Search This Blog

April 27, 2005

இரயில் பயணங்களில்.....

சென்ற வாரம் சென்னைக்கு செல்ல வேண்டியிருந்தது. ரயில் நிலையத்தில் பயணசீட்டு வாங்க வரிசையில் நின்றுக்கொண்டிருந்தபோது எனக்கு சிறிது முன்னால் இருந்தவரை எங்கோ பார்த்ததுபோல இருந்தது. உற்றுகவனித்தபோதுதான் அது என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த ஒருவர்(ன்) என தெரிந்தது. அப்போது பார்த்ததுக்கும் இப்போதுக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. மிக அடர்ந்த தாடியுடன் நெற்றி முழுவதும் பட்டையும், பெரிய பொட்டுமாக இருந்தான். அவனும் சென்னைக்கே வ்ந்ததால், ஒன்றாக பயணத்தை ஆரம்பித்தோம்.

கிட்டதட்ட ஆறு வருடங்களுக்குப்பிறகு பார்ப்பதால் பேச நிறைய விஷயங்கள் இருந்தது.பிறகு அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். தற்போதைக்கு சென்னையில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் HOD'யாக இருப்பதாகவும், விரைவில் மும்பையில் ஒரு ஆசிரமம் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்தான். மேலும் அவன் சோன்னது என்னவென்றால், " ஒரு 2 வருடம் பொறு மோகன், அதற்குப்பிறகு நீ எங்கிருந்தாலும் என்னைப்பற்றிய செய்திகள் அதிகம் பார்க்கலாம்.மேலும் பல ஆசிரமங்ளை பல இடங்களில் அமைப்பேன். பல நாடுகளுக்கும் விஜயம் செய்வேன்.அப்போது நீ அமெரிக்காவிலேயே இருந்தால் நீ அங்கேயே என்னை சந்திக்கலாம்" என்றான். நான் ஆடிப்போய்விட்டேன். ம்ம்ம்ம்......
நானெல்லாம் ஒரு கம்பெனியில் சேர்ந்து 4 ஆண்டுகள் குப்பைக்கொட்டிய பிறகுதான், அமெரிக்கா எந்த திசையில் இருக்கிறது என தெரிந்தது.
மேலும் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வார இதழில் தொடர் எழுதிக்கொண்டிருந்த ஒரு இளம் சாமியாரைப்பற்றி பேச்சு திரும்பியது. நான் சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து திரும்புவதற்கு சில தினங்களுக்கு முன்னாள் நானிருந்த ஊரில்( டல்லாஸ்) கோயிலுக்கு சென்றிருந்தபோது,மேற்சொன்ன சாமியாரின் பிரசங்கத்தை பார்த்தேன். அப்போது அந்த சாமியாரை வேறு எங்கோ பார்த்த நியாபகம் இருந்தது ஆனால் எஙகேயென்று நினைவில்லை. இதை இந்த சாமியாரிடம்(?????) சொன்னேன். அப்போதுதான் தெரிந்தது, நாங்கள் பாலிடெக்னிக் கடைசி வருடம் படிக்கும்போது(அங்கும் நானும்,ரயிலில் சந்தித்த சாமியாரும் ஒரே க்ரூப்பில் இருந்தோம்) அந்த மற்றொரு சாமியார் முதல்வருட மாணவனாம்.
படிப்பிற்க்குப்பிறகு வேலை செய்யப்பிடிக்காமல், ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து சில வித்தைகளைக் கற்றுக்கொண்டு இப்படி சாமியாராகி பல ஊர்களும்,நாடுகளும் சுற்றிக்கொண்டிருப்பதாகவும்,பல கோடிகள் சொத்து சேர்த்துவிட்டதாகவும் இந்த சாமியார் தெரிவித்தார்.
மேலும் இந்த சாமியார் என்னிடம் சொன்னது " கொஞ்ச நாள் போறு மகனே ! (அடியேனைதான் ;))) நான் அந்த சாமியாரைவிட மிக பெரிய அளவில் பேசப்படுவேன். ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிப்பேன். மிகப்பெரிய ஆசிரமம் ஆரம்பிப்பேன். " என ஏதேதோ சொல்லியப்படி வந்தான்.
கடைசியில் ஒரு வழியாக சென்னையை அடைந்தோம். பிரியும் நேரத்தில் அவன் சொன்னான். " அடுத்தமுறை சந்திக்கும்போது, நான் எந்த ஒரு நிலையிலிருந்தாலும், எவ்வளவுபேர் என்னை சந்திக்க காத்திருந்தாலும், நீ மட்டும் எந்த முன்னறிவிப்புமின்றி, எப்போது வெண்டுமானாலும் சந்திக்கலாம்" எனக் கூறினான்.
அதற்க்கு நான் சொன்னேன், அதைப்பற்றியெல்லாம் நீ கவலைப்படாதே. நானே நீ எந்த ஊரிலிருந்தாலும், நேரில் வந்து, சிறைக்கண்காணிப்பாளரின் முறையான அனுமதியுடன் வந்து சந்திக்கிறேன்' என சொல்லிவிட்டு, விட்டேன் ஜூட் ....

