தலைப்பைப் பார்த்த உடன்,'தல' நடித்த 'தீனா' பற்றி எழுதப்போகிறேன் என எண்ண வேண்டாம்.இது உண்மையிலேயே நிஜக்காதல் ஜோடி அவர்களின் காதல் வளர்ந்தகதையை
இந்த வெப்சைட்டில் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.
அவர்களின் முதல் சந்திப்பு,இருவருக்கிடையில் ஏற்பட்ட ஈர்ப்பு,காதல்தீ பற்றிய விதம்,என அனைத்தையும் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.இ-மெயில் வாயிலாக அவர்கள் காதலை வெளிப்படுத்தியதை அப்படியே வெளியிட்டுள்ளனர்.இந்தவருட இறுதியில் திருமணபந்ததில் இணையப்போகும் இந்த ஜோடியை நீங்களும் வாழ்த்துங்களேன்.
http://sumeetandsubarna.weddingwindow.com - Check it out
வானவில்லின் பலவண்ணங்கள்போல,வாழ்க்கைப்பயணத்தில் ந(க)டக்கும் பல வண்ண நிகழ்வுகளின் தாக்கத்தால் என்னில் எழும் எண்ணங்களின் தொகுப்பு
Search This Blog
September 18, 2005
September 13, 2005
August 26, 2005
அவர்கள் அப்படித்தான்...
கடந்த 4 மாதங்களாக நியூஜெர்சியில் வசித்து வருகிறேன். நாங்களிருக்கும் அபார்மெண்ட் எதிர் வீட்டில் 3 அமெரிக்கர்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அரசாங்கம் வழங்கும் மாத உதவித்தொகை மூலம் வாழ்பவர்கள்.அரசாங்கமே வீடும் கொடுத்திருக்கிறது. இதுவரை அவர்கள் எங்கும் சென்று நான் பார்த்ததில்லை.நாள் முழுவதும் காலைமுதல் இரவுவரை வீட்டுக்கு வெளியே அமர்ந்து விடுகிறார்கள். ஒரு 'ஆடியோ' சிஸ்டத்தில் சத்தமாக எதாவது பாடல்களை போட்டுவிடுகிறார்கள்.வாயில் எப்போதும் புகைந்துக்கொண்டிருக்கும்.சில நேரங்களில் வழியில் செல்வோரிடம் 'சிகரெட்'டிற்கு கையேந்துவார்கள்.மற்றபடி வேறு தொந்தரவு கிடையாது.
என்னால் கற்பனைக்கூட பண்ணமுடியவில்லை,நாள் முழுவதும் எந்தக்குறிக்கோளும் இல்லாமல் வெறுமென அமர்ந்துக்கொண்டு பொழுதைக்கழிப்பதென்பது மிகவும் கொடுமையான தண்டனையாக தோன்றுகிறது.
இவர்கள் இப்படியென்றால்,அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது.வயதான பெண்மணி,அவருடைய,வேலைக்குப் போகும் பெண்,அந்தப்பெண்ணின் இரு குழந்தைகள்,5-8 வயது இருக்கும். காலையில் அப்பெண் வேலைக்கு கிளம்பிய உடன்,அம்முதியப்பெண்மணி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோகிளம்பிவிடும். சில மணி நேரங்கழித்து கைகளில் விதவிதமான பொருள்களுடன் திரும்புவார்கள்.இது தினமும் நடக்கும்.
ஒருநாள் அலுவலகம் தாமதமாக கிளம்பினேன். வீட்டில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துவிட்டதால்,அவைகளை எடுத்துக்கொண்டு,எங்கள் காலனியில் குப்பைகளைப்போடும்
இடத்திற்கு சென்றேன்.அங்கு நான் கண்டக்காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த முதிய பெண்மணி,குப்பைகளைக் குடைந்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து அரைக்குறையாக பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட பொருட்களை செகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகளையும் பெரிய பெட்டிகளில் குவிந்திருந்த குப்பைகளை கிளற விட்டிருந்தது.தினமும் இப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பதாக,பிறகு சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தார்கள்.
எனக்கு அந்தக்குழந்தைகளை நினைத்துதான் கவலைப்படமுடிந்தது.
என்னால் கற்பனைக்கூட பண்ணமுடியவில்லை,நாள் முழுவதும் எந்தக்குறிக்கோளும் இல்லாமல் வெறுமென அமர்ந்துக்கொண்டு பொழுதைக்கழிப்பதென்பது மிகவும் கொடுமையான தண்டனையாக தோன்றுகிறது.
இவர்கள் இப்படியென்றால்,அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் உள்ளது.வயதான பெண்மணி,அவருடைய,வேலைக்குப் போகும் பெண்,அந்தப்பெண்ணின் இரு குழந்தைகள்,5-8 வயது இருக்கும். காலையில் அப்பெண் வேலைக்கு கிளம்பிய உடன்,அம்முதியப்பெண்மணி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு எங்கோகிளம்பிவிடும். சில மணி நேரங்கழித்து கைகளில் விதவிதமான பொருள்களுடன் திரும்புவார்கள்.இது தினமும் நடக்கும்.
