Search This Blog

August 26, 2005

அவர்கள் அப்படித்தான்...

கடந்த 4 மாதங்களாக நியூஜெர்சியில் வசித்து வருகிறேன். நாங்களிருக்கும் அபார்மெண்ட் எதிர் வீட்டில் 3 அமெரிக்கர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் வழங்கும் மாத உதவித்தொகை மூலம் வாழ்பவர்கள்.அரசாங்கமே வீடும் கொடுத்திருக்கிறது. இதுவரை அவர்கள் எங்கும் சென்று நான் பார்த்ததில்லை.நாள் முழுவதும் காலைமுதல் இரவுவரை வீட்டுக்கு வெளியே அமர்ந்து விடுகிறார்கள். ஒரு 'ஆடியோ' சிஸ்டத்தில் சத்தமாக எதாவது பாடல்களை போட்டுவிடுகிறார்கள்.வாயில் எப்போதும் புகைந்துக்கொண்டிருக்கும்.சில நேரங்களில் வழியில் செல்வோரிடம் 'சிகரெட்'டிற்கு கையேந்துவார்கள்.மற்றபடி வேறு தொந்தரவு கிடையாது.
என்னால் கற்பனைக்கூட பண்ணமுடியவில்லை,நாள் முழுவதும் எந்தக்குறிக்கோளும் இல்லாமல் வெறுமென அமர்ந்துக்கொண்டு பொழுதைக்கழிப்பதென்பது மிகவும் கொடுமையான தண்டனையாக தோன்றுகிறது.

இவர்கள் இப்படியென்றால்,அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது.வயதான பெண்மணி,அவருடைய,வேலைக்குப் போகும் பெண்,அந்தப்பெண்ணின் இரு குழந்தைகள்,5-8 வயது இருக்கும். காலையில் அப்பெண் வேலைக்கு கிளம்பிய உடன்,அம்முதியப்பெண்மணி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோகிளம்பிவிடும். சில மணி நேரங்கழித்து கைகளில் விதவிதமான பொருள்களுடன் திரும்புவார்கள்.இது தினமும் நடக்கும்.
ஒருநாள் அலுவலகம் தாமதமாக கிளம்பினேன். வீட்டில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துவிட்டதால்,அவைகளை எடுத்துக்கொண்டு,எங்கள் காலனியில் குப்பைகளைப்போடும்
இடத்திற்கு சென்றேன்.அங்கு நான் கண்டக்காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அந்த முதிய பெண்மணி,குப்பைகளைக் குடைந்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து அரைக்குறையாக பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட பொருட்களை செகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகளையும் பெரிய பெட்டிகளில் குவிந்திருந்த குப்பைகளை கிளற விட்டிருந்தது.தினமும் இப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பதாக,பிறகு சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தார்கள்.
எனக்கு அந்தக்குழந்தைகளை நினைத்துதான் கவலைப்படமுடிந்தது.

2 comments:

Unknown said...

ஹும். இப்படியெல்லாம் சோம்பேறிகள் இருந்தும் இந்த நாடு தனிநபர் வருமானத்திலும் GDPயிலும் கொடிகட்டி பறக்கிறது. இதில் பெரும்பங்கு வெளிநாடுகளிலிருந்து இங்குவந்து வேலை செய்பவர்களினால்.

Anonymous said...

eppadi thhan vazha vendum enrum ninai pavargal oru silaree - unmai udaaranam nee,
eppadi vendumaanulum vazhalam enru irupavargal palar - unmai udaaranam naan!