Search This Blog

April 14, 2005

தலைநகர்வலம்

கடந்த திங்களன்று விசாநீட்டிற்புக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. சனியன்றே சென்றுவிட்டேன்.அன்று முழுவதும் குதுப்பினார், தாமரை கோவில் , செங்கோட்டை, இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை, பிர்லா மந்திர் ஆகிய இடங்களை சுற்றினேன்.வெயில் குறைவாகவும், ட்ராவல்ஸ் வழியாக கார் ஏற்பாடும் ஆங்கிலம் தெரிந்த ஓட்டுனர் இருந்ததாலும் பயணம் நன்றாகயிருந்தது.
முதலில் குதுப்பினார்.நான் உயரம் மிக அதிகமாகயிருக்கும் என எதிர்பார்ப்புடன் சென்றேன்.ஆனால் ஏற்கனவே மிக உயரமான கட்டிடங்களை இந்தியாவிலும்,அமெரிக்கா,ஜப்பானிலும் பார்த்திருந்ததால் குதுப்பினார் ஏமாற்றமாக இருந்தது. சில போட்டோக்கள் எடுத்துகோண்டேன்.அப்போது அங்கு ஒரு குடும்பம் வந்தது.நான் லேட்டஸ்ட் மாடல் டிஜிட்டல் கேமரா வைத்து இருக்கிறேன்.அதை அந்த குடும்ப தலைவர் போலிருந்தவரிடம் கொடுத்து என்னை குதுப்பினார் முன் இருப்பது போல ஒரு க்ளிக்'க சொன்னேன்.எடுத்து முடித்ததும்,அந்த குடும்பம் முழுவதும் கேமராவை ஆராயத்தொடங்கியது.ஏதேதோ இந்தியில் பேசிக்கோண்டார்கள்.நான் 'பே'வேன முழித்துக்கொண்டிருந்தேன்.(திராவிட ஆட்சிகளின் புண்ணியத்தில் நமக்கு இந்தி நஹி மாலும். ;))
கடைசியில் ஒருவர் என்னிடம் வந்து கேமரா விலையென்ன என்று கேட்டார். இருபதாயிரம் என்றேன். மறுபடியும் ஒரு 'மந்திராலோசனை செய்துவிட்டு, 'எங்களுக்கு எவ்வளவுக்கு தருவீர்கள்' என கேட்டார்.(எல்லாம் இந்தியில்தான்). நான் அரைகுறை இந்தி,ஆங்கிலத்தில் 'இது விற்பனைக்கு நஹி..நஹி...' என சொல்லிவிட்டு கேமராவை வாங்கிகொண்டு வந்துவிட்டேன். நான் அங்கிருந்தவரை, என் பின்னாலேயே வந்து நான் கேமராவில் போட்டோ எடுப்பதை பார்த்துகொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து கிளம்பி தாமரை கோயில், செங்கோட்டையை பார்த்து விட்டு,நேரு,காந்தி சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். இதுவரை தொலைகாட்சியில் பார்த்திருந்த பகுதிகள், நேரில் பார்க்க அருமையாகயிருந்தது.பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகை அருகே செல்ல முடியவில்லை(ம்ம்ம்..ம்ம்..நம்ம ஊர்காரர்தான் உள்ளே இருக்கிறார்).காரிலிருந்தே பார்க்கலாம்.அதே நிலைதான் பார்லிமெண்ட் வளாகத்திற்கும்.
மாலையில் பிர்லா மந்திர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.அங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.மொபைல் போன் கூட எடுத்து செல்ல கூடாது. அதற்கெனயிருக்கும் கவுண்டரில் கொடுத்துவிட்டுதான் செல்ல வெண்டும்.
கோயிலை மிகவும் சிறப்பாகவும்,நெர்த்தியாகவும் கட்டியிருக்கிறார்கள்.அந்த இடம் மனதிற்கு இதமாகவும்,அமைதியாகவும் இருந்தது.

ஒரு நாள் முழுவதும் சுற்றியதில், புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் மிக பெரிய வித்தியாசங்கள் தெரிந்தது. புதுடெல்லியில், அகலமான சாலைகளும்,நெர்த்தியான பாலங்களும், சிக்னல்களும்,வழி முழுவதும் பசுமையாக இருக்கிறது.முக்கியமாக இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை,பார்லிமெண்ட் வளாகம், மந்திரிகள் குடியிருப்பு, அலுவகங்கள்.
புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் நடுவில் ஒரு பாலம் இருக்கிறது.அதை தாண்டிய உடன் ஏதோ வேரொரு உலகத்தில் நுழைந்தது போலிருக்கிறது.
கடினமான போக்குவரத்து,குறுகிய சாலைகள்,பழங்காலத்து கட்டிடங்கள்,குறுக்கும்,நெடுக்கும் ஓடும் மக்கள்....அழுக்கான ந(ர)க(ர)மாக காட்சியளிக்கிறது.
ம்ம்ம்.....இதுதான் இந்தியா.......

1 comment:

appan ganapathy said...

அன்புள்ள மோகன் அவர்களுக்கு,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உமது பயணக் கட்டுரைகளைப் படித்து ரசித்தேன்.
நன்றாக உள்ளன. மேலும் எதிர்பார்க்கிறேன்.
நானும் " நாளை நமதே" என்ற பெயரில் வலைப் பக்கம் புனைய ஆரம்பித்துள்ளேன். நுழைந்து ,படித்து கருத்துக்கள் கூற ஆவலுடன் அழைப்பு விடுக்கிறேன்.

அன்புடன்

கணபதி