"கண்ணுக்கு மை அழகு...
கவிதைக்கு பொய் அழகு"...
பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
'நீ என்னை கவிஞனாக்கிய கவிதை' என்றான் !
'நான் என்ன 'பொய்யா'?? ... அவள் சிணுங்கினாள்...
நீ பொய்யல்ல பெண்ணே! 'உயிர்மை' நீ...
உயிரும் நீ...மெய்யும் நீ...
என் உயிரின் மையமும் நீ !!!