Search This Blog

Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

March 27, 2006

காற்று(வெளி)வழிக்களவு...

பெண்மணி ஒருவருக்கு அவருடைய 'ஆத்துக்காரரிடம்' இருந்து ஒரு SMS வந்தது. 'டார்லிங்,வழக்கம்போல பேங்க் அக்கவுண்ட் ATM பின்னை மறந்துவிட்டேன்,PIN# SMS செய்'னு வந்தது.ஆத்துக்கார அம்மாவும் நல்லப்பிள்ளையாக SMS பன்னிட்டாங்க....

சாயங்காலம்,நம்ம ஆளு நொந்து நூடுல்ஸ்'ஆக வந்து நுழையும்முன் 'ஒரு பின்நம்பரைக் கூட நியாபகம் வச்சிக்கரதிலையா? எனக்கேட்க.....
அவரோ,'நானே பர்ஸ்,மொபைல் எல்லாம் எவனோ 'பிக்பாக்கெட்' அடிசிட்டானேனு நொந்துபோயிருக்கேன்,,,இப்போ பின்நம்பர் ரோம்ப முக்கியம்' என....

புத்திசாலி(?????)யான பிக்பாக்கேட் பேர்வழி, பர்சிலிருந்த ATM Card பார்த்த உடன் , மொபைலில் இருந்த 'பிக்பாக்கெட்' கொடுத்தவரின் மனைவிக்கு மேற்க்கண்ட SMS அனுப்பி அக்கவுண்டிலிருந்த பணத்தையும் லவட்டிட்டு போய்ட்டு இருக்கான்.

இது அண்மையில் உண்மையாகவே நடந்த சம்பவம்.
ஆகவே மகாஜனங்களே, முக்கியமான விஷ்யங்களை, கணவரே(மனைவியே) ஆனாலும் காற்றுவழியே அனுப்பாதீர்கள்......

October 28, 2005

அவுட்சோர்ஸ்....

http://www.cnn.com/2005/EDUCATION/10/26/tutored.from.afar.ap/index.html

மேலே உள்ள 'link' போய் பாருங்க... படிப்பும் இப்போ 'அவுட்சோர்ஸ்' ஆகுது இந்தியாவிலிருந்து....

September 18, 2005

காதல் வெப்சைட் ஒன்று.....

தலைப்பைப் பார்த்த உடன்,'தல' நடித்த 'தீனா' பற்றி எழுதப்போகிறேன் என எண்ண வேண்டாம்.இது உண்மையிலேயே நிஜக்காதல் ஜோடி அவர்களின் காதல் வளர்ந்தகதையை
இந்த வெப்சைட்டில் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

அவர்களின் முதல் சந்திப்பு,இருவருக்கிடையில் ஏற்பட்ட ஈர்ப்பு,காதல்தீ பற்றிய விதம்,என அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.இ-மெயில் வாயிலாக அவர்கள் காதலை வெளிப்படுத்தியதை அப்படியே வெளியிட்டுள்ளனர்.இந்தவருட இறுதியில் திருமணபந்ததில் இணையப்போகும் இந்த ஜோடியை நீங்களும் வாழ்த்துங்களேன்.

http://sumeetandsubarna.weddingwindow.com - Check it out

May 21, 2005

படித்ததில் பிடித்தது

ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே காதல் என்கிற பூ மலர்வதற்கு முன்பு,நட்பு என்கிற பசுமை நிறைந்த இலைகள் வளர்ந்திருக்க வேண்டும்.நட்பு என்கிற அந்தப் பசுமை நிறைந்த இலைகளின் கிளைகள் நம்பிக்கை.நம்பிக்கை என்ற கிளைகளின் அடிவேர், சுயநலமற்ற தன்மை.சுயநலம் கொண்டவர்களால் காதலிக்க முடியாது; காதலிப்பது போல்நாடகமாட மட்டுமே முடியும்.எல்லா நாடகமும் பொய்களும்,கடைசியில்தோல்வியில்தான் முடியும்.உலகில் நிறைய காதல்கள் தோல்வியுற இந்த நாடகமாடல்தான் காரணம்.

காதலில் மிக சுவாரசியமான விசயம் தன்னைக் காதலித்தவரைப் பற்றி எல்லா விவரங்களும் எவர் மூலமாகவோ தெரிந்து கொள்ள நேருவதுதான். யாரையோ மனதில் பூட்டி வைத்து அவரைப்பற்றி நெகிழ்வாக நினைத்துக் கொண்டிருக்க வேறு எவரோ அருகே வந்து உட்கார்ந்து அவரைப் பற்றி உனக்குத் தெரியுமா? என்று விதவிதமாக காதலிப்பவரின் கல்யாண குணங்களைஅடுக்கிக் கொண்டு போக, அவர் வீட்டு விவரங்களை விவரித்துக்கொண்டு போக மெய்மறந்து கேட்கின்ற ஒரு தன்மை ஏற்படும். இன்னும்தூண்டித்துருவி கேள்விகள் கேட்க ஆசை வரும்.அந்த ஆசைக்கு நல்ல தீனி கிடைத்தால் மனம் இடைவிடாது காதலித்தவரைப் பற்றி யோசிக்கத்தொடங்கிவிடும்.அந்த யோசிப்பு பொங்கி நல்ல கொதிநிலைக்கு வந்து,பக்குவமாய்க் கரைந்து காதலைக் கெட்டிப்படுத்தும். சொல்லப்பட்ட விவரங்கள் லட்சணமாகவும்,சுவையாகவும் இருப்பின் காதலித்தவர் மீதுமதிப்பு அபரிதமாய்க் கூடும்.