Search This Blog

April 15, 2005

காதல் கோட்டை

முதல்நாள் தலைநகர்வலத்திற்கு பிறகு,ஞாயிறன்று ஆக்ரா செல்ல ட்ராவல்சில் டிக்கட் வாங்கியிருந்தேன். ஏ.சி பஸ்ஸில் சொகுசு பயணம்.
பெரும்பாலோர் தென்னிந்தியாவிலிருந்து என்னைபோல் சுற்றிபார்க்க வந்திருந்தவர்கள்.நான்கு மணி நேர பயணம்.
முதலில் ஆக்ரா கோட்டை.மிக பிரமாண்டமான கோட்டை.ட்ராவல்சில் ஒரு கைடை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அந்த கோட்டையின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தார்.
ஒளரங்கசீப்,அவர் தந்தையான ஷாஜகானை சிறை வைத்திருந்த மேல்மாடத்திலிருந்து தூரத்தில்(குறைந்தது 2 கி.மீ) தாஜ்மஹால் ஒரு காதல் காவியத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது. நீங்கள் காதல் அனுபவமுள்ளவரெனில்,கண்டிப்பாக,அந்த இடத்தில் நிற்க்கும்போது ஒரு 'ஆட்டோக்ராப்' புத்தம் புதிய காப்பியாக ஓடும்(எனக்கு எதுவும் ஓடலீங்கண்ணா.....;)))).).
அதற்கடுத்து ஒரு தர்பார் உள்ளது. அந்த காலத்தில் அதுதான் மிகப் பெரிய தர்பார் மண்டபமாம். மண்டபத்தின் எந்த பகுதியிலிருந்தும் மன்னரை பார்க்ககூடிய வகையில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.மிக நெர்த்தியான கட்டடக்கலை.அந்த தர்பாரை சுற்றி நான்கு மாடங்கள் உள்ளது.அதில் ராணிகள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்க்கலாம்.ஒரு அரசனுக்கு ஒரு ராணிதானே,அப்போ எதுக்கு நான்கு மாடங்கள் ? அதற்கு எங்கள் கைடு ஒரு அருமையான விளக்கம் சொன்னார். சட்டப்படி முஸ்லிம் மன்னர்கள் நான்கு ராணிகளை மணந்துகொள்ளலாமாம், ஆளுக்கு ஒரு மாடத்திலிருந்து சபையை கவணிக்கலாம்.மேலும்,சட்டப்படிதான் நான்கு,தேவையெனில் எததனை பெண்களையாவது அரண்மனையில் வைத்திருக்கலாம்.அதற்க்கென்று ஒரு பகுதியே இருக்கிறது..ம்..ம்ம்.....கொடுத்து வைத்தவர்கள். மெலும் ராணிகள் நீராட ஒரு கண்ணாடி அறை இருக்கிறதாம்.அந்த அறை முழுவதும் சிறுசிறு ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.குளிப்பவரின் ஆயிரக்கணக்கான உருவங்கள் அறை முழுவதும் வியாப்பித்திருக்குமாம்..ம்ம்ம்ம்..என்னே ஒரு ரசனை........அந்த அறை இப்போது பார்வையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.. எந்த ராணிக்கு கொடுத்துவைத்திருக்கிறதோ..மீண்டும் அந்த அறையை உபயோகப்படுத்த......

அடுத்த பயணம், காதல் கல்லறையை நோக்கி....மனம் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன்,உலக அதிசயத்தை நோக்கி பயணம். வெயில் சுட்டெரிக்கிறது...கூட்டம் அலை மோதுகிறது... நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு,கடும் சோதனைகளை முடித்துக்கோண்டு உள்ளே நுழைந்தோம். எட்டிவிடும் தூரத்தில் ஒரு காதல் காவிய சின்னம்.நிதானமாக நடை பயின்று கண்கள் வழியாக அந்த அழகுப்பெட்டகத்தை பருகிக்கொண்டே அருகில் சென்றென்.
உண்மையில் தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம்தான்.ஒவ்வொரு அடியும்,கலைநயத்துடனும், சிறந்த வேலைபாடுகளுடனும் காதலைக் கலந்து வடிக்கப்பட்டிருக்கிறது. எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் ஒரு சிறந்த காட்சியை கண்ணுக்கு விருந்தளிக்கிறது.ஒரு மணி நெரத்திற்கும் அதிகமாக அங்கு சுற்றிவிட்டு, அனைத்து காட்சிகளையும் கேமராவில் சிறைபிடித்து,பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்த பயணம், குழந்தை கண்ணன் பிறந்த மதுராவை நோக்கி. ஆக்ராவிலிருந்து 45 நிமிடப்பயணம். மதுராவில் ஒரு குறுகலான பாதை வழியே பயண்ம் சென்று கோயிலிருக்கும் இடத்தை அடைந்தோம். இங்கும் மிக கடுமையான பாதுகாப்பு.எந்திர துப்பாக்கிகளுடன் பார்க்கும் இடங்களில் எல்லாம் போலிஸ் தலைகள்.கோயிலை அடைந்த பிறகுதான் அதற்க்கான காரணம் புரிகிறது.கோயிலை மிக ஒட்டியே ஒரு பிரமாண்டமான மசூதி தெரிகிறது. ஒளரங்கசீப் காலத்தில் மதுரா சிறையை இடித்துவிட்டு எழுப்பப்பட்ட மசூதியென வரலாறு சொல்கிறார்கள்.அடுத்த 'அயோத்'தீ'க்கான சாத்தியகூறுகள் கண்கூடாகத்தெரிகிறது.
கோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணன் பிறந்த சிறைகூடம் மக்கள் கூட்டத்தால்
நிரம்பி வழிகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே இருக்கிறது ஆக்ராவிலும், மதுராவிலும். ஏழ்மையும்,சுகாதாரமில்லாத சுற்றுப்புறமும், உலக அதிசயம் இருக்கும் இடத்தில், அநியாயமாக இருக்கிறது.
ம்...ம்....இதுதான் இந்தியா.......

3 comments:

எழில் said...

மோகன்,

நல்ல நடை. தொடர்ந்து எழுதுங்கள். இடங்களைப் பற்றிய தகவல்கள் இன்னும் சில (Details) இருந்தால் விரிவாகவே தரலாம். சில எழுத்துப்பிழைகளைக் கவனியுங்கள். புகைப்படங்கள் இருந்தால் இடையிடையே அவற்றையும் வெளியிடலாம்.
வாழ்த்துக்கள்!

எழில்.

Boston Bala said...

ரொம்ப நாள் கழித்து மீண்டும் ஆக்ரா விஸிட் கொடுத்தது போன்ற ஃபீலிங். நல்லா இருக்குங்க...

Anonymous said...

I never thought you will be able to write this still now i am not beliving myself you have written this. I usually say I am from tamil nadu but I don't know how to write in this format. cool man you have lots of stuff in our chat I said you are lucky but you are so lucky man keep it up.