ஒருநாள் அலுவலகம் தாமதமாக கிளம்பினேன். வீட்டில் ஏராளமான குப்பைகள் சேர்ந்துவிட்டதால்,அவைகளை எடுத்துக்கொண்டு,எங்கள் காலனியில் குப்பைகளைப்போடும்
இடத்திற்கு சென்றேன்.அங்கு நான் கண்டக்காட்சி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அந்த முதிய பெண்மணி,குப்பைகளைக் குடைந்துக்கொண்டிருந்தது.அதிலிருந்து அரைக்குறையாக பயன்படுத்தப்பட்டு வீசியெறியப்பட்ட பொருட்களை செகரித்துக்கொண்டிருந்தது.குழந்தைகளையும் பெரிய பெட்டிகளில் குவிந்திருந்த குப்பைகளை கிளற விட்டிருந்தது.தினமும் இப்படித்தான் நடந்துக்கொண்டிருப்பதாக,பிறகு சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது தெரிவித்தார்கள்.
எனக்கு அந்தக்குழந்தைகளை நினைத்துதான் கவலைப்படமுடிந்தது.
August 24, 2005
இன்று போய்..நாளை வா...
நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் இங்கு வரமுடிந்தது. என்ன எழுதலாம் என முடிவு செய்யமுடியவில்லை.எழுதி நீண்ட நாட்கள் ஆனதால் 'டச்' விட்டுப்போச்சினு நினைக்கிறேன்.
முழுபலத்துடன் மீண்டு(ம்) வருகிறேன்....
முழுபலத்துடன் மீண்டு(ம்) வருகிறேன்....
July 14, 2005
ஹைக்கூ-2
சுவைத்தும் கசந்தது...
அவள் கொடுத்த
அல்வா !!!
அவள் கொடுத்த
அல்வா !!!
July 6, 2005
ராஜாவின் திருவாசகம்...
ஊரெல்லாம் ஒரே பேச்சு.யாருடன் தொலைபேசினாலும் 'திருவாசகத்தை' கேட்டீங்களா? என விசாரிப்புகள். ஒரு 'வெப் சைட்டில்' MP3 format'ல் இருப்பதாக ஒரு நண்பன் மூலம் அறிந்து அதை இறக்கி ஒருதடவை ஓடவிட்டேன்.ஆனால் இவ்வாறு செய்ய மனம் குறுகுறுத்தது. மாலையில் 'எடிசனில்' உள்ள வீடியோ கடைக்கு சென்று 15$ கொடுத்து ஒரு CD'யை வாங்கினேன். அந்த கடைக்காரரிடம் 'CD எப்படி போகிறது என விசாரித்தேன்.காலையிலிருந்து நிறையபேர் வந்து வாங்கி செல்வதாகவும்,எதிர்பார்த்ததைவிட ஆதரவு அமோகமாக இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
வீட்டிற்கு திரும்பிய உடன் CD'யை ஓடவிட்டேன்.மொத்தம் ஆறு பாடல்கள்.இனிமையாக ஒலிக்க ஆரம்பித்தது.ஆனால் எதுவும் முதலில் மனதில் ஒட்டவில்லை. நமக்கு 'டப்பாங்குத்து' பாடல்களாகக் கேட்டுக்கேட்டு ரசனையே மாறிவிட்டிருக்கிறது.மேலும் சுத்த தமிழில் பாடல்வரிகள். குறைந்தபட்சம் ஆறு எழு தடவைக்கேட்டால்தான் பாடலின் ஜீவன் புரிந்து ரசித்துருக முடியும் என நினைக்கிறேன்.பார்க்கலாம்.
கேட்டவரையில் 'ஜனனி ஜனனி' ல் இருக்கும் தெய்வீகத்தன்மையும், மனதை உருகச்செய்யும் ராகதேவனின் குரலும் இந்த 'திருவாசகத்தில்' குறைவதாக ஒரு எண்ணம். ஒருவேளை, மீண்டும் மீண்டும் கேட்கக்கேட்க உணரமுடியும் என நினைக்கிறேன்.
வீட்டிற்கு திரும்பிய உடன் CD'யை ஓடவிட்டேன்.மொத்தம் ஆறு பாடல்கள்.இனிமையாக ஒலிக்க ஆரம்பித்தது.ஆனால் எதுவும் முதலில் மனதில் ஒட்டவில்லை. நமக்கு 'டப்பாங்குத்து' பாடல்களாகக் கேட்டுக்கேட்டு ரசனையே மாறிவிட்டிருக்கிறது.மேலும் சுத்த தமிழில் பாடல்வரிகள். குறைந்தபட்சம் ஆறு எழு தடவைக்கேட்டால்தான் பாடலின் ஜீவன் புரிந்து ரசித்துருக முடியும் என நினைக்கிறேன்.பார்க்கலாம்.
கேட்டவரையில் 'ஜனனி ஜனனி' ல் இருக்கும் தெய்வீகத்தன்மையும், மனதை உருகச்செய்யும் ராகதேவனின் குரலும் இந்த 'திருவாசகத்தில்' குறைவதாக ஒரு எண்ணம். ஒருவேளை, மீண்டும் மீண்டும் கேட்கக்கேட்க உணரமுடியும் என நினைக்கிறேன்.
ஹைக்கூ......
சுவைக்காமலே இனித்தது..
அவள் கொடுத்த
கிட்-கேட்.
அவள் கொடுத்த
கிட்-கேட்.
Subscribe to:
Posts (Atom)