April 25, 2005

அழகிய தீயே...

அவள் ஒரு புரியாத புதிராயிருக்கிறாள்.
நெருங்கினாள் விலகிசெல்கிறாள்....
வில(க்)கலாம் என நினைக்கும்போது
சிரித்து அருகில் வருகிறாள்.

பல நேரங்களில் அமைதியான ஆறாகவும்.....
சில நேரங்களில் சுடும் தீயாகவும்....
அவள் ஆறா ??? தீயா ??? ஆரா தீயா ???
இல்லை என் மனதை கொள்ளைக்கொண்ட
அழகிய தீயா ?

April 15, 2005

காதல் கோட்டை

முதல்நாள் தலைநகர்வலத்திற்கு பிறகு,ஞாயிறன்று ஆக்ரா செல்ல ட்ராவல்சில் டிக்கட் வாங்கியிருந்தேன். ஏ.சி பஸ்ஸில் சொகுசு பயணம்.
பெரும்பாலோர் தென்னிந்தியாவிலிருந்து என்னைபோல் சுற்றிபார்க்க வந்திருந்தவர்கள்.நான்கு மணி நேர பயணம்.
முதலில் ஆக்ரா கோட்டை.மிக பிரமாண்டமான கோட்டை.ட்ராவல்சில் ஒரு கைடை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அந்த கோட்டையின் வரலாற்றை சிறப்பாக எடுத்துரைத்தார்.
ஒளரங்கசீப்,அவர் தந்தையான ஷாஜகானை சிறை வைத்திருந்த மேல்மாடத்திலிருந்து தூரத்தில்(குறைந்தது 2 கி.மீ) தாஜ்மஹால் ஒரு காதல் காவியத்தின் சின்னமாக காட்சியளிக்கிறது. நீங்கள் காதல் அனுபவமுள்ளவரெனில்,கண்டிப்பாக,அந்த இடத்தில் நிற்க்கும்போது ஒரு 'ஆட்டோக்ராப்' புத்தம் புதிய காப்பியாக ஓடும்(எனக்கு எதுவும் ஓடலீங்கண்ணா.....;)))).).
அதற்கடுத்து ஒரு தர்பார் உள்ளது. அந்த காலத்தில் அதுதான் மிகப் பெரிய தர்பார் மண்டபமாம். மண்டபத்தின் எந்த பகுதியிலிருந்தும் மன்னரை பார்க்ககூடிய வகையில் தூண்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.மிக நெர்த்தியான கட்டடக்கலை.அந்த தர்பாரை சுற்றி நான்கு மாடங்கள் உள்ளது.அதில் ராணிகள் அமர்ந்து சபை நடவடிக்கைகளை பார்க்கலாம்.ஒரு அரசனுக்கு ஒரு ராணிதானே,அப்போ எதுக்கு நான்கு மாடங்கள் ? அதற்கு எங்கள் கைடு ஒரு அருமையான விளக்கம் சொன்னார். சட்டப்படி முஸ்லிம் மன்னர்கள் நான்கு ராணிகளை மணந்துகொள்ளலாமாம், ஆளுக்கு ஒரு மாடத்திலிருந்து சபையை கவணிக்கலாம்.மேலும்,சட்டப்படிதான் நான்கு,தேவையெனில் எததனை பெண்களையாவது அரண்மனையில் வைத்திருக்கலாம்.அதற்க்கென்று ஒரு பகுதியே இருக்கிறது..ம்..ம்ம்.....கொடுத்து வைத்தவர்கள். மெலும் ராணிகள் நீராட ஒரு கண்ணாடி அறை இருக்கிறதாம்.அந்த அறை முழுவதும் சிறுசிறு ஆயிரக்கணக்கான கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருக்கிறதாம்.குளிப்பவரின் ஆயிரக்கணக்கான உருவங்கள் அறை முழுவதும் வியாப்பித்திருக்குமாம்..ம்ம்ம்ம்..என்னே ஒரு ரசனை........அந்த அறை இப்போது பார்வையாளர்கள் செல்ல அனுமதி இல்லை.. எந்த ராணிக்கு கொடுத்துவைத்திருக்கிறதோ..மீண்டும் அந்த அறையை உபயோகப்படுத்த......

