Search This Blog

April 8, 2005

மந்த்ராலயம்

கடந்த வாரம் வியாழனன்று மந்த்ராலயம் போனால் என்ன என்று தோன்றியது.உடனே KSRTC booking center சென்று அன்று இரவு பஸ்சுக்கு டிக்கட் புக் பண்ணிவிட்டு வந்துவிட்டேன். office'ல் மிச்சம் மீதி இருந்த வேலைகளை முடித்துவிட்டு விடு ஜூட். பயணத்திற்கு தேவையானவைகளை எடுத்துகொண்டு மெஜஸ்டிக் வந்து 9:30 பஸ் பிடித்தேன். வியாழன் என்பதால் கூட்டம் கம்மியாகயிருந்தது.கண்டக்டர் டிக்கெட் மாடி'பிட்டு ஹொஹி'னபிறகு யாருடைய தொந்தரவுமின்றி MP3 ப்ளேயரை காதில்மாட்டிகொண்டு பாலகுமாரன் படிக்க ஆரம்மித்துவிட்டேன்.பேங்களூர்-மந்த்ராலயம் 9 மணி நேரப்பயணம்.இடையே இரண்டு முறை ஏதாவது பொட்டல் காட்டில் டீ,காபி காட்டுவார்கள்.பயணம் ஒன்றும் அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது.இப்போதுதான் சாலைகளை அகலபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.
அரைகுறையாக தூங்கி காலை 630'க்கு வெற்றிகரமாக மந்த்ராலயம் அடைந்தேன்.பஸ் ராய்ச்சூர்வரை செல்லும். மந்த்ராலயத்தில் என்னை தவிர வேறு யாரும் இறங்கவில்லை.என்னை வரவேற்க்க ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது.( எல்லாம் லாட்ஜ் ப்ரொக்கர்கள்) ஒரு வழியாக அவர்களிடம் தப்பித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றேன். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.நல்ல தரிசனம்.விரும்பினால் அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலாம்.ஆனால் எல்லா தினங்களிலும் அனுமதிப்பதில்லை.கூட்டம் மிக குறைவாக இருக்கும் தினங்களில் யாரும் கண்டுக்கொள்வதில்லை.1 மணி நேரம் உள்ளே இருந்தேன். அதற்குபிறகு வழக்கமாக அங்கிருந்து 15 KM தூரத்தில் ஒரு கோயிலுக்கு அனைவரும் செல்வார்கள்.எனக்கு இது 4'வது பயணம்.அன்று வெயிலும் மிக அதிகம்.அறைக்கு திரும்பிவிட்டேன்.மாலை மறுபடியும் தரிசித்துவிட்டு சில பொருட்கள் (மற்றவர்களுக்கு கொடுக்க) வாங்கிகொண்டு,அறையை காலி செய்துவிட்டு 8 PM பஸ் பிடித்தேன்.மொத்தத்தில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

No comments: