வானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு
Search This Blog
July 9, 2008
BSNL-நம்பினால் நம்புங்கள்...
மே மாத முதல் இரண்டு வாரங்களில் தினமும் அவர்களை அழைத்து, என் BSNL இணைப்பு புது வீட்டிற்க்கு எப்போது கிடைக்குமென கேட்டுக்கொண்டிருந்தேன். எவ்விதமான பாசிடிவ் பதிலும் இல்லை. சனிக்கிழமைகளில் அவ்வலுவலகத்திற்கே நேரடியாகப் படையெடுக்க ஆரம்பித்தேன். ஒருவழியாக எங்கள் தெருவுக்கு பொறுப்பான லைன்மேனை சந்தித்து எப்ப்போது போன் லைன் கொடுக்கப்போகிறீர்கள் எனக்கேட்டதற்க்கு, உங்கள் வீட்டிற்க்கு 2 முறை வந்தேன்.வீட்டில் யாருமில்லை என விட்டேத்தியாக பதில் வந்தது( என்னுடடைய தாயார் 24*7 வீட்டில்தான் இருப்பார்கள்). வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு, மறுபடி எப்போது வருவீர்கள் என்றதற்க்கு,அடுத்த வாரத்தில் ஏதாவது ஒரு நாள் வருவதாக வரம் தந்தார்.
அந்தவாரம் முழுவதும் போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்ததில் மனமிரங்கி(???) வெள்ளிக்கிழமை இணைப்பு வந்துவிட்டது.வெலையை முடித்துவிட்டு மொய் பணம் கேட்டுள்ளார்,என் தாயார் ரூ 100 கொடுத்தற்க்கு,இவ்வளவுதானா? என நக்கலாக கேட்டுவிட்டு சென்றிருக்கிறார். ஒருவழியாக மே கடைசி வாரத்தில் இணைப்புக்கிடைத்து விட்டது.
நான் வீட்டிற்க்கு வந்து 'Broadband' இணைப்பை சோதித்தால் அது வேலை செய்யவில்லை. மறுபடியும் போன் வழியே படையெடுப்பு.ஒன்றும் நடக்கவில்லை. ஏர்டெல்'க்கு மாறிவிடலாமா என தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது, எங்கள் அலுவலகத்தின் Intranet-forum'ல் ஒரு BSNL e-mail முகவரியை பார்த்தேன்.அந்த முகவரிக்கு புகார் அனுப்பினால் மாயம் நிகழும் என போட்டிருந்தார்கள். சரி முயன்றுதான் பார்க்கலாமே என முழுக்கதையையும் எழுதி அனுப்பினேன்.
இரண்டு நாட்களாக எந்த சத்தத்தையும் காணோம். 3ம் நாள் ஒரு இ-மெயில் வந்தது. "உங்கள் புகார்,பங்களூர் அலுவலகத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் உங்களை தொடர்ப்பு கொள்வார்கள்" என்றிருந்தது. அட்லீஸ்ட் ஒரு பதிலாவது வந்ததேயென வீட்டிற்க்குப் போனால்,அதுநாள்வரை வெலை செய்துக்கொண்டிருந்த போன் 'கோமா' நிலைக்குப்போயிருந்தது.
உள்ளதும் போச்சடா...என்ற எரிச்சலுடன் மறுநாள் படுகாரமாக இன்னோரு இ-மெயிலை தட்டிவிட்டேன். அன்று மதியம் பங்களூர் BSNL அலுவலகத்திலிருந்து போன் வந்தது. ஒரு மொபைல் எண்ணைக்கொடுத்து பேசசொன்னார்கள். முக்கியமான வேலையில் நான் மூழ்கியிருந்தால் அவர்களை தொடர்புக்கொள்ளவில்லை. மறுபடியும் வேறொருவர் BSNL'லிருந்து அழைத்து,மிகவும் மரியாதையுடன் என்ன பிரச்சனை என்று விசாரித்துவிட்டு, நீங்கள் எப்பொது வீட்டிற்க்கு வருவீர்களென கேட்டார்கள். சரி என்னதான் நடக்கிறது பார்க்கலாமென,அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு வருவதாக சொன்னேன். பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு கிளம்பினேன். வீட்டை அடைவதற்குள்,3-4 மிஸ்டு கால். வீட்டை அடைந்து அந்த எண்ணுக்கு கூப்பிட்டு நான் வீட்டிலிருப்பதாக கூறினேன். அடுத்த 5 நிமிடத்தில், 3 BSNL ஊழியர்கள் வந்து, 10 நிமிடத்தில் போன், broadband இணைப்பையும் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.அந்த 3 பேரில், முன்பு வந்த லைன்மேனும் இருந்தார், ஒரு வார்த்தைக்கூட பேசாமல்,இணைப்பைக் கொடுத்துவிட்டு எல்லாம் சரியாக வெலை செய்கிறதா என என்னிடம் ஒருமுறைக்கு இருமுறை சரிப்பார்க்க சொல்லி, மிக மரியாதையுடன் 'நன்றி' சொல்லிவிட்டு (பணம் எதும் கேட்க்காமல்) கிளம்பிச்சென்றார்கள்.