அடுத்த பயணம், காதல் கல்லறையை நோக்கி....மனம் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன்,உலக அதிசயத்தை நோக்கி பயணம். வெயில் சுட்டெரிக்கிறது...கூட்டம் அலை மோதுகிறது... நுழைவுக்கட்டணம் செலுத்திவிட்டு,கடும் சோதனைகளை முடித்துக்கோண்டு உள்ளே நுழைந்தோம். எட்டிவிடும் தூரத்தில் ஒரு காதல் காவிய சின்னம்.நிதானமாக நடை பயின்று கண்கள் வழியாக அந்த அழகுப்பெட்டகத்தை பருகிக்கொண்டே அருகில் சென்றென்.
உண்மையில் தாஜ்மஹால் ஒரு உலக அதிசயம்தான்.ஒவ்வொரு அடியும்,கலைநயத்துடனும், சிறந்த வேலைபாடுகளுடனும் காதலைக் கலந்து வடிக்கப்பட்டிருக்கிறது. எந்த பகுதியிலிருந்து பார்த்தாலும் ஒரு சிறந்த காட்சியை கண்ணுக்கு விருந்தளிக்கிறது.ஒரு மணி நெரத்திற்கும் அதிகமாக அங்கு சுற்றிவிட்டு, அனைத்து காட்சிகளையும் கேமராவில் சிறைபிடித்து,பிரிய மனமின்றி அங்கிருந்து கிளம்பினோம்.
அடுத்த பயணம், குழந்தை கண்ணன் பிறந்த மதுராவை நோக்கி. ஆக்ராவிலிருந்து 45 நிமிடப்பயணம். மதுராவில் ஒரு குறுகலான பாதை வழியே பயண்ம் சென்று கோயிலிருக்கும் இடத்தை அடைந்தோம். இங்கும் மிக கடுமையான பாதுகாப்பு.எந்திர துப்பாக்கிகளுடன் பார்க்கும் இடங்களில் எல்லாம் போலிஸ் தலைகள்.கோயிலை அடைந்த பிறகுதான் அதற்க்கான காரணம் புரிகிறது.கோயிலை மிக ஒட்டியே ஒரு பிரமாண்டமான மசூதி தெரிகிறது. ஒளரங்கசீப் காலத்தில் மதுரா சிறையை இடித்துவிட்டு எழுப்பப்பட்ட மசூதியென வரலாறு சொல்கிறார்கள்.அடுத்த 'அயோத்'தீ'க்கான சாத்தியகூறுகள் கண்கூடாகத்தெரிகிறது.
கோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணன் பிறந்த சிறைகூடம் மக்கள் கூட்டத்தால்
நிரம்பி வழிகிறது.

மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் கீழே இருக்கிறது ஆக்ராவிலும், மதுராவிலும். ஏழ்மையும்,சுகாதாரமில்லாத சுற்றுப்புறமும், உலக அதிசயம் இருக்கும் இடத்தில், அநியாயமாக இருக்கிறது.
ம்...ம்....இதுதான் இந்தியா.......

