Search This Blog

January 21, 2008

முடிவில்லா பயணம்.....

வேகமாக சென்றுக்கொண்டிருக்கும்
வாழ்க்கை பயணத்தில் ஒரு தடங்கல்...
அலசியபோது அற்புதமாயில்லை
நடந்துவந்த தடங்கள்...
காயப்பட்டிருக்கிறது நேசித்த
சில மனங்கள்;
வாழ்வின் நிலையாமையை நியாயப்படுத்திய
சில மரணங்கள்;
அனுபவிக்காமல் அலட்சியப்படுத்தப்பட்ட
பல அற்புத தருணங்கள்;
எனினும்,
சேருமிடம் அறியாமல்
முடிவைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறது தினங்கள்.

1 comment:

ராமநாதன் said...

மோகன் கவிதை அருமை....

அனுபவிக்காமல் அலட்சியப்படுத்தப்பட்ட பல அற்புத தருணங்கள்;
சேருமிடம் அறியாமல் முடிவைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறது தினங்கள்.

இந்த வரிகள் ஏதோ புரியாத ஒரு உண்மை புலப்படுத்துகிற மாதிரி இருக்கு...