எனக்கு சில நிமிடங்கள் நான் இந்தியாவில்தான் இருக்கிறேனா,இல்லை நடந்ததுயெல்லாம் ஏதாவது பகல்கனவா? என தெரியவில்லை. அடுத்த 2 நாட்கள் அவர்கள் போன் செய்து எல்லாம் ஒழுங்காக வேலை செய்கிறதா எனவேறு விசாரித்தார்கள்.
இந்த மாற்றத்திற்க்கு காரணம் என்னவென்றால்,நான் புகார் அனுப்பிய இ-மெயில் முகவரி, டெல்லியில் உள்ள BSNL உயரதிகாரியின் ID. அவர் அங்கிருந்து பெங்களூர் அதிகாரிக்கு அனுப்பி follow-up செய்ததால்தான் மேற்கண்ட மாயாஜாலங்கள் நடந்தன.
ஒரு 10 நிமிட வேலைக்கு,கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் நேரம் செலவிட்டு இருக்கிறேன். கடைசியாக மேலிடத்தில் புகார் செய்ததால் எல்லாம் விரைவில் முடிந்தது,இல்லையென்றால் இன்னும் எந்தனை வாரங்கள்,மாதங்கள் ஆகியிருக்குமோ?
பின்குறிப்பு : இத்தகவலை,என் நண்பர்களிடமும் சொல்லி,அவர்களும் புகார்களை இ-மெயில் தட்டிவிட்டதில், பெரும்பாலானவர்களின் BSNL பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட்டுள்ளன.
May 26, 2008
இருவர் !!
படம் பார்க்கவேண்டும் என தூண்டியவைகள்,
1.ஒரு (திமுக)கொடியில் பூத்த இருமலர்கள்,வெவ்வேறு துருவங்களாக மாறிய வரலாறு எந்த அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளது ?
2. பாடல்கள் அனைத்தும் எப்போது கேட்டாலும் மிகவும் இனிமையாக இருக்கும்,படத்தில் எந்த இடத்தில்,எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது ?
3. ஐஸ்வர்யா'வின் முதல் படம்
4. மணிரத்னத்தின் இயக்கத்தில்,சமீபத்திய திராவிட வரலாறு எவ்வாறு காட்சிப்படுததப்பட்டிருக்கிறது ?
5. மோகன்லால்,பிரகாஷ்ராஜின் நடிப்பு,நிஜத்துடன் எந்த அளவுக்கு ஒத்துப்போயுள்ளது ?
படம் 'அனைத்து சம்பவங்களும் கற்பனையே' என்ற டைட்டிலுடன் ஓடத்தொடங்கியது. மோகன்லால் படக்கம்பெனிகளில் வாய்ப்பு கேட்பது, சிறு வேடங்களில் நடிப்பது, ஒரு படத்தில் கதாநாயகனாக தேர்வு செய்யப்பட்டு நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் அறிமுகம் ,திடீரென மோகன்லால்,ஐஸ்வர்யா; ப்ரகாஷ்ராஜ்,ரேவதி திருமண நிகழ்வுகள், படபிடிப்பு நின்றுபோவது, ஐஸ்வர்யாவின் காரணமே தெரியாத மரணம், லால் மீண்டும் சிறுவேடங்களில் நடிக்க ஆரம்பிப்பது, ப்ரகாஷ்ராஜின் ரயில் மறியல் போராட்டம், நாசர் கட்சி ஆரம்பிப்பது என ஒரு கோர்வையேயில்லாமல் படம் ஓடிக்கொண்டிருக்கிறது,கடைசிவரை.