April 14, 2005

தலைநகர்வலம்

கடந்த திங்களன்று விசாநீட்டிற்புக்காக டெல்லி செல்ல வேண்டியிருந்தது. சனியன்றே சென்றுவிட்டேன்.அன்று முழுவதும் குதுப்பினார், தாமரை கோவில் , செங்கோட்டை, இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை, பிர்லா மந்திர் ஆகிய இடங்களை சுற்றினேன்.வெயில் குறைவாகவும், ட்ராவல்ஸ் வழியாக கார் ஏற்பாடும் ஆங்கிலம் தெரிந்த ஓட்டுனர் இருந்ததாலும் பயணம் நன்றாகயிருந்தது.
முதலில் குதுப்பினார்.நான் உயரம் மிக அதிகமாகயிருக்கும் என எதிர்பார்ப்புடன் சென்றேன்.ஆனால் ஏற்கனவே மிக உயரமான கட்டிடங்களை இந்தியாவிலும்,அமெரிக்கா,ஜப்பானிலும் பார்த்திருந்ததால் குதுப்பினார் ஏமாற்றமாக இருந்தது. சில போட்டோக்கள் எடுத்துகோண்டேன்.அப்போது அங்கு ஒரு குடும்பம் வந்தது.நான் லேட்டஸ்ட் மாடல் டிஜிட்டல் கேமரா வைத்து இருக்கிறேன்.அதை அந்த குடும்ப தலைவர் போலிருந்தவரிடம் கொடுத்து என்னை குதுப்பினார் முன் இருப்பது போல ஒரு க்ளிக்'க சொன்னேன்.எடுத்து முடித்ததும்,அந்த குடும்பம் முழுவதும் கேமராவை ஆராயத்தொடங்கியது.ஏதேதோ இந்தியில் பேசிக்கோண்டார்கள்.நான் 'பே'வேன முழித்துக்கொண்டிருந்தேன்.(திராவிட ஆட்சிகளின் புண்ணியத்தில் நமக்கு இந்தி நஹி மாலும். ;))
கடைசியில் ஒருவர் என்னிடம் வந்து கேமரா விலையென்ன என்று கேட்டார். இருபதாயிரம் என்றேன். மறுபடியும் ஒரு 'மந்திராலோசனை செய்துவிட்டு, 'எங்களுக்கு எவ்வளவுக்கு தருவீர்கள்' என கேட்டார்.(எல்லாம் இந்தியில்தான்). நான் அரைகுறை இந்தி,ஆங்கிலத்தில் 'இது விற்பனைக்கு நஹி..நஹி...' என சொல்லிவிட்டு கேமராவை வாங்கிகொண்டு வந்துவிட்டேன். நான் அங்கிருந்தவரை, என் பின்னாலேயே வந்து நான் கேமராவில் போட்டோ எடுப்பதை பார்த்துகொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து கிளம்பி தாமரை கோயில், செங்கோட்டையை பார்த்து விட்டு,நேரு,காந்தி சமாதிகளுக்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகைக்கு சென்றேன். இதுவரை தொலைகாட்சியில் பார்த்திருந்த பகுதிகள், நேரில் பார்க்க அருமையாகயிருந்தது.பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி மாளிகை அருகே செல்ல முடியவில்லை(ம்ம்ம்..ம்ம்..நம்ம ஊர்காரர்தான் உள்ளே இருக்கிறார்).காரிலிருந்தே பார்க்கலாம்.அதே நிலைதான் பார்லிமெண்ட் வளாகத்திற்கும்.
மாலையில் பிர்லா மந்திர் கோயிலுக்கு சென்றிருந்தேன்.அங்கும் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம்.மொபைல் போன் கூட எடுத்து செல்ல கூடாது. அதற்கெனயிருக்கும் கவுண்டரில் கொடுத்துவிட்டுதான் செல்ல வெண்டும்.
கோயிலை மிகவும் சிறப்பாகவும்,நெர்த்தியாகவும் கட்டியிருக்கிறார்கள்.அந்த இடம் மனதிற்கு இதமாகவும்,அமைதியாகவும் இருந்தது.

ஒரு நாள் முழுவதும் சுற்றியதில், புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் மிக பெரிய வித்தியாசங்கள் தெரிந்தது. புதுடெல்லியில், அகலமான சாலைகளும்,நெர்த்தியான பாலங்களும், சிக்னல்களும்,வழி முழுவதும் பசுமையாக இருக்கிறது.முக்கியமாக இந்தியா கேட்,ஜனாதிபதி மாளிகை,பார்லிமெண்ட் வளாகம், மந்திரிகள் குடியிருப்பு, அலுவகங்கள்.
புதுடெல்லிக்கும்,பழைய டெல்லிக்கும் நடுவில் ஒரு பாலம் இருக்கிறது.அதை தாண்டிய உடன் ஏதோ வேரொரு உலகத்தில் நுழைந்தது போலிருக்கிறது.
கடினமான போக்குவரத்து,குறுகிய சாலைகள்,பழங்காலத்து கட்டிடங்கள்,குறுக்கும்,நெடுக்கும் ஓடும் மக்கள்....அழுக்கான ந(ர)க(ர)மாக காட்சியளிக்கிறது.
ம்ம்ம்.....இதுதான் இந்தியா.......

