இதில்தப்பி முதல்சுற்றுக்கு தேறுபவர்கள் டெக்னிக்கல் இண்டர்வியூக்கு வருவார்கள்.நான் வழக்கமாக அவர்கள் வேலை செய்த கடைசி புராஜக்ட் பற்றி விளக்க சொல்வேன்...அதிலேயே அவர்களின் திறைமை விளங்கிவிடும். ஒருமுறை தெலுங்குதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் வந்திருந்தார்.அவரின் resume'வை வாங்கி பார்த்துக்கொண்டிருக்கும்போதே,tellme abt u' என்றுக் கேட்டுவிட்டு resume'வைப் புரட்டிக் கொண்டிருந்தேன். நான் resume'ல் என்ன படித்துக்கொண்டிருந்தேனோ,அதையே வார்த்தை மாறாமல், வரிபிசகாமல் சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா இது,சந்திரமுகியில் ரஜினி,வடிவேல் மனசில் நினைப்பதையெல்லாம் சொல்வதுபோல இந்தப்பெண்ணும் சொல்லுதே, ஏழாவதறிவு ஏதாவது வேலைச்செய்கிறதா என நிமிர்ந்துப் பார்த்தால், அவர்மடியில் ஒரு பைலை வைந்துக்கொண்டு,அதிலிருந்த மற்றோரு resume copy'யை பார்த்து சின்சியராக படித்துக்கொண்டிருந்தார்.நான்கேட்ட ஒரு சின்னக்கேள்விக்கு எவ்வளவு சின்சியரா பதில் சொல்றாங்க... இவங்க ரோ...ம்ம்ம்ம்ப நல்லவங்க'னு அத்தோட அந்த இண்டர்வியுவை முடித்துவிட்டேன்.

சமீபத்தில் ஒருக்கல்லூரிக்கு கேம்பஸ் இண்டர்வியூக்காக சென்றிருந்தேன்.கிட்டத்தட்ட 25 பேரை இண்டர்வியூ செய்து ஒரு 12 பேரை தேர்வுசெய்தேன்.அது தமிழகத்தில் உள்ள தெலுங்கு மைனாரிட்டி கல்லூரி(மேலும் அடியேன் ஒருகாலத்தில் படித்துப்பட்டம் பெற்றக்கல்லூரி).ஒரு 10 பேரைப் பார்த்தப்பிறகு 11வதாக ஒரு மாணவர் வந்தார்.ஹைதராபாத் சொந்த ஊர் என்றும், எங்கள் கம்பெனியில் வேலைப்பார்ப்பது லட்சியம் என்றும் சொன்னார்.நானும் வழக்கமாக மற்றவர்களைக் கெட்டக்கேள்விகளையே கேட்க ஆரம்பித்தேன்.எதற்கும் தெளிவான பதிலில்லை. ஆவரேஜ் லெவலில்கூட இல்லாததால்,அவரிடம் நீ தேர்வுபெறவில்லை,இப்போது போகலாமென கூறினேன்.அவ்வளவுதான்...அழும் நிலைக்கு சென்றுவிட்டார்...எப்படியாவது என்னை தேர்வு செய்துவிடுங்கள்,கம்பெனியில் சேர்வதற்க்கு முன்பு நன்றாகப் படித்து விடுகிறேன்' எனக்கூறி விடாப் பிடியாக அறையைவிட்ட வெளியே செல்லாமல் அடம் பிடித்தார்... இது என்னடா வம்பாப் போச்சி'யென வெளியிலிருந்த செக்யூரிட்டியைக் கூப்பிட்டு அம்மாணவரை வெளியேற்றினேன்.

வேலை விஷயத்தில் பெரும்பாலான 'சுந்தர தெலுங்கர்கள்' அபொவ் ஆவெரெஜ் லெவலில் உள்ளார்கள்.ஒருவிஷயத்தை ஒருமுறைக்கு இருமுறை சொல்லவேண்டும்.மேலும் தொடர்ந்தக் கண்காணிப்பும் இருக்கவேண்டும்,இல்லையேல் சொதப்பிவிடுவார்கள். ஆங்கில அறிவிலும், தமிழ்நாட்டின் இரண்டாம்/மூன்றாம் நிலை நகரங்களிலிருந்துவரும் மக்கள் அளவுக்கு சிரமப் படுவார்கள்.development project'ஐவிட maintenance project'ல் போட்டுவிட்டால் ஓரளவிற்கு சிரமமில்லாமல் இவர்களை வைத்து வண்டியை ஓட்டிவிடலாம்.மொழிப்பாசம் மற்ற இனத்தவர்களைப்போல இவர்களுக்கும் உண்டு,team'ல் அவர்கள் இனத்தினருக்கு முன்னுரிமை அளிப்பார்கள்.
சமீபத்தில் முடிந்த 'appraisal cycle'ன்போது, என்னுடன் பணிப்புரியும் தெலுங்குதேச அன்பர் ஒருவர் வந்து அளாவளாவிக்கொண்டிருந்தார்.எப்போதும் வழியிலோ அல்லது ஏதாவதொரு மீட்டிங்கிலோ சந்தித்துக்கொண்டால் 'ஹாய்''பை' என்ற அளவில்தான் எங்கள் தொடர்ப்புஇருக்கும்.இப்போது வழக்கத்திற்க்கு மாறாகத்தானாக வந்துப்பேசிக் கொண்டிருக்கிறாரே என்ன விஷயம் எனக்கேட்டதற்க்கு அவருக்கு தெரிந்தவரின் 'appraisal' என்னிடம் வந்து இருப்பதாகவும்,பார்த்துப்போடுமாறும் கூறினார்.நானும் பார்த்துப் "போட்டு" விட்டேன்.;)).
இந்தியாவில் தெலுங்கு மக்களுடன் வேலைப்பார்த்ததைவிட அமெரிக்காவில் 3 வருடம் 'மடிப்பொட்டி' தட்டியபோது ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது,அதைப்பற்றி விரைவில் எழுதுகிறேன்.அடுத்தப்படியாக,ஹைதராபாத்திலிருந்து கொச்சினுக்கு செல்லலாமென இருக்கிறேன்...

(தொடரும்...)
பாகம் 1 பாகம் 2

5 comments:

TBCD said...

கலக்கல்..தொடரவும்.....
ஃஃஃஃஃஃ
தமிழ்மணத்தில் உங்கள் பதிவின் இனைப்பை சொடுக்கினால், காணவில்லை என்று வருகிறது. என்ன பிரச்சனை என்று பார்க்கவும்....

Anonymous said...

இத்தொடர் ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. பாராட்டுக்கள் !

Anonymous said...

///இந்த கன்சல்டன்சி கம்பெனி எனும் போர்வையில் இவர்கள் காசுப் பண்ணும் வித்தைகளை விரைவில் எழுதுகிறேன்///

இந்த மேட்டரை எப்போது டச் பண்ணபோறீங்க ?

மோகன் said...

//இந்த மேட்டரை எப்போது டச் பண்ணபோறீங்க ?///
தமிழ் மற்றும் கன்னட மக்களின் பங்களிப்பை சொல்லிவிட்டு,அமெரிக்கவாழ் இந்தியர்களைத் தொடலாமென இருக்கிறேன் ரவி....

xtraHotChai said...

Hello Mohan,

Thought i would say few words here, as if everything in this world going good, you have written some of the things about IT sector.
I guess its everyone's freedom to write anything, but would appreciate if you can write after analysing things in a proper way, not to write just for getting popularity.