என்னுடைய முதல் கேள்விக்கான பதில் கடைசிவரை கிடைக்கவில்லை. எடுத்துக்கொண்ட கால இடைவெளியில் 1940-1987(மோகன்லால்/MGR நடிக்க ஆரம்பிப்பதிலிருந்து, மரணம் அடையும்வரை) ஏகப்பட்ட சம்பவங்கள் 'இருவர்' வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளன. திரைக்கதையில்,எதை எடுப்பது/விடுவது என்ற குழப்பம் இயக்குனருக்கு ஏற்பட்டுள்ளது.அதே சமயத்தில் 'உண்மை சம்பவங்களை' எந்த அளவுக்கு காண்பிப்பது/மாற்றுவது ( முதல் தேர்தல் வெற்றிக்குப்பிறகு,நாசர்(அண்ணா) முதல்வராகாமல், ப்ரகாஷ்ராஜ்(கலைநர்) முதல்வராவது; இரண்டாவது ஐஸ்வர்யாவை(ஜெயலலிதா) விபத்தில் மரணமடைவதாக காண்பிப்பது) என்ற குழப்பமும் தெரிகிறது.மேலும் இவ்விருவரின் வாழ்க்கையின் பெரும்பாலான நிகழ்வுகள், அனைத்துதரப்பு மக்களும் ஆரம்பம் முதல் அறிந்ததே. படம் பார்க்கும் ரசிகன்,ஒவ்வொரு காட்சியையும், கேரக்டரையும், அவனுக்கு தெரிந்த நிஜத்துடன் ஒப்பிடும்போது பெருமளவு ஒத்துப்போகாதது,அவனுக்கு குழப்பத்தையே ஏற்ப்படுத்தி படத்தின் நம்பகத்தன்மை அடிப்பட்டு போகிறது. ஆனால் இந்த நிலைமை 'வீரப்பாண்டிய கட்டபொம்மனு"க்கோ, வீரசிவாஜிக்கோ ஏற்படவில்லை.ஏனெனில்,அவர்களின் வரலாறு நாம் புத்தகத்தில் படித்தோ,அடுத்தவர் சொல்லியோ கேட்டறிந்ததுதான்.படத்தில் அதே வரலாற்றை மிகைப்படுத்தியோ, மாற்றியோ காண்பிக்கும்போது சாதாரண ரசிகன் அதை ஏற்றுக்கொள்கிறான்.
பாடல்களை பொறுத்தவரை 'நறுமுகையே' பாடல் சிறத்தமுறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. மதுபாலா,மோகன்லால் ஜோடியாக நடிக்கும் படப்பாடலை,மோகன்லால்,ஐஸ்வர்யா கல்யாண ஜோடியோடு mix செய்து அருமையாக வந்துள்ளது. 'உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே' (காலேஜ் ஆட்டோக்ராபில் 'கண்மணி' , 'நண்பனாக' மாறிவிட்டது) ஒரு சிறந்த கவிதைநடை.மற்றப்படி 'ஹ்ல்லோ மிஸ்டர் எதிர்கட்சி', 'ஆயிரத்தில் நான் ஒருவன்' பாடல்கள் சிறந்த முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யாவின் முதல் தமிழ்படம்,இருவேடங்களில். 'புஷ்பா' கேரக்டரில் அதிக வேலையில்லை. நடிகையாக,இரண்டாவது வேடத்தில் ரசிக்கும்படியான சில காட்சிகளில் நடித்துள்ளார்.கதாநாயகன் தளத்திற்கு வரும்போது மரியாதைக்கொடுக்காமல் இருப்பது, மோகன்லாலுடன் காதல்வசப்படுவது, கல்யாணத்திற்கு சம்மதித்து அரசியல் காரணங்களால், மணம் புரிந்துக்கொள்ளாத நாயகனை கட்சி அலுவலகத்தில் கேள்விகணைகளால் துளைப்பது, அடுத்த அரசியல்வாரிசாகாமல்(நிஜப்படி) விபத்தில் மறைவது என சொல்லும்படியான காட்சிகள். அவரின் அன்றைய அழகு இன்றுவரை எந்த மாற்றமுமின்றி பொலிவாகயிருக்கிறது.
மோகன்லால்,ப்ரகாஷ்ராஜின் நடிப்பு வழக்கம்போல,எடுத்துக்கொண்ட திரைக்கதைக்கு மிகாமல் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
மொத்தத்தில், 'இருவரின்' சமீபத்திய வரலாறை நன்கு அறிந்த சாதாரண ரசிகனின் (தொண்டன்) எதிர்ப்பார்ப்பை மணிரத்னம் நிறைவேற்றவில்லை.அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாகிவிட்டது.