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.இல்லத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் பொங்கட்டும்.
அன்புடன்
மோகன்.

April 8, 2005

மந்த்ராலயம்

கடந்த வாரம் வியாழனன்று மந்த்ராலயம் போனால் என்ன என்று தோன்றியது.உடனே KSRTC booking center சென்று அன்று இரவு பஸ்சுக்கு டிக்கட் புக் பண்ணிவிட்டு வந்துவிட்டேன். office'ல் மிச்சம் மீதி இருந்த வேலைகளை முடித்துவிட்டு விடு ஜூட். பயணத்திற்கு தேவையானவைகளை எடுத்துகொண்டு மெஜஸ்டிக் வந்து 9:30 பஸ் பிடித்தேன். வியாழன் என்பதால் கூட்டம் கம்மியாகயிருந்தது.கண்டக்டர் டிக்கெட் மாடி'பிட்டு ஹொஹி'னபிறகு யாருடைய தொந்தரவுமின்றி MP3 ப்ளேயரை காதில்மாட்டிகொண்டு பாலகுமாரன் படிக்க ஆரம்மித்துவிட்டேன்.பேங்களூர்-மந்த்ராலயம் 9 மணி நேரப்பயணம்.இடையே இரண்டு முறை ஏதாவது பொட்டல் காட்டில் டீ,காபி காட்டுவார்கள்.பயணம் ஒன்றும் அந்த அளவிற்கு சிறப்பாக இருக்காது.இப்போதுதான் சாலைகளை அகலபடுத்திகொண்டு இருக்கிறார்கள்.
அரைகுறையாக தூங்கி காலை 630'க்கு வெற்றிகரமாக மந்த்ராலயம் அடைந்தேன்.பஸ் ராய்ச்சூர்வரை செல்லும். மந்த்ராலயத்தில் என்னை தவிர வேறு யாரும் இறங்கவில்லை.என்னை வரவேற்க்க ஒரு பெரிய கூட்டம் காத்திருந்தது.( எல்லாம் லாட்ஜ் ப்ரொக்கர்கள்) ஒரு வழியாக அவர்களிடம் தப்பித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து குளித்துவிட்டு கோயிலுக்கு சென்றேன். கூட்டம் மிக குறைவாகவே இருந்தது.நல்ல தரிசனம்.விரும்பினால் அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலாம்.ஆனால் எல்லா தினங்களிலும் அனுமதிப்பதில்லை.கூட்டம் மிக குறைவாக இருக்கும் தினங்களில் யாரும் கண்டுக்கொள்வதில்லை.1 மணி நேரம் உள்ளே இருந்தேன். அதற்குபிறகு வழக்கமாக அங்கிருந்து 15 KM தூரத்தில் ஒரு கோயிலுக்கு அனைவரும் செல்வார்கள்.எனக்கு இது 4'வது பயணம்.அன்று வெயிலும் மிக அதிகம்.அறைக்கு திரும்பிவிட்டேன்.மாலை மறுபடியும் தரிசித்துவிட்டு சில பொருட்கள் (மற்றவர்களுக்கு கொடுக்க) வாங்கிகொண்டு,அறையை காலி செய்துவிட்டு 8 PM பஸ் பிடித்தேன்.மொத்தத்தில் பயணம் மிக சிறப்பாக இருந்தது.

April 4, 2005

முதல் எழுத்து

வணக்கம்.இது என் முதல் எழுத்து.இங்கு என் வாழ்க்கை பாதையில் எதிர்கொண்ட இனிய/இன்னாத அனுபவங்களை எழுதலாம் என்று இருக்கிறன். உங்கள் ஆதரவு தேவை.சந்திப்போம் விரைவில்.
அன்புடன்
மோகன்.