May 22, 2008
எனக்கு(ம்) விருப்பமில்லை...
வாழ்வின் எந்த நிலையிலும் நம் நட்பை
இழக்க எனக்கு விருப்பமில்லை"
நம் கடைசி சந்திப்பில் நீ உதிர்த்த வார்த்தைகள்,
இன்னும் என்னில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் நீதான் நட்பை விலக்கி,உலகின்
ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துவிட்டாய் !
February 25, 2008
கைக்கடிகாரம்
அவர்கள் பழகிய கடந்தகாலத்தையே காட்டுகிறது,
அவன் பரிசளித்த கைக்கடிகாரம்.
January 21, 2008
முடிவில்லா பயணம்.....
வாழ்க்கை பயணத்தில் ஒரு தடங்கல்...
அலசியபோது அற்புதமாயில்லை
நடந்துவந்த தடங்கள்...
காயப்பட்டிருக்கிறது நேசித்த
சில மனங்கள்;
வாழ்வின் நிலையாமையை நியாயப்படுத்திய
சில மரணங்கள்;
அனுபவிக்காமல் அலட்சியப்படுத்தப்பட்ட
பல அற்புத தருணங்கள்;
எனினும்,
சேருமிடம் அறியாமல்
முடிவைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறது தினங்கள்.
July 2, 2007
சிவாஜி-விமர்சனம் அல்ல...அனுபவம்
1. No Logic.only Rajini's Magic.
2. பாடல்களும் அதை படமாக்கிய விதங்களும் அசத்தல்.எல்லா பாடல்களும் மிகவும் அருமையான sets and location's-ல் அருமையான நடனங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு 'frame'ம் கோடிகளால் செதுக்கப்பட்டுள்ளது.
3.ரஜினி'யை வெள்ளைக்காரராக ஆடவிட்டிருக்கும் பாடல் அசத்தல்.நேற்று 'சன்' டிவி'யில் black 2 white conversion எப்படி சாத்தியமாயிற்று என்று காட்டினார்கள். கமலஹாசன் பல மணி நேரங்கள் மெனக்கெட்டு போடும் 'மேக்கப்' சமாசாரங்களை,டெக்னாலஜி உதவியோடு கலக்கலாக அசத்தியிருப்பது ''cooooool'.
4.ரஜினியின் 3 வித கெட்டப்'களில் அசத்துவது 'மொட்டைதலை' BOSS.அவருக்கு கைவந்தகலையான வில்லத்தனத்தில் மனுஷன் புகுந்து விளையாடிவிட்டார்.
5.ஷ்ரேயா - நன்றாக உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறார். 80 கோடி செலவு செய்தவர்கள்,மேலும் சில ஆயிரங்கள் செலவு செய்து மேலாடையை வாங்கிக் கொடுத்திருக்கலாம்.;))
6. விவேக்- ரொம்ப பேசிட்டப்பா...இனிமேல் 'பொடிப்பசங்க' படத்திலெல்லாம் உமக்கு 'அடி'தான்.
7. சுமன் வில்லன் ரோலில் சமனாகவில்லை.சத்யராஜோ,ப்ரகாஷ்ராஜோ இருந்திருந்தால் அந்த ரோல் நெத்தியடியாக பிரகாசித்திருக்கும்.
8.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 3 மணி நேரத்திற்கு பொழுதை நன்றாகக்கழிக்க ஏற்ற படம்.ரஜினி என்ற மேஜிக் குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை கட்டிப்போடும் என்ற கூற்றை நிரூபித்தது,எங்களுடன் வந்த நண்பனின் 3 வயது மகள்,இப்படத்தை இரவு 10 மணி முதல் 115 வரை தூங்காமல் ரசித்துப்பார்த்தது....
December 28, 2006
உயிர்மை
கவிதைக்கு பொய் அழகு"...
பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.
'நீ என்னை கவிஞனாக்கிய கவிதை' என்றான் !
'நான் என்ன 'பொய்யா'?? ... அவள் சிணுங்கினாள்...
நீ பொய்யல்ல பெண்ணே! 'உயிர்மை' நீ...
உயிரும் நீ...மெய்யும் நீ...
என் உயிரின் மையமும் நீ !!!